உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை : இலங்கையிலும் சட்டென சரிவு!!

இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் 5200 டொலர்களை தொட்டிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று 4720 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் சர்வதேச சந்தையில் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம் : உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்!!

மட்டக்களப்பின் கொத்தியாபுலை பகுதியில் நேற்றைய தினம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பெண், கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், இன்று (20.03.2026) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில், குறித்த பகுதியை கடந்த சிலர் பால்பண்ணைக்குச் செல்லும் போது பொதுக் கிணற்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அதற்கு அருகில் சென்றனர். அப்போது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் முழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த கிணற்றில் இன்னொரு சடலமும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை மீட்கும் நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பெண் தான், தனது குழந்தையுடன் செல்லும் போது கொத்தியாபுலை பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, குழந்தை வயல் வெளி பகுதியில் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் குழந்தையை நேற்று மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கிணற்றில் உள்ள மற்றொரு சடலம், கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!!

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, தினமும் இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்குப் பரிந்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய – கிழக்கில் நிலவும் மோதல்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஏற்கனவே தரமற்ற நிலக்கரி பிரச்சனையால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும். 2022ஆம் ஆண்டுகளில் கொத்மலை நீர் வற்றும் வரை மின்சாரம் வழங்கியதால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டோம். இறுதியில் 8, 10 மற்றும் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்ய நேரிட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் சிக்கலை தவிர்க்க தற்போதே 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை தடை செய்து மிகப்பெரிய நெருக்கடியை தவிர்க்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!!

தற்போதைய விலை நிர்ணய சூத்திரத்தின்படி, சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை ஒரு டொலர் உயர்ந்தால், நாட்டின் சந்தையில் எரிபொருளின் விலை இரண்டு ரூபாய் உயரும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார். ஜனாதிபதி இன்று (20) நாடாளுமன்றில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவதை விட, உலகளாவிய எரிபொருள் விலைகளின் உயர்வால் தான் முதன்மையான பாதிப்பு ஏற்படுகிறது.

உலகளவில், எரிபொருள் விலை உயர்வு சுமார் 6% முதல் 50% வரை இருப்பதால், நாடுகள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

உலகளாவிய விலைகள் 49% வரை உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு விலை உயர்வு 8% ஆக மட்டுமே உள்ளது. நாட்டின் எரிபொருள் தேவைகளில் 57% எண்ணெய் கூட்டுத்தாபனத்தாலும், 43% தனியார் துறையாலும் பூர்த்தி செய்யப்படுகிறது.

அதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான தற்போதைய விலையை தனியார் துறை கோரியுள்ளது, அதன்படி, எரிபொருள் விலை குறித்து உடனடியாக ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு தற்போதைய விலை வழங்கப்படாவிட்டால், நாங்கள் அதை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது நியாயமானது.

அவர்களின் கணக்கீடுகளின்படி, ஒரு கப்பலுக்கு அவர்களுக்கு 55 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக யாரும் எண்ணெயைக் கொண்டு வருவதில்லை.

இந்த எரிபொருள் விநியோகத்திற்குத் தனியார் துறை பங்களிக்க வேண்டும். ஆனால், அவர்களால் கட்டுப்பாட்டு விலையில் விற்க முடிந்தால் மட்டுமே அவர்கள் பங்களிப்பார்கள். நாம் எரிபொருள் விலைகள் குறித்து மிக விரைவாகச் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தாறுமாறாக குறையும் தங்கம் விலை : நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் நேரடிப் பிரதிபலிப்பாக, இலங்கையிலும் இன்றைய தினம் (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை நேற்றையதினம் இலங்கையில் தங்கத்தில் விலை 13 ஆயிரம் ரூபாயால் வீழ்ச்சி அடைந்த நிலையில், தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையில் சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை : நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு.!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனையும் 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த நபருக்கு நீதவான் பாசன் அமரசேன இந்த தண்டனையை விதித்துள்ளார். வெல்லவத்தை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து எரிபொருள் கேன்களில் வழங்கப்படுவதாக வெல்லவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெல்லவத்தை பொலிஸார், குறித்த நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்படும் போது லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு கேன் பெட்ரோல் இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

எரிபொருள் விலைகளில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்!!

