பாடசாலை மீது விழுந்த மரத்தின் கிளை : உயிரிழந்த மாணவர் தொடர்பில் வெளியான தகவல்!!

பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த மாணவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பலாங்கொட, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் கிவிர ஹிருஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரத்தின் கிளை விழுந்த கட்டிடம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகும்.

காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு : காருக்கு தீ வைத்த கணவன் கைது!!

கொழும்பு – பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (12.06.2025) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ள நிலையில் காருடன் தனது உடலில் தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

பின்னர் இவர் சிறிது நேரத்தில் காரில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் காரில் பரவிய தீயை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் காரானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோர விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11.06.2025) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பரகொட, அலுதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து 41 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏர் இந்தியா விபத்து : லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை : அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள்!!

இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது இறந்த மனைவியின் அஸ்தியை உள்ளூர் ஆற்றில் கரைக்க சென்றிருந்தார்.

படோலியாவின் மனைவி பாரதிபென் ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் பரிதாபமாக இறந்தார். அவரது இறுதி ஆசை என்னவென்றால், ஒரு மலர் கலசத்தில் அவரது அஸ்தி இந்தியாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான்.

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற இந்தியா திரும்பிய படோலியா, தனது கிராமத்தில் உறவினர்களுடன் பல இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, வியாழக்கிழமை தனது இரண்டு மகள்களைப் பார்க்க லண்டனுக்குத் திரும்பத் தயாரானார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பயணித்த ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், படோலியாவின் நான்கு மற்றும் 8 வயது பெண் பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமானது புறப்பட்டு சில நிமிடங்களில், உள்ளூர் நேரப்படி 1.40 மணியளவில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும், ஒருவர் தவிர மரணமடைந்துள்ளனர்.

229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இறந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட பிறகு மிக முக்கியமான கட்டத்தில் திடீரென அதன் கட்டுப்பாட்டு விசைகள் செயலிழந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கான சாத்தியமான காரணங்களாக கூறப்படுவது, காற்றில் ஏற்படும் விரைவான மாற்றம், இயந்திரம் நின்று போவது அல்லது இரண்டு இயந்திரங்களிலும் பறவை மோதிக் கொள்வது ஆகியவை அடங்கும்.

விமான விபத்து : வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழந்த சோகம்!!

லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நேற்று மதியம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது, ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்.

இவர்களில் கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா நாயர் என்ற பெண்ணும் ஒருவர். கேரளாவின் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர்(வயது 39), இவர் ஓராண்டாக லண்டனில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக கேரளா வந்த ரஞ்சிதா நாயர், லண்டனுக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பலியானார், இச்சம்பவம் அவரது உறவினர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய் பேச்சு!!

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில் “எனது மகன் மதிய உணவு இடைவேளையின் போது விடுதிக்குச் சென்றிருந்தார்.

விமானம் அங்கே விபத்துக்குள்ளானது. என் மகன் பாதுகாப்பாக இருக்கிறார், நான் அவனிடம் பேசியுள்ளேன். அவன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தான், அதனால் அவனுக்கு சில காயங்கள் ஏற்பட்டன” என்று ரமிலாபென் கூறினார்.

மேலும், தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்த பலர் பகிர்ந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி : 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி?

அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

அதற்கு காரணம் அவர் அமர்ந்திருந்த 11ஏ இருக்கை தான். இந்த இருக்கையானது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்து ஜன்னலுக்கு அருகில் இருக்கும்.

இந்த இருக்கைக்கு இடைவெளி அதிகமாக இருக்கும். மேலும், அவசர கதவுக்கு அருகே இறக்கைக்கு பக்கத்தில் இருக்கும்.

இது விமானத்தின் பலமான பகுதியாக இருப்பதால் விபத்து நடைபெறும் போது இந்த இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் விரைவில் தப்புவதாக நம்புகிறார்கள்.

நிபுணர்களின் கருத்துப்படி, அவரச கதவுக்கு பக்கத்தில் இருக்கும் 5 இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏனென்றால், அவசரம் என்றால் உடனே வெளியேற முடியும்.

விமான விபத்தை பொறுத்தவரை உயிர் பிழைப்பது என்பது விபத்தை பொறுத்து தானே தவிர, இருக்கையை வைத்து அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, 11ஏ இருக்கை இறக்கை பகுதி பலமாக இருந்ததால் சேதமடையாமல் உடைந்திருக்கிறது. அதன் வழியாக அவர் குதித்துள்ளார்.

