சூர்யகுமார் யாதவ் மீதான சர்ச்சை : 100 கோடி கேட்டு நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு!!

கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகையும் மாடல் அழகியுமான குஷி முகர்ஜி தெரிவித்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குஷி முகர்ஜியிடம் கிரிக்கெட் வீரர்களை காதலிக்கும் விருப்பம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த போது “எனக்கு கிரிக்கெட் வீரர்களை டேட்டிங் செய்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, ஆனால் பலர் என்னிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

அப்போது கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் பெயரை குறிப்பிட்டு பேசிய குஷி, அவர் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து மற்றொரு நாள், தங்களுக்குள் தற்போது எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், இதில் காதல் எதுவும் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார், மேலும் சூர்யகுமார் யாதவ் மரியாதையான வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.

நடிகை குஷி முகர்ஜிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் காவல் நிலையத்தில் மும்பையை சேர்ந்த பைசான் அன்சாரி என்ற நபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புகாரில் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக விளையாட்டு வீரரின் புகழுக்கு நடிகை குஷி முகர்ஜி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாய் கடித்துக் குதறியதில் 10 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

பெங்களூருவில் தெருநாய்களின் அட்டூழியம் ஒரு பிஞ்சுயிரைப் பறித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி அலைனா லோகா (10), தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட பாதிப்புகளால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி, அலைனா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கடித்துக் குதறியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் நாயை விரட்டினர். ஆனால், அதற்குள் சிறுமியின் கண், மூக்கு மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் உயர்தர சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் 20 நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துறுதுறுவென விளையாடிக்கொண்டிருந்த மகள், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து போயினர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்த நிலையில், சிறுமியின் மரணம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவநகர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இறந்ததாக நினைத்த 103 வயது மூதாட்டி பிறந்தநாளிலேயே மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!

103 வயதான மூதாட்டி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உயிர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கங்காபாய், திடீரென சுவாசிக்கத் தவறியதால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள சர்காவ் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கங்காபாய் சாவ்ஜி சக்ரே என்ற மூதாட்டியே இறந்து உயிர் பெற்றார்.

இந்நிலையில் துக்கச் செய்தியை அறிந்து உறவினர்கள் திரண்டனர், சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் பகிரப்பட்டன, இறுதிச் சடங்கிற்காக அவரது காதுகளில் பஞ்சு வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால், இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சற்று முன், கங்காபாய் திடீரென தனது கால் விரல்களை அசைக்கத் தொடங்கினார். இதைக் கண்டு திகைத்துப் போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்செயலாக அன்று கங்காபாயின் 103-வது பிறந்தநாளாகும். எனவே, கண்ணீருடன் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டுச் சென்றனர்.

சாவு வீட்டில் தொடங்கிய இந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டமாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா!!

யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

யாழ். வீதியில் நடை பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16.01.2026) காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வீதியில் பயணிக்கின்ற மக்களுக்கு அவர் சைகையில் வணக்கம் கூறியவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்!!

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் கிரீன்லாந்திற்குத் தங்களது இராணுவ வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய இராணுவக் குழு கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.

இவர்களுடன் ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இணைந்து ‘Operation Arctic Endurance’ என்ற கூட்டுப் பயிற்சியின் கீழ் தங்களது வீரர்களை நிலைநிறுத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லவே இந்த வீரர்களை அனுப்பியுள்ளோம். நேட்டோ இங்கே இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” என்று பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒலிவியர் போயிவ்ரே டி ஆர்வோர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்.நாங்கள் அதைக் கைப்பற்றாவிட்டால் ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைக் கைப்பற்றும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், “டென்மார்க்குடன் பேசி ஒரு தீர்வை எட்டுவோம் என்று நினைக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தை பலிக்காவிட்டால் ‘கடினமான வழிமுறை’ (Hard way) கையாளப்படும்” என்று இராணுவ நடவடிக்கைக்கான குறிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை “இது 2026-ஆம் ஆண்டு. நீங்கள் மக்களுடன் வர்த்தகம் செய்யலாம், ஆனால் மக்களையே வர்த்தகம் செய்ய முடியாது” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அமெரிக்காவின் சொத்தாகவோ அல்லது அவர்களால் ஆளப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நாங்கள் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம்” என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடெரிக் நீல்சன் கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த பயங்கரம் : பெண்கள் மீது தாக்குல் : ஒருவர் மரணம்!!

