விக்ரமின் புதிய படம் ராஸ்கல்..!

311

vikramவிக்ரம்- தரணி இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேரப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம், தரணி இருவருமே இணை பிரியாத நண்பர்கள் என்பது தமிழ்த் திரையுலகினர் அனைவரும் அறிந்த விடயமே.

‘தில்’, ‘தூள்’ என இரண்டு மெகா வெற்றிகளை கொடுத்த கூட்டணி இவர்களுடையது.

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்.

‘ஏகன்’, ‘வில்லு’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் சறுக்கவே தனது சினிமா தயாரிப்பை நிறுத்திக் கொண்டது ஐங்கரன்.

தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு இருக்கிறது.

ஐங்கரன் மூவிஸ் தயாரிப்பில் விக்ரம், தரணி மீண்டும் இணைந்து ஒரு கமர்ஷியல் காக்டெயில் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘ஒஸ்தி’ படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக இப்படத்தின் கதையினை மெருகேற்றி இருக்கிறார் தரணி.

விக்ரம், தரணி இணையும் இப்படத்திற்கு ‘ராஸ்கல்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

‘ஐ’ படத்தினை முடித்துவிட்டு தரணி இயக்கும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம்.

கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட இதர பணிகளை தற்போது கவனித்து வருகிறார் இயக்குனர் தரணி.