பெண் வைத்தியரின் மரணம் : IT காதலனின் மறுபக்கம் அம்பலம்!!

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய இயன்முறை வைத்திய நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நேற்று (17) பிற்பகல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து சடலத்தை மீட்ட பொலிஸார், அது அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பவருடையது என்பதை உறுதிப்படுத்தினர்.

விசாரணைகளில், உயிரிழந்த பெண் கடந்த ஜூன் 3 முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

அங்குள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் இருந்த அவரை காதலன் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கண்டி கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையே கடந்த எட்டு மாதங்களாக காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், கனடா செல்லும் நோக்கில் பெண் பல்வேறு வழிகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கடனாகப் பெற்று காதலனிடம் வழங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கடன் சுமை காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், காணாமல் போவதற்கு முன்னர் தனது சகோதரர் மற்றும் மருத்துவருடன் தொடர்புகொண்டு மன உளைச்சல் குறித்து தெரிவித்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார், சந்தேகநபரின் மற்றொரு காதலிக்குச் சொந்தமானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபரான தினேத் திஸாநாயக்கவை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை : பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் 33 வயதான ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிரிந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணம் கடனாக பெற்றிருந்தார்.

எனினும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தமையினால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை மீள கோரியுள்ளனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்றாம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டு சென்ற காரில் இருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சந்தேக நபரான காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்றாம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை நுவரெலியா ஹோட்டலில் தங்கியிருந்த காலப்பகுதியில், பல நாட்கள் தான் உணவு கொள்ளவில்லை என அவரின் சகோதரனுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாகி உள்ள காதலனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான காதலனுக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு உலக நாடுகள் அதிரடி கட்டுப்பாடு!!

சிறுவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்கள் குறித்த கவலைகள் உலகளவில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, அவுஸ்திரேலியா முதல் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் வரை பல நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த 2025 டிசம்பரில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ரிக்ரொக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதன்முறையாக அவுஸ்திரேலியா தடை விதித்தது.

இதனைப் பின்பற்றி, பிரித்தானிய அரசு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை அங்கீகரித்து, 2027 வசந்த காலத்தில் அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்து இன்று(18.6.2026) ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் இத்தகைய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த முதல் அரபு நாடு என்ற பெருமையை அமீரகம் பெற்றுள்ளது.

இதர நாடுகளைப் பொறுத்தவரை, சீனா வயது வாரியான திரை நேரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், நோர்வே,

போலந்து, ஸ்லோவேனியா, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க சட்டம் இயற்றி வருகின்றன அல்லது பரிந்துரைத்துள்ளன.

ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்டோருக்கும், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் 13 முதல் 16 வயதுடைய சிறுவர்களுக்கும் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த ஜூன் 1 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கணக்குத் தொடங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

 

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர் : காதலன் தலைமறைவு – வெளியான தகவல்கள்!!

கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரான 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண்ணே 17 ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அவரது காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அந்த பெண்ணின் காதலன் வருகை தந்து சுமார் 40 நிமிடங்கள்

தங்கியிருந்த பின்னர் இரவு சுமார் 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சந்தேகநபரான காதலன் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில்,

தெல்தெனியா பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்தபோது, ​​காரின் முன் இருக்கை மடிக்கப்படாமல், கருப்புத்துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இருவரும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு காதலிக்க தொடங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பெண்ணின் உடலைக்கொண்டு செல்ல பயன்படுத்திய கார், அம்பாறை பகுதியில் வசிக்கும் அவரது மற்றொரு தோழிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணிற்கு பிரேத பரிசோதனை நேற்று தெல்தெனிய வைத்தியசாலையில் சிறப்பு தடயவியல் வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், அவரது உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணத்தினை வங்கி மற்றும் பல தனிநபர்களிடமிருந்து கடனாக பெற்றிருந்த நிலையில்,

இதுவரை வெளிநாடு செல்லாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணம் கேட்பதால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், அவர் ஜூன் 3 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து தனது சகோதரரை தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக சாப்பிடவில்லை என்றும்,

