நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி, இரு இளைஞர்கள் காட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் 11 ஆம் திகதி அன்று மாலை வீடு திரும்பிய நிலையில், அவரது உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பி வந்த இளைஞரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, அவர் வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன மற்றொரு இளைஞனை தேட, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து 11, 12, 13 ஆகிய தினங்களில் அதிகாலை முதல் மாலை வரை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தும், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல், காணாமல்போன இளைஞனை தேடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் காணாமல் போன வங்கி அதிகாரியின் சடலம் அவரது தாயாரின் கைவிடப்பட்ட வீட்டில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிபில்ல, யல்கும்புர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமானவராகும். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடுமுறையில் தனமல்வில பகுதியில் வங்கி அதிகாரியாக செயற்படும் தனது மனைவியை பார்க்கச் சென்றிருந்தார். பின்னர், பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கும் சென்று அங்கு தங்கியிருந்தார்.
அதன் பிறகு, வேலைக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புக்கு செல்வதாக கூறிய போதிலும், அவர் கொழும்பை சென்றடையவில்லை.
கையடக்க தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், குடும்ப உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி, ராகம மற்றும் பதுளை பொலிஸிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவரது சொந்த ஊரான பிபில்ல பகுதியிலும் அவர் தேடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவரது சொந்த ஊரைச் சேர்ந்த மக்களும் அவரை அந்தப் பகுதி முழுவதும் தேடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவரது சொந்த ஊரில் கைவிடப்பட்ட வீட்டில் நாய் குரைப்பதைக் கண்ட ஒருவர், ஜன்னலைத் திறந்து பார்த்த போது, வீட்டியில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காணாமல் போன இளைஞனின் சடலம் என கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்துறை கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை முச்சக்கரவண்டியுடன் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் நீர்கொழும்பு தழுபத பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் (12) இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான் விபத்தில் AI 171 இருக்கையில் அமர்ந்தவர் உயிரி பிழைத்த அதிசயம் நடத்துள்ளது.
நிலையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அதேபோன்று தாய் ஏர்வேஸ் விபத்தில் சிக்கியபோது 11A இருக்கையில் அமர்திருந்தவர் உயிர் பிழைத்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40), விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
அவசரகால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்திருந்த அவர், விபத்தின்போது விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, காயங்களுடன் தப்பித்துள்ளார்.
“நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்” என்று ரமேஷ் கூறினார். இந்தச் சம்பவம் உலக அளவில் வியப்பையும், 11A இருக்கை மீது ஒரு ராசி இருப்பதாகவும் நம்பவைத்தது.
தாய்லாந்து நடிகர்-பாடகர் ரூங்சக் லோய்சுசக் (47), 27 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1998 டிசம்பர் 11 அன்று, தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளானபோது, அவரும் 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர்.
அந்த விபத்தில் 146 பேரில் 101 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விபத்தில் 11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்ததை அறிந்த ரூங்சக்,
எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்றது மதிய நேரம் என்பதால் ஏராளமானோர் விடுதியில் உள்ள மெஸ்ஸில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் அவர்களை தேடும் பணியில் அவரது மகன் ஈடுபட்டு வருகிறார். விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் விபத்து நடைபெற்ற அன்று தனது 2 வயது பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார். இதில், விமான விபத்து நடைபெற்ற இடம் ஷர்லாபென் தாகூர் இருக்கும் இடம் தான்.
இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என மகன் அஞ்சுகிறார். கட்டட இடிபாடுகளை முற்றிலும் அகற்றினால் தான் எத்தனை பேர் உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவல் தெரியவரும்.
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது!
லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17 ஆம் திகதி, லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் இந்தியாவின் குஜராத்தில் வாழும் அவரது குடும்பத்தினர்.
ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முன்கூட்டியே செல்லலாம் என முடிவு செய்து தாவ்னியின் தந்தை ரஜ்னிகாந்த் பட்டேல், தாய் திவ்யாபென் மற்றும் சித்தி ஹேமாங்கி பென் ஆகியோர் வியாழக்கிழமையே புறப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் பயணித்த ஏர் இந்தியா விமானம்தான் அஹமதாபாதில் விபத்துக்குள்ளானது. அந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்த விமானம் விழுந்த மருத்துவர்களுக்கான ஹாஸ்டலில் இருந்தவர்கள் என குறைந்தது 251 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
பெற்றோர் தனது பட்டமளிப்பு விழாவுக்கு வருவார்கள் என காத்திருந்த தாவ்னிக்கு, அவர்களுடைய மரணச் செய்திதான் கிடைத்துள்ளது.
இந்த செய்தி, இன்னொரு குடும்பத்துக்கும் துயரத்தை உருவாக்கியுள்ளது. ஆம், தாவ்னியின் சித்தியான ஹேமாங்கியும் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
சோகம் என்னவென்றால், ஹேமாங்கியின் கணவர் எட்டு மாதங்களுக்கு முன்புதான் மரணமடைந்தார். ஆக, ஹேமாங்கியின் மகனான பார்த் பட்டேல், தன் தந்தை இறந்து எட்டு மாதங்களில், இந்த விமான விபத்தால் தன் தாயையும் பிரிந்துவிட்டார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் தில்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13.06) இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி படேல் என தெரிய வந்துள்ளது. இந்தியாவிற்கு குறுகிய பயணம் மேற்கொண்டு மீண்டும் கனடா திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
2019ஆண்டில் கனடாவில் குடியுரிமை பெற்ற நிராலி மிசிகாசாவிலுள்ள பல் வைத்தியாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பிரம்டனில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 242 பேர் பயணித்த பயணிகளில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள் ஒரு கனேடியர், 7 போர்துக்கல் பிரஜைகள் ஆகும்.
