மகன்களுக்கு மெசேஜ் அனுப்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் விபரீத முடிவு!!

சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 52 வயது சுப்பிரமணியன் என்பவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் அவரது மனைவி 42 வயது நாகலட்சுமி பட்டுப்புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இவர்களது இரண்டு மகன்களும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்து வருவதால் வீட்டில் பணத் தேவை அதிகரித்துக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கணவரின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் கடுமையான கடன் சுமை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சுப்பிரமணியன் வெளியில் சென்று அரிவாள் வாங்கி வந்து தனது மனைவி நாகலட்சுமியை கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரியில் இருந்த தனது மகனுக்கு நாங்கள் இனி இருக்க மாட்டோம் என்று செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய சுப்பிரமணியன் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்து பார்த்த மகன் தனது தாய் மற்றும் தந்தை இருவரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை மற்றும் கடன் அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காருக்குள் சிக்கி 3 வயதுச் சிறுவன் பலி : நெஞ்சை உலுக்கும் துயரம்!!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டிவேல் என்பவரது 3 வயது மகன் சஞ்சீவ், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது தற்செயலாக அங்கு நின்ற காருக்குள் சென்ற சிறுவன், கதவைச் சாத்தியபோது அது தானாகவே லாக் ஆகியுள்ளது. நீண்ட நேரமாகியும் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிக்கிய சிறுவன், போதிய காற்றோட்டம் இன்றி மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளான்.

விளையாடிக்கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் காரைத் திறந்து பார்த்துள்ளனர்.

அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாகத் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால்,

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததைக் கேட்டுப் பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சிறுவனின் உடலைக் கைப்பற்றிக் குளித்தலை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடச் சென்ற இடத்தில் காருக்குள் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் ஈடு செய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்பூசணியால் உயிரிழக்கவில்லை : நான்கு பேர் மரணத்தில் திடீர் திருப்பம்!!

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவின் மும்பையில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி காரணம் அல்ல என தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததற்கு தர்பூசணி காரணம் சென்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது கோடைகாலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் தர்பூசணி தொடர்பாக பாரிய விவாதங்களை தூண்டியது. இந்த நிலையில், உடற்கூராய்வின் முடிவு வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மார்ஃபின் என்ற வலி நிவாரணி அதிக அளவில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்களின் மூளை உள்ளிட்ட பாகங்கள் பச்சை நிறமாக மாறி இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தர்பூசணிக்கும் உயிரிழப்பிற்கும் தொடர்பு இல்லை என மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், இறுதி அறிக்கைகாக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயிரிழந்த குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தங்கள் கருத்தை வெளியிடவில்லை, மேலும் நான்கு பேரின் உடல்களின் உள்ளுறுப்புகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

 

திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமணத் தம்பதி மர்ம மரணம்!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 8 ம் தேதி யஞ்சலா கார்த்திக் மற்றும் மஞ்சுளா ஆகிய இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது.

கார்த்திக் என்பவருக்கு 28 வயது ஆகும் நிலையிலும் அவரது மனைவி மஞ்சுளாவிற்கு 27 வயது ஆகும் நிலையிலும் தங்களது புதிய வாழ்க்கையை அவர்கள் மகிழ்ச்சியாகத் தொடங்கியிருந்தனர்.

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு இடையே எந்தவொரு பெரிய பிரச்சினைகளும் இருந்ததாகத் தெரியவில்லை என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி இரவு வழக்கம் போல இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக உணவருந்தியுள்ளனர்.

உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் நீண்ட நேரம் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அத்தம்பதியினர் இரவு ஓய்வெடுப்பதற்காகத் தங்களது படுக்கை அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை வெகு நேரமாகியும் கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.

உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வராத காரணத்தால் மிகுந்த பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அறையின் உள்ளே சென்று பார்த்த போது கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையிலும் மஞ்சுளா வாயில் நுரை தள்ளியபடியும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டனர்.

இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு : அச்சத்தில் பிரதேசவாசிகள்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் நின்றபோது, காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

 

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் : அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுர, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒருவருக்கு 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால், அது டெங்கு தானா என்பதை உறுதிப்படுத்த உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

வைத்தியரை அணுகும் வரை காய்ச்சலுக்கு பரசிட்டமால் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுளம்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினாயுள்ளார்.

இலங்கை மக்களுக்கு சிங்கக்குட்டிகளால் கிடைத்த அரிய வாய்ப்பு : அழைப்பு விடுக்கும் நிர்வாகம்!!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளைப் பார்வையிடுவதற்காக, தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை (01) நேரில் விஜயம் செய்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிங்கக் குட்டிகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்தன.

