பண மோசடி வழக்கில் இந்திய அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர்.
12 இலட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும், அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது.
அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தீபா விர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின், கர்நாடகாவில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுவரை 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளதாக ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அவற்றை 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதியரசர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தை நாடிய முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா சட்ட சபையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களுக்கும் விலங்குகள் மீது அக்கறை இருந்தாலும் நாய்க்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, தான் சிக்மகளூர் நகராட்சி தலைவராக இருந்தபோது, நாய்களின் உணவில் விஷத்தை சேர்த்து சுமார் 2,800 நாய்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலத்திம் மேல் குழந்தையை வைத்து விட்டு, தம்பதியர் இருவரும் தற்கொலைச் செய்துக் கொள்வதற்காக பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குதித்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில், குஜராத்தில் இருந்து பேருந்தில் வந்திறங்கிய தம்பதியர் கைக்குழந்தையுடன் சிறிது தூரம் நடந்து சென்று, ஒரு பாலத்தின் அருகே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து குழந்தையை பாலத்தில் வைத்து விட்டு திடீரென ஆற்றில் குதித்து விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காட்சிகளை ஆய்வு செய்த போது,
குழந்தையின் தந்தை அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக செல்வதை காட்டுகிறது. அப்போது பாலத்தின் அருகே குழந்தையும், தாயும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பின்னர் அவர் வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தண்ணீரில் குதித்துள்ளனர். இது குறித்து அறிந்த மீட்பு படையினர் உடனடியாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்த போது இரவு நேரம் ஆகியதால் சிறிது சிரமம் ஏற்பட்டது.
அதனால் மறுநாள் காலை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இருப்பினும் தம்பதியர் குறித்து எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை தவிக்க விட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வயது 21 . இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் ரமீசும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த கடிதத்தில் ரமீஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என எழுதியிருந்தார்.
இதனையடுத்து ரமீஸ் மீது தற்கொலைக்குத் தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும்,
அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும், ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் ஏமாந்த நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலையும் அதிகமாக உள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் 35 வயது சையத் வாஹீத் . இவர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி 27 வயது சனா பேகம். இவர்கள் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்கள் குடும்பத்துடன் சமீபத்தில் சையத் வாஹீத் தனது மனைவியின் தம்பியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று இருந்தார்.
ஜூலை 24ம் தேதி அபுதாபி வந்தனர். சையத் மற்றும் சனா ஆகியோர் அமீரகத்தை தங்கள் சொந்த ஊராக கருதி 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் குடும்பத்துடன் அபுதாபியில் வசிக்கும் மனைவியின் மற்றொரு தம்பி வீட்டிற்கு சென்று விட்டு, தான் வசிக்கும் அல் ருவைஸ் பகுதிக்கு சையத் காரில் திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பிறகு அருகில் இருந்த இரும்பு தூணில் மோதி நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சிக்கி சையத் மற்றும் சனா ஆகியோர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வயது ஆண் குழந்தை, பெண் குழந்தைகளான 2 வயது சாதியா மற்றும் 7 வயது சித்ரா பேகம் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பலியான தம்பதியின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. பெற்றோர் உயிரிழந்தது கூட தெரியாமல் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இத்தாலி – லம்பேடுசாவுக்கு அருகில், சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிர் பிழைத்த சுமார் அறுபது பேர் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மேலும் உயிர் பிழைத்தவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதிக சுமைக் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமுற்ற சாரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதேவேளை, விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா,
ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள்
செலுத்தும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று(13) இரவு இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்ட சம்பவத்தால் வீட்டினர் அச்சத்தில் உள்ளனர்.
முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நபர்களில் ஒருவர் வீட்டின் வாசல் கதவுடன் நிறுத்தப்பட்டதுடன் ஏனைய மூவர்களும் கத்தி, வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்டுள்ளனர்.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கிய நிலையில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை, வரக்காகொட பகுதியில் 8 வயது சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் மிக கொடூரமான முறையில் பாலியல் ரீதியான நடத்தைக்கு உட்படுத்திய 15 வயது மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.
இரவில் அவரது தாயார் சிறுமியை குளிக்க வைக்கும் போது சிறுமிக்கு ஏற்பட்ட வலி காரணமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சிறப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடறுப்பு செய்யப்படுவது தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் இந்த ஆண்டு இதுவரை 64 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பல சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும் இதனால் சரியான புள்ளிவிபரத் தரவுகளை வெளியிட முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
64 முறைப்பாடுகள்
ஊடறுப்புக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளின் உரிமையை மீண்டும் பெறுவதற்கு கணனி அவசர பதிலளிப்பு பிரிவினை தொடர்பு கொள்ள முடியும் என சிரேஸ்ட பொறியாளர் சாருக டமுனுபொல தெரிவித்துள்ளார்.
சூம் கூட்ட இணைப்புக்களை கிளிக் செய்ததன் மூலம் இந்த ஊடறுப்புக்களில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
ஹேக்கர்கள் பாதிக்கப்பட்டவரின் வாட்ஸ்அப் குழு உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, அவர்களின் தொழிலைப் பொறுத்து, தொடர்புகளுக்கு பணம் கோரும் செய்திகளை உருவாக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
சூம் கூட்டத்திற்கான அழைப்பு விடுப்பது போன்று பயனர்களின் கணக்கினை ஊடறுப்பு செய்வதாகவும், பயனர்களின் கடவுச் சொல் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ள ஓ.ரீ.பீயை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உதவித் தொகை
ஊடறுக்கப்பட்ட கணக்கின் உரிமையாளர் ஆபத்தில் இருப்பதாகக் கூறி 50000 ரூபா அல்லது ஒரு லட்சம் ரூபா உதவி கோரப்படுவதாகவும், பயனர்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகள் வந்தால் வாட்ஸ் அப் ஊடாக மட்டுமன்றி சாதாரண தொலைபேசி அழைப்பு மூலம் குறித்த கோரிக்கை உண்மையானதா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹெக்கர்களின் கோரிக்கைக்கு அமைய பணம் வைப்புச் செய்தவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்கள் இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் OTP-ஐ மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மூலம் அடையாளம் காணும் நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேண்டுக்கோளை மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் ஆய்வாளருமான வாருணி கேஷலா போகாவத்த விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆண்கள் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, அவற்றை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர் கப்பம் கோரிய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் புறக்கோடை பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பொலிஸ் ஆய்வாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பெண்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் ஆண்கள் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கேட்டால், அவற்றை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.
நீங்கள் அறியாமலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பல பெண்கள், மற்றும் சிறுவர்கள் மிரிஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகிறார்கள். ஒன்லைன் குற்றவாளிகளுக்கு பலியாகாதீர்கள்” என வாருணி கேஷலா மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா கனகராயன்குளம், விஞ்ஞானகுளம் பிரதான பாதையில் இரு தினங்களில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருவர் காயம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனகராயன்குளத்தில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விஞ்ஞானகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில்
சென்று கொண்டிருந்த தே.நிஷாந்தன் என்ற 32 வயது இளைஞனே கனகராயன்குளம் பாலத்துக்கு அருகில் பிரதான வீதியில் வைத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் போது தலையில் காயம் அடைந்த அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றுமுன் தினமும் (12) குறித்த பகுதியில் வயோதிபர் ஒருவர் குறித்த வீதியால் சென்றபோது யானை தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தில் பேராதெனிய பகுதியை சேர்ந்த தர்மசேன குரே (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சொக்லெட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து முதியவரை தமது கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.