10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாய்பேச முடியாத சிறுவன்..!

379

arrest1தமிழகத்தில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனும், இதற்கு உடந்தையாக இருந்த அவனது தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூர் பஞ்சாயத்து பெஜலெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன். கடந்த பத்தாண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

இவரது முதல் மனைவி மாதிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி சின்னதாயிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவியின் கடைசி குழந்தையான, பத்து வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள சாமியார் மடம் என்ற இடத்தில், கடந்த ஆறாம் திகதி இறந்த நிலையில் கிடந்தார்.

இறந்து கிடந்த அக்குழந்தையின் முகம், மற்றும் உடலின் சில பாகங்களில் இரத்த காயங்கள் இருந்தன. இதுகுறித்து, பர்கூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிறுமியின் உடல் கோவை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நடந்த உடற்கூறு ஆய்வில் அச்சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து, குரல்வளையை நெரித்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தியூர் பொலிஸார் நடத்திய விசாரணையில், இறந்து போன சிறுமி, சாமியார் நாகராஜ் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி, தொலைக்காட்சி பார்க்க சென்றது தெரியவந்தது.

அங்கு, அதே பகுதியை சேர்ந்த சரியாக வாய்பேச முடியாத 17 வயது சிறுவன், வந்து போனதும், அச்சிறுவன் அக்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரியவந்தது.

தவிர, கொலைக்குப்பின், அவரது தந்தையிடம் நடந்த விபரத்தை சைகை மூலம், அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

அச்சிறுவனும், அவரது தந்தையும் சேர்ந்து, அச்சிறுமியை அப்பகுதியில் உள்ள புதருக்குள் தூக்கி வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் தந்தையையும், மகனையும் தேடிவந்த இந்நிலையில், அச்சிறுவன், தனது தந்தையுடன் பர்கூர் வி.ஏ.ஓ.முனியப்பனிடம் சரணடைந்து, சிறுமியை கொலை செய்தது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்தியூர் பொலிஸார் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதற்கிடையில், அப்பகுதி பொது அமைப்பினர், இச்சிறுமி பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், பொலிஸார் இழுத்தடிப்பு செய்து, வாய் பேச முடியாத, சற்று மனநிலை சரியில்லாத சிறுவன் என்ற ரீதியில் வழக்கை திருப்பி உள்ளனர். உண்மையான நிலையை பொலிஸார் கண்டறிய வேண்டுமென தெரிவித்தனர்.