நான் நினைத்ததை முடிப்பவள் – ஐஸ்வர்யா அர்ஜீன்..!

523

vavuniyaநான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன்.

பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது அளவான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக விசால் நடித்துள்ளார், மற்றும் கொமடியனாக சந்தானம் கலக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது திரையுலகம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு திரையுலகில் அனைத்து நடிகர்களுடன் நடிப்பதற்கு ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தனக்கு நடிப்பில் பிடித்தவர் தனது தந்தை என்றும் தான் ஒரு ரகசியமானவள் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மொழிகள் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் தனது நடிப்புத் திறமையினை காட்டுவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்.