குழந்தைகளுக்காக பிரபுதேவாவுடன் நடனமாடிய ஸ்ரீதேவி..!

371

srideviசமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஸ்ரீதேவி.

அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் ‘இங்கிலீஷ், விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீதேவி.

தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

மேலும், நடனம் குறித்து அவர் கூறுகையில், நான் பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் நடனமாடுவது கிடையாது. எனக்கு அது வசதியான ஒன்றாக இருக்காது.

சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது கூட என் மகள்களின் கட்டாயத்தால் தான்.

அதிலும் எனது இளைய மகள் நான் நடனமாடுவது குறித்து அதிக ஆர்வமாக இருந்தாள்.

நானும் பிரமாதமாக ஆடினால் போயிற்று என்று பிரபு தேவாவுடன் நடனம் ஆடினேன்.

நான் இதுபோன்று மேடைகளில் நடனமாடுவதை பார்ப்பது இது தான் அவர்களுக்கு முதல் முறை.

இதற்கு முன் நான் இது போன்று மேடைகளில் நடனமாடிய போது அவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள் என்கிறார் ஸ்ரீதேவி.