ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவப் போகிறேன் : கனகா பேட்டி!!

674

kanaga

நடிகை கனகா உடல்நிலை பற்றி கடந்த வாரம் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதனால் மனஉளைச்சலான கனகா விளக்கம் அளித்தார். வதந்தி பரவியதற்கு தந்தைதான் காரணம் என்று அவர் வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார்.

இப்போது அவற்றில் இருந்து மீண்டும் சகஜ நிலைக்கு வந்துள்ளார். வீட்டில் நாய், பூனைகளுடன் வழக்கமான வாழ்க்கையை துவங்கியுள்ளார். தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கனகா அளித்த பேட்டி வருமாறு..

நான் இறந்து போனதாக யாரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். சாவை பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லோருக்கும் ஒருநாள் அது வந்தே தீரும். என் அம்மா எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் இறந்த போது மரண வலிகளை அனுபவித்து விட்டேன்.

ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கப் போய் இறந்ததாக செய்திகள் பரவியது. நான் அந்த ஊருக்கு சமீபகாலத்தில் போகவே இல்லை. நான் தனியாக இருப்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். தனிமை பற்றிய சிந்தனையே எனக்கு வந்தது இல்லை. வீட்டில் பூனைகள், முயல்கள், அணில்கள் வளர்க்கின்றேன். அவைகள் என் பக்கத்தில் இருக்கின்றன. இதுபோல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

எனக்கு மனநிலை பாதித்துள்ளது என்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. வீட்டு வாசலில் சாமி படங்கள், தாயத்துக்கள் இருப்பது பற்றியும் பேசுகிறார்கள். கோவிலுக்கு போகும் போது வாங்கி வரும் படங்களை வாசலில் வைத்துள்ளேன். பேய், பிசாசில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன். இவ்வாறு கனகா கூறினார்.