அம்பாறை வைத்தியசாலையில் உள்ள ஒரு மனநல வைத்தியரை அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்குள்ள மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைக்காக ஒரு மனநல வைத்தியரை அணுகுமாறு அவரிடம் கூறியதாகவும்,

16 ஆம் திகதி மாலை சுமார் 4 மணிக்கு மேல் அவரது கைபேசி அணைக்கப்பட்டிருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரது காதலன் தினெத் திசாநாயக்கவை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், நுவரெலியா பிரிவின் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சமரக்கோன் பண்டாவின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

 

இலங்கையில் இன்று இருமுறை குறைந்த தங்கத்தின் விலை : மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 391,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9,000 ரூபாயால் குறைந்தது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 382,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தங்கவிலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது. அதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்களின்படி

தங்கத்தின் புதிய விலை விபரங்கள்

24 கரட் தங்கம் (ஒரு பவுண்) ரூ. 380,000

22 கரட் தங்கம் (ஒரு பவுண்) ரூ. 349,600 கிராம்

24 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 47,500

22 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 43,700

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் தொடர்ந்தும் மாற்றங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண்!!

ஆயுர்வேத வைத்தியர் போல் நடித்து பொது மக்களிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாய் மோசடி செய்த சட்டவிரோத வைத்தியர் ஒருவர் ஹொரணை பிரதேச சிறப்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண், 53 வயதான திருமணமாகாதவர் என்றும், இவர் பூர்வீகமாக கிரிபாவா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் ஹொரணை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, அவர் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து, அவற்றில் மருத்துவ சின்னத்தை பொருத்தி, பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

பல்வேறு நோய்களுக்காக வெளிநாடுகளிலிருந்து சிறப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதாகக்கூறி நோயாளிகளின் நம்பிக்கையை பெற்று இந்த நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்படாத தரம் குறைந்த மருந்துகளையே அவர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட மருந்து கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துவிட்டதாகவும், அவற்றை விடுவிக்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கம்பஹா, மதுரவளை, மில்லனியா, பண்டாரகம, ஹொரணை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் இந்த வழியில் பணத்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது மருத்துவ தகுதிகள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இலங்கை மருத்துவ சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சபையிடம் விசாரணை நடத்தியதில், அவர் எந்தவொரு மருத்துவ சபையிலும் பதிவு செய்யப்படாத ஒரு போலி மருத்துவர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்க்கு என்ன ஆனது என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், சந்தேகநபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்து விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

தெல்தெனிய சடலம் மீட்பு : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிசார்!!

தெல்தெனியவில் வாகனமொன்றினிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணின் காதலனான,

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் இருந்தால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, 071 8591096 உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா 071 8591097 தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து நேற்று (17) மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்,

நுவரெலியாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் இரண்டு முறை தங்கியிருந்தமை நுவரெலியா பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரியவருகிறது.

பெண்ணின் காதலனான சந்தேகநபர் 02ஆம் திகதி அந்த இளம் பெண்ணுடன் விடுதிக்கு வந்து, 10ஆம் திகதி விடுதியிலிருந்து வெளியோறி சென்றுள்ளார் பின் 16ஆம் திகதி அந்த இளம் பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு வந்துள்ளார்.

அத்துடன் 17ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில், சந்தேகநபர் வாடகைக் காரில் விடுதிக்கு வந்து, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து,

தனது காதலியை ஏற்றிக்கொண்டு, விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி, அந்த இளம் பெண்ணைக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் குறித்து விடுதிப் பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வருபவரும் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான பி.ஆர்.ஷ்யாமா தர்ஷனி,

2023 முதல் மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரது காதலரான, கண்ணொரூவாவைச் சேர்ந்த 35 வயதான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைபேசியால் விபரீதம் : மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

