கண்ணுக்குள் இருந்த ஒன்றரை அடி நீள புழு!!

346

worm

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவரின் கண்ணில் உயிரோடு இருந்த ஒன்றரை அடி நீளமுள்ள புழுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர்.

உடுமலைப் பேட்டையை அடுத்த கோமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கண் வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே வலி அதிகரித்ததையடுத்து பழனிசாமி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அப்போது அவரது கண்ணிற்குள் ஒன்றரை அடி நீளப் புழு ஒன்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக்கேட்டு பழனிசாமியும் அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பழனிசாமியின் கண்ணிற்குள் இருந்த புழுவை வெற்றிகரமாக அகற்றினர்.

இதேபோல் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குதிரையின் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து குதிரைக்கு மருத்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்தக் குதிரையின் கண்ணிற்குள் நீண்ட புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர் ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், குதிரைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டு, குதிரை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.