திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது..!

332

James-Vasanthanதிரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதாதேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்திருந்தார்.

அதில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை பொலிசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர்.

பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40க்கும் மேற்பட்ட பொலிசார் என் வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர்.

மேலும் எனது பக்கத்து வீட்டில் உள்ள பெண் எனது இடத்தை கேட்டதற்கு நான் தரமறுத்துவிட்டேன். பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு அவர் வேண்டியவர் என்பதால் என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.