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள்.
தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.
லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில், தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் பலியாக, பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை பற்றி அறியும் யார் ஒருவருக்கும் மனம் கலங்கத்தான் செய்கிறது.
வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதுவரை வவுனியாவில் செயற்பட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் இல்லாததனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் மீற்றர் பொருத்துவதன் மூலம் நியாயமான கட்டண முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கட்டண திட்டத்தின் கீழ், முதல் கிலோமீற்றருக்கு 130 ரூபாவும் அடுத்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 100 ரூபா என்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்தியா குஜாரத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 274 உயிர்கள் பலியான சம்பவம் இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த துயர விபத்தில் கிய நிலையில், உயிரிழந்தவர்களில், 56 வயதான அனுபவம் வாய்ந்த விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது.
தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி திருமணமாகாத சுமீத், மும்பையில் உள்ள தனது 90 வயது தந்தை புஷ்கராஜுடன் வசித்து வந்தார்.
உடல்நலம் குன்றியிருந்த தன் தந்தையை கவனிக்க, அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்ய போவதாக, விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தந்தையிடம் உறுதியளித்திருந்தாராம்.
சுமீத்தின் குடும்ப நண்பர் லாண்டே என்பவர், என் நண்பன் இறந்ததை நம்ப முடியவில்லை. விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், நான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து முழுநேரமும் உங்களை கவனித்துக்கொள்கிறேன்’ என்று தந்தையிடம் சுமீத் உறுதியளித்தார்.
ஆனால், அதற்குள் இந்தத் துயரம் நடந்துவிட்டது என்று கண்ணீருடன் கூறினார். மகனின் இழப்பால் மனம் உடைந்த தந்தை புஷ்கராஜியால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும்,
அவரது கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருவதாகவும் லாண்டே தெரிவித்தார். அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதி வெடித்துச் சிதறி இருந்தமை துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பேசி கருத்து விடுவது என சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார்.
இவரது வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயம் அதிகமான எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளது, சமீபத்தில் இவர் ஒரு ரவுடி பற்றி பேசி பதிவிட்டிருந்தார்.
அதற்கு அந்த ரவுடி இவரை மிரட்டியுள்ளார். மேலும் ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி பேசி பதிவிட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருந்ததுள்ளது.
இந்நிலையில் கமல் கவுர் தனது வலைதள பக்கத்தில் சிக்கிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி பதிவிட்டுள்ளார். இது சிக்கிய மதத்தை முழுமையாக பின்பற்றி வந்த ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் என்ற இருவரை காயப்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த பதிவை நீக்க கோரி கமல் கவுர் இடம் கேட்டுள்ளனர். ஆனால் கமல் கவுர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனவே இருவரும் தங்களது மதத்தையும், கொள்கையையும் தவறாக பேசிய கமல் கவுரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக கமல் கவுரை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை உண்மை என நம்பிய கமல் கவுரி நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு அழைத்து வர இருவரும் கமல் கவுரி வீட்டுக்கு கார் அனுப்பியுள்ளனர். அதை மறுத்து தனது காரில் வருவதாக கமல் கவுரி கூறிவிட்டு தனது காரில் நிகழ்ச்சி நடப்பதாக சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.
வழியிலே கமல் கவுரியின் காரை மறித்து ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் அவரது காருக்குள் சென்று கமல் கவுரியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
பின்னர் கவுரியின் உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் காரிலேயே வைத்து சுற்றியுள்ளனர். ஒரு தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆகியும் கார் அதே இடத்தில் நின்றிருப்பதை பார்த்த அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் காரின் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது பெண்ணின் அழுகிய சடலம் இருந்துள்ளது.
அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் இறந்தது கமல் கவுரி என்றும் சிக்கிய மதத்தை பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் இருவரால் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்தார்.
அமெரிக்கா தூதரகத்திற்கு உள்ளே பைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதால், அங்கு வருபவர்களின் பைகளை வாங்கி வைத்து, அதற்கு ரூ.1000 கட்டணம் வசூலித்து வந்தார்.
இதன் படி, ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு 20-30 பேர் வருகையில், மாதம் ரூ.8 லட்சம் அளவிற்கு வருமானம் ஈட்டி வந்தார்.
Lenskart நிறுவனத்தின் உயரதிகாரியான ராகுல் ருபானி இந்த விடயத்தை linkedin தளத்தில் பகிர்ந்த பின்னர், இந்த விடயம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இந்த விடயம் வைரலானதையடுத்து, அவரது வருமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த விடயம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது போன்று, தூதரகத்திற்கு வருபவர்களின் தனிப்பட்ட உடமைகளை எந்த அனுமதியுமின்றி பெற்று வைத்திருந்தது சட்டவிரோதமான ஒன்று. பாதுகாப்பு காரணங்களுக்காக தூதரகத்தின் வெளியே வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளனர்.
மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த அந்த நபர், ஒரு சமூகவலைத்தள பதிவின் மூலம் தனது வருமானத்தை இழந்துள்ளார்.
பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த மாணவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் கிவிர ஹிருஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரத்தின் கிளை விழுந்த கட்டிடம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகும்.
காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.