கர்நாடக மாநிலத்தில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கடுமையான அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு பயங்கரக் கொலைச் சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் அவரது 23 வயது மனைவி யோகினி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

யோகினியின் நடத்தை மீது கணவர் கணேஷுக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகங்கள் இருந்து வந்ததே இந்த விபரீத மோதல்களுக்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் யோகினியின் கைபேசிக்கு வந்த ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் சண்டை முற்றிய நிலையில், ஒட்டுமொத்தமாக ஆத்திரமடைந்த கணேஷ் அங்கிருந்த கட்டையை எடுத்து வந்து தன் மனைவி யோகினியை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளம்பெண் ம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், யோகினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணவன் கணேஷை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கோவை கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரமுகர் செந்தில்குமாரின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார்.

பிளஸ்-2 முடித்துவிட்டுத் தொடர்ந்து முயற்சித்து வந்த அவர், கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வையும் மிகுந்த நம்பிக்கையுடன் எழுதியிருந்தார்.

ஆனால் வடமாநிலங்களில் நடந்த முறைகேடுகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வருகிற 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு திடீரென அறிவித்தது.

ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் போதிய மதிப்பெண் கிடைக்காத கவலையில் இருந்த அனுகீர்த்தனா, இந்த திடீர் மறுதேர்வு அறிவிப்பால் கடுமையான மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் ஆளாகியுள்ளார்.

மீண்டும் தேர்வை எதிர்கொள்ளப் பயமாக இருப்பதாக உறவினர்களிடம் கூறி வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை 2 மணிக்குத் தனது நெருங்கிய உறவினர்களுக்கு ‘நான் வாழ விரும்பவில்லை’ என வாட்ஸ்-அப் வழியாகத் தகவல் அனுப்பிவிட்டுத் தைலத்தைக் குடித்து விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தகவலறிந்து ஓடிவந்த பெற்றோர் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி அனுகீர்த்தனா படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நுழைவுத் தேர்வு பயத்தால் இளம் மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டகிராமால் விபரீதம் : ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள ஒரு கிராமத்தில் சமூக வலைத்தளம் மூலம் உருவான காதல் விவகாரத்தில், எதிர்பாராத ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடர் பழக்கமானது நாளடைவில் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான காதலாக மாறி, இருவரும் தங்களின் புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தீவிரமாகப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பெண் திடீரென இளைஞருடன் பேசுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டதுடன், தங்களின் காதல் விவகாரத்தை முறித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் வேறொரு வாலிபரைத் திருமணம் செய்து கொள்ள முழுமையாகத் தயாராகி வருவதை அறிந்த காதலன், கடுமையான மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளார்.

தனது காதல் தோல்வியடைந்ததால் ஒட்டுமொத்தமாக விரக்தியடைந்த அந்த இளைஞர், நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் படுக்கையறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை இளைஞர் அறையில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மைசூரு காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமூக வலைத்தளக் காதலால் இளைஞர் ஏமாற்றமடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் : வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, அது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக பணிப்புரை விடுத்துள்ளது.

பொதுமக்களினால் வடமாகாண ஆளுநருக்குப் புகார் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அக் கடிதத்தில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் முறையற்ற நிதி நிர்வாகம் காரணமாக பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறித்த பிரதேச சபை நிர்வாகத்தின் மீது பிரதானமாக இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி இதில் சபைக்குத் தேவையற்ற வகையில், ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மக்கள் பணத்தை வீணடித்தமை மற்றும் CCTV கண்காணிப்பு கேமராக்களை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் மற்றும் பாரிய நிதி விரயம் இடம்பெற்றமை தொடர்பில் முறைகேடு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இப் முறைப்பாட்டு மனுவை ஆராய்ந்த கௌரவ வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர் செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது.

இதன்படி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் மற்றும் உதவிச் செயலாளர் க.ஏகாந்தன் ஆகியோரின் கையொப்பங்களுடன், 2026.05.29 அன்று ஆளுநர் செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விபரங்கள் குறித்து உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் நிதி பயன்பாடு குறித்து ஆளுநர் செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை வவுனியா அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!!

