வெளிவருகிறது சிங்கம்-3..!

363

singamநடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோவையில் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு திடீரென்று தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன் பின்பு சூர்யா கூறுகையில், எந்த ஒரு திரைப்படத்திற்கும் 2–ம் பாகம் வந்தால் அந்த படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது.

ஆனால் சிங்கம்–2 படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் ரசிகர்களே ஆவர்.

இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியமைப்பு, வசனம் அனைத்தையும் நீண்டநேரம் யோசித்து படைத்தார்.

அதன் காரணமாகவே படம் வெற்றியடைந்துள்ளது. இயக்குனர் ஹரியுடன் எனக்கு இது 4வது படம்.

ஆனால் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

நல்ல கதையம்சம் அமைந்தால் சிங்கம்–3 பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.