மாம்பழ பிரியர்களா நீங்கள்? மறந்தும் கூட மாம்பழத்துடன் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் பல அடங்கியதும் கூட. இது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகளை பயக்கக் கூடியது.

எனினும் சில உணவுகள் சாப்பிட்டபின், அல்லது சில உணவுகள் சாப்பிடும் போது மாம்பழத்தை சாப்பிடுவது, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

பப்பாளி

மாம்பழத்துடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. வாந்தி குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் தூண்டலாம். இதனால் சுவாசம் தொடர்பான உடல்நல கோளாறுகள் ஏற்படும் பாதிப்பு உண்டு.

குளிர்பானங்கள்

அப்பளம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதோடு, குளிர் பானங்களில் இருப்பதெல்லாம் சர்க்கரைகளும் பிசிர்வேட்டிர்களும் மட்டுமே. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே பொதுவாக இதனை தவிர்ப்பது நல்லது.

தயிர்

மாம்பழம் சாப்பிட்ட பின் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

தயிரும் மாம்பழமும் சேர்ந்த தயிர் லஸ்ஸி போன்ற பானங்களை பலர் அருந்துகின்றனர் என்றாலும், இதனால் செரிமான பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகற்காய்

கசப்பு தன்மை கொண்ட பாகற்காய், நீரழிவு முதல் பல விதமான உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

அதேபோன்று மாம்பழமும் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் நிறைந்தது சிறந்த பழம். ஆனால் பாகற்காய் சேர்த்த உணவுகளை சாப்பிட்ட பின் மாம்பழம் சாப்பிடுவதால்,

இரண்டு சிறந்த உணவுகளையும் நன்மைகளையும் பெற முடியாமல் போகலாம். அஜீரண கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கக்கூடும்.

கார உணவுகள்

அதிக காரம் கொண்ட உணவுகளுடன், மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும். இதனால் நெஞ்செரிச்சல், போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாம்பழம் சாப்பிடுவதற்கான சரியான முறை

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன், அதனை 30 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

இதனால் உடலுக்கு அது சூட்டை கொடுக்காமல் இருக்கும். கோடைகாலத்தின் மிகச்சிறந்த பழமான மாம்பழத்தை இவ்வாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய பலன்களை முழுமையாக அடையலாம்.

அதோடு அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். எனவே அளவோடு சாப்பிடுவதால், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம்.

 

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 24 வயது இளைஞனின் மரணம் : தீவிரமாகும் விசாரணைகள்!!

நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து,

பெல்மடுல்லை நோனாகம வீதியின் கொஸ்வெட்டிய பகுதியின் வீதியில் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடகவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வியாழக்கிழமை (12.06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொடகவெல அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

தந்தை கண் முன்னே கொல்லப்பட்ட 23 வயது மகன் : மது விருந்தால் வந்த வினை!!

களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 51 வயதுடைய தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விருந்தில் காயமடைந்த தந்தையின் சகோதரர்களில் ஒருவருடன் நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி, பின்னர் வேறு பகுதியில் மற்றொரு வாக்குவாதத்தைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த இளைஞனும் காயமடைந்த நபரும் வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளனர்.

வாக்குவாதத்தை தொடங்கிய மற்றொரு நபர் கூர்மையான ஆயுதத்தால் தந்தை மற்றும் மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பிரேத அறை மேலும் விசாரணையின் போது, ​​காயமடைந்தவர்களை களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தபோது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். உடல் களுத்துறை நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் பலியான தாதி : கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்!!

புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பத்தனம்திட்டாவின் திருவல்லா புல்லாட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (38). இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சில ஆண்டுகள் ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதாவுக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்தது.

கேரளாவில் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்ற கனவோடு கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்று வேலையில் சேர்ந்தார். தற்போது ஊரில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால் அதனை கவனிக்க விடுமுறை எடுத்து கேரளாவுக்கு திரும்பினார்.

இந்த சூழலில், ரஞ்சிதாவுக்கு கேரளா சுகாதார துறையில் செவிலியர் வேலையும் கிடைத்தது. அரசு வேலையில் சேர தயாரான ரஞ்சிதா இங்கிலாந்துக்கு சென்று வேலை ஒப்பந்தத்தை முறைப்படி முடித்து கேரளா திரும்ப இருந்தார்.

இதற்கான லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.

