கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொலை!!

682

bear_8

கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு காமெங்க் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் 4வது பட்டாலியன் படைப்பிரிவு முகாமிட்டுள்ளது.

நேற்று இந்த படைப்பிரிவைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 5 பேர் ஜெய்ஜோசா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 5 பேரும் தனித்தனியாக வேட்டையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தூரத்தில் கரடி நடமாடும் சத்தம் கேட்டது.

இதனையடுத்து சத்தம் கேட்ட பகுதியை நோக்கி சுட்ட போது, அங்கிருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.