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, இன்று அல்லது நாளையதினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படாது என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இணைச் செயலாளர் சாந்த டி சில்வா இதை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை உயர்த்தப்படும் என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு விடுவிக்கப்படும் போது விலை உயர்த்தப்படும் என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாக அவர் கூறினார்.

அதற்கமைய, இந்த விலை உயர்வு நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறும் என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

3 மாத கர்ப்பிணி மனைவி கழுத்தறுத்துக் கொலை : காதல் கணவன் வெறித்தனம்!!

தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 3 மாத கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர், தனது காதல் கணவராலேயே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிரபல யூட்யூப்பர் வைஷ்ணவி. 20 வயதாகும் வைஷ்ணவிக்கு குறுகிய காலத்திலேயே யூ-ட்யூப்பில் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அதன் மூலம் பிரபலமடைந்தார்.

இவரது காதல் கணவர் ஹரிபாபு(40). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மே 29, 2025 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டனர்.

வைஷ்ணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் வைஷ்ணவியின் காதல் கணவனே கொலை செய்தது தெரிய வந்தது.

திருமணத்தின் போது வைஷ்ணவியின் தந்தை 2 குண்டா நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளார்.

இருப்பினும், தனது கடன்களை அடைக்க மேலும் ₹5 லட்சம் ரொக்கம் கேட்டு ஹரிபாபுவும் அவரது குடும்பத்தினரும் வைஷ்ணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

வைஷ்ணவியின் தந்தை, “குழந்தை பிறந்ததும் பணம் தருகிறேன்” என்று கூறியும், ஹரிபாபுவின் தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலால் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலைக்குப் பிறகு தனது பைக்கில் தப்பிச் சென்ற ஹரிபாபுவை, கோருட்லா புறநகர்ப் பகுதியில் வைத்துப் போலீசார் இன்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள ஹரிபாபுவின் தாய் லட்சுமி மற்றும் சகோதரர்கள் ஆனந்த், அசோக் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வரதட்சிணையால் பிரபல யூடியூபருக்கு கொடூரம் : 5 மாத கர்ப்பிணியாக கத்தியால் குத்திக் கொலை!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி (24), தனது கணவராலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோருட்லாவைச் சேர்ந்த ஹரிபாபு (28) என்பவரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு வைஷ்ணவி திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் இணைந்து ஒரு புதிய யூடியூப் சேனலைத் தொடங்கி, அதில் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவிட்டு வந்தனர். இவர்களின் காதல் வாழ்க்கைக்குச் சாட்சியாக வைஷ்ணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், ஹரிபாபுவின் வீட்டில் நிலவி வந்த சொத்துத் தகராறு காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, வைஷ்ணவியிடம் அவரது வீட்டிலிருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி ஹரிபாபு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிபாபு வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் வைஷ்ணவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக் குத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வைஷ்ணவி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கொலையாளி ஹரிபாபு தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய ஒரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விரைவாக உடல் எடையை குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்!!

ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் இரண்டும் விட்டமின் சி, நார்ச்சத்து, வளர்சிதை மாற்றம், ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்ப பெற்றவை. இவை உடல் எடை குறைப்பிற்கு வழிவகுப்பவை.

நெல்லிக்காய், வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படும். கொழுப்பை வேகமாக எரிக்க உதவிடும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.

ஒருவர் தொடர்ந்து நெல்லிக்காயை உட்கொண்டால் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் காரணமாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவது கலோரி எரிப்பை துரிதப்படுத்தும்.

நெல்லிக்காயுடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, பசியை கட்டுப்படுத்தி, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை குறைக்க உதவிடும்.

உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க துணைபுரியும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

ஆரஞ்சு பசியை கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், நெல்லிக்காய் கொழுப்பை எரிக்க வழிவகுக்கும்.

இரண்டு பழத்திற்கும் தனித்துவமான நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைப்பதற்கு இவை இரண்டுமே அவசியமானவை. இரண்டையும் தினமும் மிதமாக உட்கொள்வது நல்லது.

100 கிராம் ஆரஞ்சு பழத்தில் சுமார் 87 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. விட்டமின் சி 53 மில்லி கிராமும், செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து 2.4 கிராமும் உள்ளடங்கி இருக்கும்.

47 கலோரிகளும் காணப்படும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் பசியை கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கி வரை காணப்படும். அதாவது ஒரு ஆரஞ்சு பழத்தை விட 10 மடங்கு அதிக வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்க செய்யும். உடலில் சேரும் கொழுப்பையும் ஒழுங்குபடுத்தும்.