பணிப்பாளர் நாயகம் தனது விஜயத்தின் போது, குட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கிய நிலையை மீளாய்வு செய்ததுடன், அவற்றைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்களுடனும் சிநேகப்பூர்வமாக உரையாடினார்

புதிதாகப் பிறந்துள்ள இந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் பொதுமக்கள் தினமும் காலை 10:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயற்கையான சூழலில் வனவிலங்குகளின் அழகை இரசிக்குமாறு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

ஒரு பவுன் தங்க மோதிரத்துடன் சுற்றித் திரிந்த 4 அடி நீள பாம்பு : தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக ஒரு ஷெட்டு அமைத்துத் தங்கியுள்ளனர்.

சம்பவத்தன்று அங்குள்ள மேசைக்குக் கீழே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பாம்பின் உடலில் ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம் ஒன்று பலமாகச் சிக்கியிருந்தது.

அந்த மோதிரத்திலிருந்து விடுபட முடியாமல் பாம்பு தவித்துக் கொண்டிருந்தது. பாம்பிற்கு அதிக வலி ஏற்படாத வகையில், வனத்துறையினர் அந்த மோதிரத்தை மிகவும் லாவகமாக வெட்டி பாம்பை மீட்டனர்.

மோதிரம் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயத்திற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அந்தப் பாம்பு பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.

தங்க மோதிரத்தில் பாம்பு சிக்கிய இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படும் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு முடிந்த அளவுக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், ஒரு “சிறிய அதிகரிப்பு” அவசியமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாவாகும். ஆனால், அரசாங்கம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்குவதால் நுகர்வோர் அதனை 382 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும், எரிபொருள் மானியத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் 60 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விலைத் திருத்தங்கள் அவசியமாகலாம். பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நாங்கள் சிறிய அளவிலான எரிபொருள் விலை அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனால் அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இருப்பினும், இந்த விலை திருத்தம் எப்போது அமுல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஏப்ரல் 30-ஆம் திகதி எதிர்பார்க்கப்பட்ட மாத இறுதி எரிபொருள் விலை திருத்தம் நடைமுறைக்கு வராததை அடுத்து, இந்த கருத்துகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழிவாங்க மருத்துவமனைக்கு வந்த நாகப்பாம்பு : உண்மைச் சம்பவம்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், வாலிபர் ஒருவரைக் கடித்த நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொய்யல கவுடேனியைச் சேர்ந்த சிவ சீனிவாஸ் என்பவர் நேற்று காலை நாகப்பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, ஜங்கா ரெட்டி குடேம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இரவு 10 மணியளவில் அவரை கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டின் முன்பாகத் தோன்றியதைக் கண்டு அங்கிருந்த ஊழியர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர். கடித்த பாம்பே நோயாளி இருக்கும் இடம் தேடி வந்த வினோத நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!!

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது என்று ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை 3 மணியளவில் டிக்கோயா போடையிஸ் வீதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 34 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

விபத்தின் போது பலத்த காயமடைந்த அக்கரப்பத்தனை, வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.சிவபாலன், ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி.லூக்ஸ் என்பவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்த ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம் : பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வந்தனர்.

சிறிய வறட்சி நிலவினாலும் ஊருபொக்க பகுதியில் உள்ள கிணறுகள் வற்றிப்போவதால், மக்கள் குடிநீருக்காக பவுசர்களை எதிர்பார்க்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த நீர் தட்டுப்பாட்டினால் ஊருபொக்க நகரம், தம்பஹல வீதி, ஹுலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹேன்கொட, ஹொரகஸ்மண்டிய, கடுவன வீதி மற்றும் கீரபிட்டிய உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன், ஹீகொட வைத்தியசாலை மற்றும் ஹுலங்கந்த, பட்டிகல, கீரபிட்டிய, கின்னலிய, பெரலபனாதர ஆகிய பாடசாலைகளின் அன்றாடச் செயல்பாடுகளும் முடங்கியிருந்தன.

பஸ்கொட பிரதேச சபையின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே இந்த பாரிய நீர் ஆதாரம் கண்டறியப்பட்டது.