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற அஹங்கம பொலிஸார் வீட்டினுள் பலத்த காயமடைந்த 2 பெண்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 80 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அஹங்கம, திட்டகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராகும்.

குற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் அஹங்கம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று முதல் நடைமுறையாகும் வகையில் குறையவுள்ள பால் தேநீரின் விலை!!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியானது 125 ரூபாவினாலும், 400 கிராம் பொதியொன்றின் விலையை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட டுபாயில் கைதான பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மூவர்!!

புதிய இணைப்பு : பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு : பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான “சூட்டி மல்லி“ என்பவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “புன்சா” என்பவரின் சகாவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மோசடி குற்றச்சாட்டுகயுளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் இலங்கைக்கு அழைத்துவருவதாற்காக இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பெர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம் : 10 வீடுகள் தீயில் எரிந்து சேதம்!!

நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் நேற்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித காயங்களுக்கும் ஏற்படாத போதிலும்; வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

அப்பகுதி மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைச் கொண்டாட சென்றிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே 10 வீடுகளுக்கு பரவியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிவர்வாகமும், கிராம சேவகர்கரும் இணைந்து சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!!

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

நாளை வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தைப்பொங்கல் திருநாள் வியாழக்கிழமை (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் கரையொதுங்கிய மர்ம தெப்பம்!!

திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இத்தெப்பம் பௌத்த அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றது.

பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தெப்பங்கள் , இலங்கை கரையோர பகுதிகளி கைரஒயொதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தங்க நகைகளை திருடிச் சென்ற இளம் பெண்!!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்( 12.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று(13.1.2026) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஆண் 60 வயதுடையவர் எனவும் பெண் 58 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய இருவரும் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை பொருத்திய ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் தேங்கிக் கிடக்கும் 300 புதிய வாகனங்கள்!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை கோருவதாக தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து இறக்குமதி விதிமுறைகளையும் கடைப்பிடித்ததாக தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பின்னர் சுங்கத்துறை கூடுதல் வரிகளை விதித்துள்ளது, இதில் பொருந்தக்கூடிய சுங்க வரியில் கிட்டத்தட்ட 50 சதவீத கூடுதல் வரியாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில், இறக்குமதியாளர்கள் ஒரு வாகனத்திற்கு மொத்த வரித் தொகை 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். நீடித்த தாமதம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களிடையே விரக்தியையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே திருத்தப்பட்ட வரி கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், பல மாதங்களாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் தங்கள் வாகனங்களை துறைமுகத்திலேயே சிக்க வைத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வாகனங்கள் கிராஸ் போர்டர் லெட்டர் ஒஃப் கிரெடிட் (எல்சி) முறையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில்,நேற்று (13.01.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

தங்கள் வாகனங்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் நிதி ரீதியாகவும் உள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பல உரிமையாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் தங்கள் குடும்பத்திற்காக ஒரு வாகனத்தை வாங்க பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.

அவர்களின் வாகனங்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு விதிகள் மாற்றப்பட்டதால் இப்போது பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு வர பங்களாதேஷ் அணி தொடர்ந்தும் மறுப்பு!!

இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கிரிக்கெட் மோதல் தொடர்கிறது. இதன்படி டி20 உலகக்கிண்ண போட்டிக்காக இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனவே தமது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அந்த நாட்டின் கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் உலகக் கிண்ண அட்டவணை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இப்போது மாற்ற முடியாது என்று ஐசிசி கூறினாலும், பங்களாதேஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

போட்டிகளின் அட்டவணையின்படி, பங்களாதேஸ் அணி, கொல்கத்தாவில் 3 போட்டிகளிலும், மும்பையில் 1 போட்டியிலும் விளையாட வேண்டும். முன்னதாக, பங்களாதேஸில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணம் காட்டி,

ஐபிஎல்லியின் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தே, பங்களாதேஸ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்த இந்திய மறுப்பை வெளியிட்டு வருகிறது.