குடும்பத்தினரை துரத்தி துரத்தி கொலை செய்த தந்தை!!

383

MURDER

தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரையே கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் கொண்ட வேலு இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது மனைவி சின்னமுனியம்மாள்(35), மகள் முத்துச்செல்வி(12) மகன் முனியாண்டி(10) ஆகியோரை அரிவாளால் சரமரியாக வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மனைவி சின்ன முனியம்மாள், மகள் முத்துச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மகன் முனியாண்டி கையில் வெட்டுக் காயங்களுடன் உறவினர் வீட்டிற்கு தப்பித்து சென்றுள்ளான். அங்கும் சென்ற வேலு தன் மகனையும், உறவினரான மூதாட்டி தனலட்சுமியையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து திருச்சி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்பு காயம் அடைந்த முனியாண்டி மற்றும் மூதாட்டி தனலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த சின்ன முனியம்மாள், முத்துச்செல்வி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து வேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.