பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளுக்கு பெற்றோரெ காரணம் – இலியானா ஆவேசம்..!

582

ileanaநண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, பெண்களின் சுதந்திரத்தை பெற்றோரே பறிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பேசுகின்றனர்.

ஆனால் வீடுகளில் பெற்றோர்களோ பெண்களை சுதந்திரமாக வளர விடாமல் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.

ஆண்களிடம் பேசக்கூடாது. ஆண்கள் கேலி பேசினால் அதனை எதிர்க்காமல் தலை குணிந்து போய்விட வேண்டும்.

சிரிக்க கூடாது, முகத்துக்கு நேர் பார்க்க கூடாது என்றெல்லாம் பெற்றோர்கள் பெண்களை நிர்பந்தம் செய்கின்றனர்.

இதனால் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மானபங்கம், பாலியல் பலாத்காரம் என நடக்கிறது.

பெண்களை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைக்காமல் தைரியசாலியாகவும், சுதந்திரமாகவும் வளர விடுங்கள் என்று கூறியுள்ளார்.