காதல் கல்யாணம் தான் எனக்கு செட் ஆகும் – த்ரிஷா..!

374

thrishaபத்து ஆண்டுகளாக சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளமைக்கு இயக்குனர்களுக்கு தான், நன்றி கூற வேண்டும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்

எனக்கு அமைந்த கதைகள், இரசிகர்களுக்கு பிடித்திருந்தது தான், இதற்கு முக்கிய காரணம். இப்போதும், தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரொம்ப பிசியா இருக்கேன். இதைத் தாண்டி, என் கடுமையான உழைப்புக்கும், இதில் பங்கு உண்டு.

கடந்த, 10 ஆண்டுகளில், 50 படங்களில் நடிச்சிருக்கேன். கில்லி படத்தை பார்த்து, விஜயும், நானும் நல்ல ஜோடி என, பேசப்பட்டது. அப்புறம், சாமி படம் பார்த்து விக்ரம் ஜோடி நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.

இதைத் தொடர்ந்து, விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்திட்டு, சிம்பு நல்ல ஜோடின்னு சொல்றாங்க. இப்படி படங்களும், நாயகர்களும் மாறுவது உண்டு. நல்ல கதை அமைந்தால், எந்த நடிகருடனும், கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட் ஆகும்.

தமிழில் வேணும்னு படம் பண்ணாம இருக்கிறது இல்லை. சரியான கதை அமையவில்லை என்றால், படம் பண்ண மாட்டேன். சும்மா இருக்கலாமே தவிர, லாஜிக் இல்லாத படம் பண்ண விரும்பமாட்டேன், இரண்டு மாதம், மூன்று மாதம் படம் இல்லைனாலும், காத்திருந்து, நல்ல கதை வந்தால் தான் நடிக்கிறேன்.

இதனால் தான், என்னுடைய பெரும்பாலான படங்கள், வெற்றி அடைந்திருக்கின்றன. என்றார்.

மேலும் அவருடைய திருமணம் குறித்து கேட்டதற்கு இந்த வருஷம் தான், கல்யாணம் செய்துக்கணும் இந்த வருஷம் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் எல்லாம், எனக்கு இல்லை. அதில், எனக்கு நம்பிக்கையும் கிடையாது.

எனக்கு, எப்ப சரி என்று படுகிறதோ, எனக்கு பொருத்தமானவர் எப்ப அமைவாரோ, அப்போது உடனடியாக, டும் டும் டும் தான்.

கண்டிப்பாக, காதல் கல்யாணம் தான், எனக்கு செட் ஆகும். நான், கல்யாணம் செய்யும் நபர், என்னைப் பற்றி, தெரிஞ்சவரா இருக்கணும். என்னை, நல்லா பார்த்துக் கொள்பவராக இருக்கணும். இதெல்லாம் நடக்கணும்ன்னா, காதல் கல்யாணம் தான், சரியாக வரும். என்றவரிடம் நீங்க, 3 பிளேட் பிரியாணி சாப்பிடுவீங்களாமே? என்றதற்கு

“உண்மை தான். மூன்று பிளேட் இல்லை; அதுக்கும் மேலே சாப்பிடுவேன். பிரியாணி பிரியை நான். சாப்பாட்டு விஷயத்தில் என்னை யாரும், அடிச்சுக்க முடியாது” என்றார்.