வவுனியாவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!

960


weed

வவுனியா நகரை அண்டிய பகுதியில் இருந்து 85 கிலோ நிறைவுடைய கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



வவுனியாவிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 25ம் திகதி வவுனியா நகரிற்கு வெளியே உள்ள காட்டில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் இக்கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதேவேளை இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யபபட்ட ஆறுபேரும் வவுயியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.