ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
நடிகை ராதாவின் மகளான கார்த்திகா பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான்.
அதனால் மகளை பொலிவுட்டில் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதுதான் ராதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது தீவிர முயற்சிக்குப் பலன் கிடைக்காததால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா களத்தில் கார்த்திகா இறங்கினார்.
தற்போது மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் கார்த்திகா அன்னக்கொடி படத்தில் கதைக்கேற்ப கவர்ச்சியாகவும் நடித்தார்.
இனி கிளாமர் விஷயத்தில் அளவுகோல் வைக்கப்போவதில்லை என்று தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் கூறி வரும் கார்த்திகா, பொலிவுட்டில் என்ரி ஆக நேரம் பார்த்து வருகிறாராம்.
இந்தியில் நடித்து மார்க்கெட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் கார்த்திகாவின் பெருங்கனவாம்.