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகத்தின் பிரதேசசெயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித் தடை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து,பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி : வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கண்டி மாவட்டம், பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று(17) புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பன்விலை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று மாலை மேற்படி யுவதியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அந்த யுவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர், வெளியில் சென்றிருந்த பெற்றோர் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய போதே, மகள் கட்டிலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சடலம் மீட்கப்படும் போது அந்த யுவதியின் வாய்ப் பகுதியில் இருந்து அதிகளவில் இரத்தம் வெளியேறியிருந்தது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுவதியின் மரணத்தில் பலத்த சந்தேகம் காணப்படுவதால் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

காதலனுடன் விடுதிக்கு சென்ற பெண் மருத்துவர் காரில் சடலமாக மீட்பு : CCTV காட்சிகளால் பொலிசார் அதிர்ச்சி!!

நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தனது காதலனுடன் நுவரெலியாவிற்கு அண்மையில் வருகைதந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந் நிலையில் திடீரென்று (16) செவ்வாய்க்கிழமை விடுதியிலிருந்து இரவு 10:30 மணியளவில் பெண்ணை தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்வது விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.

கேமரா காட்சியை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வெலிகம பகுதியை சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி (மருத்துவர், 33 வயது) மற்றும் கன்னொருவ பகுதியை சேர்ந்த அவரது காதலரான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க (35 வயது) ஆகியோரும் நுவரெலியாவிற்கு கடந்த மூன்றாம் திகதி நுவரெலியாவிற்கு வருகை தந்து குறித்த தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

அதன் பின்னர் அவர்களுக்கிடையில் ஏதோனும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்து தங்கியிருந்த தனியார் விடுதியிலிந்து மீட்டு காரில் ஏற்றிச் சென்று கண்டி – தெல்தெனிய பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்கு வருகைதந்த ஆண் சந்தக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியில் சம்பவ இடத்திலுள்ள தடயங்கள் ,

சிசிடிவி (CCTV) காட்சிகள் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெற்று தொலைபேசி அழைப்புத் தரவுகளை சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருக்கு போராடிய கொக்கிற்காக வாழ்வை துறந்த இலங்கையர் : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் குளத்தில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்கி குளத்தினுள் தத்தளித்துக்கொண்டிருந்த கொக்கு ஒன்றை காப்பாற்ற முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேபட குளத்தில் நபரொருவர் நீரில் மூழ்கியுள்ளதாக நேற்று (16) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்

பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் நிக்கவெரட்டிய, திவுல்லகொட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேபட குளப்பகுதியில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்குண்டு பறக்க முடியாமல் கொக்கு ஒன்று குளத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது.

இதனை அவதானித்த குறித்த நபர், மேலும் சிலருடன் இணைந்து அந்த கொக்கை காப்பாற்றுவதற்காக குளத்தினுள் இறங்கியுள்ளார்.

இதன்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையை புகழ்ந்து பாராட்டும் வசீம் அக்ரம்!!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இலங்கையின் இயற்கை அழகையும், தமக்கு இந்த நாட்டுடன் இருக்கும் பல தசாப்த கால பிணைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்திருந்த போதிலும், தமக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை எப்போதும் இருந்து வருவதாக அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

தமது பயணங்களின் போது தாம் கண்டவற்றில் இலங்கையின் இயற்கை நிலப்பரப்புகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவை மிகவும் அழகானவை என வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏன் இன்னும் உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை என்பது குறித்துத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 1985ஆம் ஆண்டில் ஒரு இளைஞனாக முதன்முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிட்ட அக்ரம், அதன் பின்னர் ஒரு வீரராக, வர்ணனையாளராக மற்றும் சுற்றுலாப் பயணியாகப் பலமுறை இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் வழக்கமாக வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை மேலும் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் வசீம் அக்ரம் மேலும் கூறியுள்ளார்.