தமிழில் நடிக்காதது ஏன்? பாவனா விளக்கம்..!

366

bhavanaதமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா.

ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவனா.

அதன் பின் அவர் காணாமல் போனார். இது குறித்து பாவனா கூறுகையில், சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள்.

மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்து கொண்டிருப்பதால், கன்னட படங்களில் நடிக்க முடிவதில்லை.

இருப்பினும் கன்னட படங்களின் கதைகளை கேட்டு வருகிறேன், நல்ல கதையாக அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

ஏதோ ஒரு கதையில் நடித்துவிட்டு பின்னர் வருந்துவதைவிட நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதால் அதற்காக காத்திருந்து நடிக்கிறேன்.

சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் என்னை பார்த்திருக்க முடியாது. அங்கு அதிக கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள், அப்படி நடிக்க விரும்பாததால் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.