ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சண்டையை நிறுத்த வேண்டும்..!

386

vavuniyaபுனித ரமலான் மாத நிறைவையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விடுமுறை கால சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அதன்பின்னர் அதிபர் ஹமீது கர்சாய் பேசியதாவது:-

தலிபான் இயக்கத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு அமைதியான வழியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அப்பாவி பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில், தியாகம் செய்த ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தின்போது சாலையோர குண்டுவெடிப்புகளில் ஏராளமான ஆப்கான் மக்கள் தங்கய் உயிரை இழந்துள்ளனர். இந்த வன்முறை முடிவுக்கு வரவேண்டும். தலிபான்கள், கத்தாரில் அலுவலகம் திறந்ததற்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் ஒரு அலுவலகம் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற நிலையில், தலிபான்கள் மீண்டும் தங்கள் பிராந்தியத்தை பிடிக்க சண்டையை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.