இதன் மூலம் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகேயின் மேற்பார்வையில் இந்த நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மார்ச் மாதத்தில் இலங்கை 195 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாகன இறக்குமதி செலவினம் 900 சதவீதம் அதிகரித்திருந்தாலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்கான வாகன இறக்குமதி படிப்படியாக அதிகரித்து, ஆண்டின் இறுதியில் மொத்த வாகன இறக்குமதி செலவினம் 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 61 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டத்தில், அன்பால் இணைந்த குடும்பத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு உயிரைப் பறித்ததுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது பெரும் சோகத்தையும், உறவினர்களிடையே துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவருக்கும் பிரேமகுமாரி (28) என்பவருக்கும் திருமணம் ஆகி வாழ்ந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கணவன்-மனைவி இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றியதால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரேமகுமாரி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டின் அருகில் இருந்த கிணற்றை நோக்கி ஓடியுள்ளார்.

மனைவி கிணற்றில் குதிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், அவரை எப்படிக் காப்பாவது என்ற பதற்றத்தில் தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, கிணற்றில் இருந்த பாறையின் மீது பார்த்திபனின் தலை பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்த அவர், தண்ணீரிலேயே மயங்கி மூழ்கி உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரேமகுமாரியைப் பத்திரமாக மீட்டனர். ஆனால், பார்த்திபன் தண்ணீருக்குள் மூழ்கி விட்டதால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

இது குறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பார்த்திபனின் உடலை மீட்டனர்.

பார்த்திபனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனைவியைக் காப்பாற்றத் துணிந்த கணவன், அதே முயற்சியில் உயிரை விட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் கதறலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மரண அறிவித்தல் : அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார்!!

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தோணிக்கல் சேக்கிழார் வீதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார் கடந்த புதன்கிழமை 29.04.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் கணபதிப்பிள்ளை – தனலட்சுமி ஆகியோரின் அன்பு புதல்வனும், அமரர் கனகரத்தினம் – அமிர்தவல்லி. என்பவரின் பாசமிகு மருமகனும், தயானந்தியின் இணைபிரியா கணவரும் ஆவார்.

அன்னார் கனகலட்சுமி, ஜெகநாதன், கலைச்செல்வி ஆகியோரின் சகோதரனும், அமரர் கலாஆனந்தி, தயானந்தன் (கனடா), சதானந்தன் (மல்லாவி), நளினி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனனும்,

தவசியாழினி, நிரோசினி (சாவகச்சேரி), பேபிசாளினி (லண்டன்), தேனுஷா, பிந்துஜன், சனோஜன், தனுஜன் (கனடா), பதுமிஜன் என்போரின் அன்புமிகு தந்தையும், தர்சாயினி, துஷியந்தன், கிரியந்தன், பிரியந்தினி ஆகியோரின் பெரியப்பாவும்,

தவக்குமார் (ரூபன்) (கனடா), கஜேந்திரன், (ரஞ்சனாஸ் புடவையக உரிமையாளர் சாவகச்சேரி ) குணசீலன் (லண்டன் ), சஞ்சீவன் (பிரான்ஸ் ), சசீபன், தர்சினி, ஜனீல் (லண்டன்), அனோஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தக்க்ஷனா, சுபஹரிணி, தர்நிர்ஸ் கேசனா, அகரன், பாரிஷன், துளசிகன், கிருந்திகன், ஹவிஷன் அனன்யா, அதிஸ்ரா, அத்வந்த், அக் ஷித் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03.05.2026 அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்

தகவல்
குடும்பத்தினர்.

வவுனியாவில் பயணிகளை நடுத்தெருவில் விட்ட 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் அதிரடியாக இரத்து!!

பொதுமக்களுக்கு முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்தி, பயணிகளை பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கிய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தனியார் பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வவுனியா பேருந்து நிலையத்தில் தமக்குரிய சுழற்சி முறை (Turn) இருந்தபோதிலும், அதிகார சபைக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி குறித்த நான்கு பேருந்துகளும் தன்னிச்சையாகச் சேவையில் இருந்து விலகிக்கொண்டன.

இதனால் பேருந்து நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் ஒரு நாள் முழுவதும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகினர். இறுதியில் அதிக கட்டணம் செலுத்தி மாற்று வாகனங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த விதிமீறல் தொடர்பாக அதிகார சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் உத்தரவின் பேரில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன

சம்பந்தப்பட்ட நான்கு பேருந்து உரிமையாளர்களுக்கும் தலா 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரங்கள் 03.05.2026 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடைக்காலப்பகுதியில், அந்தப் பேருந்துகளில் பணிபுரிந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வடக்கு மாகாணத்தின் வேறு எந்தவொரு தனியார் பேருந்துகளிலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், “பயணிகளின் நலனே எமது முதன்மை நோக்கம். தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பைத் தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

இனிவரும் காலங்களிலும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.