தெருவோர நாய்குட்டிகளை பிடித்து திரிஷா தத்து கொடுத்தார்!!

310

trisha-dog

நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் தீவிரம் காட்டுகிறார். ஏற்கனவே படப்பிடிப்புக்கு சென்ற போது காரில் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார். அன்று முதல் பிராணிகள் நலனில் அக்கறை காட்டி வருகிறார்.

தெருவோரம் திரியும் நாய்க் குட்டிகளை எடுத்து போய் குளிப்பாட்டி வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். அக்கம் பக்கத்தில் உள்ள பலர் தெருவில் திரியும் நாய்க் குட்டிகளை பிடித்து திரிஷாவிடம் ஒப்படைத்து வருகின்றனர். இப்போது அவர் வீட்டில் நிறைய நாய்க் குட்டிகள் உள்ளன. திரிஷா பிராணிகள் மீது காட்டும் ஆர்வத்தை பார்த்து பிராணிகள் நல அமைப்புகள் அவரை தூதுவராக சேர்த்து பொறுப்புகள் வழங்கியுள்ளன.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் தன்னிடம் உள்ள நாய்க் குட்டிகளை தத்து கொடுக்க திரிஷா சிறப்பு முகாம் நடத்தினார். நிறைய பேர் நேரில் வந்து திரிஷாவிடம் இருந்து நாய்க் குட்டிகளை தத்தெடுத்து சென்றனர்.