வவுனியா மாவட்ட வாக்கு எண்ணும் பணி துரிதகதியில்..!!

866


vavuniya

இன்று நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 72,056 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 66% ஆகும்.



வவுனியா மாவட்டச் செயலக வளாகத்திற்குள் 16 பிரிவுகளாக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகிறது. 16 பிரிவுகளில் 6 பிரிவுகளில் தபால் மூல வாக்குகளும், 10 பிரிவுகளில் சாதாரண வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் மூல வாக்குகளின் முடிவுகள் 11:45 மணியளவில் வெளியிடப்படுமென எதிர்பர்க்கப்படுவதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அத்தோடு போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருப்பதோடு, கட்சித் தலைவர்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் குவிந்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் தேர்தல் விசேட சேவையுடன் இணைந்திருங்கள்.