சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சூர்யா..!

415

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.இவர் சூர்யா, கார்த்தியின் உறவுக்காரர் ஆவார்.

சூர்யாவின் கால்ஷீட் திகதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் திகதிகள் கொடுத்து படத்தை தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.

அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் திகதிகள் கேட்டு தான் சென்றார்களாம்.

ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர்.

அத்துடன் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம்.

இதற்கிடையே நடிகர் சூர்யாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார்.

இந்நிறுவனத்திற்கு D – Diya, D – Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.