இது தவிர விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த 50 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பயணிகளில் ரஞ்சிதாவும் ஒருவர். விமான விபத்துக்கு பிறகு ரஞ்சிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தாய் இன்று லண்டனுக்கு சென்று திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நம்பி பள்ளிக்குச் சென்றிருந்த இரு பிள்ளைகளையும் உறவினர்கள் சென்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் ரஞ்சிதாவின் மரணத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அதை கேட்ட குழந்தைகள் கதறி அழுதனர். இதனால், செவிலியரின் இல்லம் அமைந்திருந்த திருவல்லா புல்லாட் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

வீட்டு வேலை முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் லண்டன் சென்று திரும்பியதும் மீதி வேலைகளை விரைவாக முடித்திட எண்ணியிருந்த ரஞ்சிதாவை மரணம் இழுத்து சென்றுவிட்டது.

சொந்த வீடு கனவு இன்னும் சில நாட்களில் நிறைவேற இருந்த நிலையில் அந்த புது வீட்டுக்கு ரஞ்சிதாவின் உடல் மட்டுமே வந்து சேர போகிறது.

விமானத்துடன் சேர்ந்து சுக்குநூறாகி போன ஒரு குடும்பத்தின் கனவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க லண்டனுக்கு புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பிரதிக் ஜோஷி ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். தனது மனைவி மற்றும் மூன்று இளம் குழந்தைகளுக்கு லண்டனில் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக அவருக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது.

பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பிறகு, அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதிக் ஜோஷியின் மனைவி கோமி வியாஸ், லண்டனுக்கு புறப்படுவதற்காக தனது மருத்துவ பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து, நேற்றையதினம்(12) ஏர் இந்தியா விமானத்தில் அவர்கள் ஏறி ஒரு புகைப்படம் எடுத்து அதனை மகிழ்ச்சியாக உறவினர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

எனினும், துரதிஷ்டவசமாக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். லண்டனில் புதிய வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களது கனவு விமானத்துடன் சேர்ந்தே நொறுங்கிப்போனது.

அகமதாபாத் விமான விபத்து : இறுதி நேரத்தில் உயிர் தப்பிய இளம்பெண்!!

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1.39இற்கு 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில செக்கன்களில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தார்.

இந்த நிலையில் பூமி சௌஹான் என்ற பெண், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார். எனினும், அவர் செல்ல இருந்த விமானம்தான் பெரும் விபத்தில் சிக்கியது.

முன்னதாக, விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சௌஹானுக்கு, விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

சௌஹான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்ததோடு, இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!

இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.

கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த ரியா (Riya Puthanpurayil, 41), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோயல் (41) தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ட்ராவிஸ் (14) மற்றும் டைராவுடன் (7) கென்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

சுற்றுலாவை முடித்துவிட்டு ரியா, ஜோயல் குடும்பம் கேரளா செல்ல இருந்த நிலையில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 9ஆம் திகதி, அவர்கள் பயணித்த பேருந்து கென்யாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ரியாவும் அவரது மகளான டைராவும் அடங்குவர். ஜோயலும் ட்ராவிஸும் காயமடைந்து கென்யாவின் தலைநகரான நைரோபியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

பிள்ளைகள் வீட்டுக்கு வருவார்கள் என அவர்களை சந்திக்க ரியா மற்றும் ஜோயலின் பெற்றோர் ஆவலுடன் காத்திருக்க, ரியாவும் டைராவும் இறுதிச்சடங்குக்காக இந்தியா கொண்டுவரப்பட உள்ளதால் அவர்களுடைய குடும்பங்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா – மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று (12.06) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து கண்டி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக பூங்கா வீதியில் திரும்ப முற்பட்டவேளை குறித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்!!

நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சாரம் பற்றிய அதிக செலவுகள், உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாழ்க்கைச் செலவு ஏற்கனவே உயர்ந்துள்ள சூழலில், பல குடும்பங்கள் போஷக்கூறுகளான உணவுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, அண்மையில் அதிகரித்துவரும் தொற்றா நோயாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம், இவ்வளவான விலை உயர்வுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “இந்த ஆண்டு ஜனவரியில், மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 வீத்தினால் குறைத்தது.

இது நிதியளவில் எந்த அடிப்படையும் இல்லாமல், அரசியல் லாபத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இலங்கை மின்சார சபை (CEB) மேலும் நட்டமடைய நேரிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இப்போது மின்சாரசபைக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். “பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் விளக்கம் தர வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.