வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!

351

robberyவவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று காலை இக்கொள்ளைச் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கடையினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்களால்  கடையில் பொருத்தப்பட்டிருந்தபாதுகாப்பு கமெராவும் (CCTV) கொள்ளையர்களால் சேதப்படுத்தப் பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இக்கொள்ளைச் சம்பவத்தினால் பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் சூரையாடப்பட்டிருக்காலாமென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அண்மைகாலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(சந்தோஷ்)