யாழில் திடீர் மினி சூறாவளி : நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்!!

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20) காலை மழை பெய்திருந்தது.

இந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால், தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது.

அதேவேளை, நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

 

கட்டாரை தொடர்ந்து குவைத் மீது ஈரான் ஆக்ரோசமான தாக்குதல் : பற்றி எரியும் வளைகுடா!!

கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனையத்தின் மீது தாக்குதலை நடத்திய ஈரான் , குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. ​

மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றதாக கூறப்படுகின்றது.

அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் கத்தாரின் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மனைவி உயிரிழந்து ஒரு மாதத்தில் கணவனும் உயிரிழந்த சோகம்!!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (18) அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குடும்பத்தார் அவரை தேடிவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த உறவினர்கள் சடலத்தை நேரில் சென்று அடையாளம் காட்டினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியொர் சடலத்தை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக நேற்று (18) ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முல்லைத்தீவில் துயரம் : கொழும்புக்கு நண்பரை வழியனுப்பிய இளம் அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!!

கொழும்பு செல்லும் நண்பனைப் பேருந்தில் அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தருக்கு விபத்தில் உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை (18) இரவு-11.30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இளம் குடும்பஸ்தரின் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியிலிருந்து விலகி வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நண்பரொருவரைக் கொழும்பு பேரூந்தில் அனுப்பி விட்டுத் தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் பெறுமதி : இலங்கையில் அடுத்தடுத்து குறைவடைந்த விலை!!

உலகளாவிய தங்க விலைகளின் வீழ்ச்சிக்கு இணையாக இலங்கையிலும் தங்க விலை வீழ்ச்சிப் போக்கினை பதிவு செய்து வருகிறது.

அதன்படி, கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று (19.03.2026) பிற்பகல் நிலவரப்படி 362500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9000 ரூபா குறைந்திருந்த நிலையில், அந்த போக்கை தொடர்ந்து, இன்று பிற்பகல் மேலும் 4000 ரூபா குறைந்துள்ளது.

நேற்று (18) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 374400 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 362500 ரூபாவாக காணப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று 407,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 394000 ரூபாவாக குறைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (19.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4843 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 398000 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஒரு தரப்பிற்கு மாத்திரம் QR இன்றி எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!!

எரிசக்தி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலின்படி, கமநல அபிவிருத்தி திணைக்களம் இன்று (19) முதல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் ஆணையர் சுமித் சந்தனா மேலும் தெரிவிக்கையில், எரிசக்தி அமைச்சகத்திற்கு கிடைத்த அனைத்துப் பட்டியல்களும் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் தற்போது நெரிசல் நிலவுவதால், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எரிபொருள் நிலையங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகள் இனிவரும் காலங்களில் எந்தப் பிரச்சினையுமின்றி எரிபொருளைப் பெற முடியும். விவசாய சேவை மையங்கள் மூலம், அறுவடை அல்லது நிலப்பணிகளுக்கு எரிபொருள் தேவைப்படும் விவசாயிகளின் பட்டியல்களை நாங்கள் தயாரிக்கிறோம்.

இந்த பட்டியல்களைத் தயாரிப்பது கடினமான பணி அல்ல. ஏனெனில், இந்த விவசாயிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் விவசாய சேவைத் திணைக்களத்தில் உள்ளன.

அறுவடை செய்தவர்களைத் தவிர்த்து, மீதமுள்ளவர்களை மட்டும் நாங்கள் பார்த்தால் போதும். அந்தப் பட்டியலை நாங்கள் கொழும்புக்கு அனுப்புகிறோம். அந்தப் பட்டியலை நாங்கள் எரிசக்தி அமைச்சுக்கு அனுப்புகிறோம். அவர்கள் அந்தப் பட்டியலை சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள்.

பட்டியலைத் தயாரிக்கும் போது, ​​எந்த எரிபொருள் நிலையத்திலிருந்து விவசாயிக்கு எரிபொருள் பெறுவது எளிது என்ற விவரங்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அப்போது விவசாயிக்கு அதிக சிரமம் ஏற்படாது.

விவசாயத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு QR முறைமையின்றி இவ்வாறு பெயர்ப் பட்டியல் மூலம் எரிபொருள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.