கொழும்பு – வவுனியா ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

425

rainகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பொலிஸ் பிரிவின் பூனேவ பலுகொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 56 வயதான பலுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த நபரொருவரே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.