தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் நடித்துள்ள தலைவா படம் ஒரு சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
படத்தை வெளியிட கோரி நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படம் வெளியாகவில்லை என்றால் நான் கடனாளியாகி விடுவேன் எனவும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காவல்துறை ஆணையரிடம் அனுமதி கோரியும், நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் சந்திரபிரகாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தலைவா பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.