நயன்தாராவை விட்டு பிரியாத பிரபுதேவா..!

311

nayanபிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகி விட்டாலும் கூட அவரது கையிலிருந்து இன்னும் போகாமல் அடம் பிடிக்கிறாராம் பிரபுதேவா.

நடிகை நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்கும் போது அவருடைய பெயரை பச்சை குத்திக் கொண்டாராம்.

ஆனால் காதலில் பிரிந்துவிட்டாலும், அவருடைய பெயரை மட்டும் நயன்தாராவால் நீக்கமுடியவில்லையாம்.

கையில் குத்திய பச்சையுடன் சென்னையில் ஜெயா பாலாஜி ரியல் மீடியா நிறுவனத்தின் புதிய படத் தொடக்க விழாவுக்கு வந்திருந்தார் நயன்தாரா.

நீளமான கை உடைய ஆடையில் அவர் வந்திருந்தாலும் கூட பச்சை அவ்வப்போது எட்டிப் பார்த்தபடியே இருந்தது.

கோபிசந்த்துடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை ஏவி.எம் பிள்ளையார் கோவிலில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்து கொண்டார்.

அதில் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் நயன்தாராவின் கையில் பளிச்சென தெரிந்த பிரபு என்ற பச்சையையே பார்த்துக் கொண்டிருந்தனராம்.