இயக்குனரிடம் திட்டு வாங்கிய பிந்து மாதவி..!!

312

Bindu-Madhavi

ஒழுங்காக நடிக்காமல் 15 டேக் வாங்கி இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார் பிந்து மாதவி. மனம் கொத்திப் பறவை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல், பிந்துமாதவி ஜோடியாக நடிக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்தாலும் குறைந்த காட்சிகளில் மட்டுமே வருவேன்.
ஆனால் தேசிங்கு ராஜா படத்தில் தான் முதன் முறையாக முழு படத்திலும் வருகிறேன்.

இது நகைச்சுவை கலந்த படம் என்பதால் விமலுடன் இணைந்து நடிக்க சிரமப்பட்டேன்.

இதில் பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல் பற்றி விமல் விளக்கும் காட்சியில் “கொட்டை பாக்குக்காக” மோதி கொண்ட கதையை சொல்வார். அவர் கொட்டை பாக்கு என்று வசனம் சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும் 15 டேக் ஆகியும் சீன் சரியாக வரவில்லை.

இதனால் கோபப்படாத இயக்குனர் எழில் செம டென்ஷனாகி விட்டார்.
என் அருகில் வந்து, இப்படியே சிரித்து கொண்டிருந்தால் சீனை முடிக்க முடியாது வெளிச்சமும் போய்விடும் என்று சற்று கோபமாக கூறினார்.

அதன்பின் ஒழுங்காக நடித்து முடித்தேன், அவர் மட்டும் கோபப்படாமல் இருந்திருந்தால் 100 டேக் கூட வாங்கி இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த தேசிங்கு ராஜா 23ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டரில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.