
இரத்தினபுரி – பெல்மதுல்ல வீதியில் உள்ள பதக்கடா சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (06.05.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 28 வயதுடைய தாயும் மகனும் என தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




