இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம் -ஆய்வில் தகவல்!!

391

poverty_india

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக, இந்திய திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளி விவரத்தின் படி 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 இலட்சம் பேர் தான் ஏழைகள் ஆவார். இது 2004-05ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 40 கோடியே 71 இலட்சத்தை விட இது குறைவானதாகும்.

அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2%ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9ஆக குறைந்துள்ளது. சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரை படி கிராமப்புறத்தில் தினமும் ரூ.27.20 (இந்திய ரூபாய்) செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை.

அதே போல் நகர்புறங்களில் ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார். சுரேஷ் டெண்டுல்கர் பரிந்துரைபடி ஏழைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.