வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பெண் தட்டமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைக்கு பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றத்தைச் செய்த பின்னர் சந்தேக நபரான கணவரும் விஷம் குடித்து தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 25 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
பதுளை, வெலிமடை பகுதியில் வெள்ளதில் அடித்து செல்லப்பட்ட மனைவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கணவனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வெலிமடை பிரதேசத்தில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தம்பதி சிக்கியதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு முழுவதும் இருவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவுமு் காணாமல் போனவர் 37 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய யுவதி நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
யுவதியின் கொலை தொடர்பாக, அவரது காதலனான அதே பகுதியைச் சேர்ந்தவருமான ரோஷன் ருசிரன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட யுவதி 5 பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை எனவும் அவர் உயர்தரம் வரை படித்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்பு, சந்தேக நபர் யுவதியின் மூத்த சகோதரரின் நட்பு காரணமாக அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார், பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் காதலனை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்த பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளம் பெண் இறந்த இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு காலணிகளும் சந்தேக நபருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளம் பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் அணையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபரும் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியும் அணையை நோக்கிச் செல்வதை பலர் பார்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (17) 20 இலட்சம் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இங்கிலாந்தின் இலண்டன் நகரிலிருந்து UL-504 என்ற இலக்க ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த தம்பதியினருடன், இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாறு 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களான ரஃபேல் கரோன் மற்றும் அவரது மனைவி கிளெய்ர் சார்லட் ஆகியோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர், இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருக்க உள்ளனர்.
இந்தத் தம்பதியினரை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவளப் பணிப்பாளர் அனூஷா தமயந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.
வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (17.11.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம், வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுழற் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தேசிய கிரிக்கெட் அணியின் குழாமில் இணைந்து கொள்ள உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் வியாஸ்காந்தை தேசிய குழாமில் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வியாஸ்காந்த், தற்பொழுது இலங்கை ஏ அணி பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் பங்கேற்றே வருகின்றார். இந்த போட்டி தொடர் கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற வருகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது இலங்கை தேசிய அணி பாகிஸ்தானில் ரி20 முத்தரப்பு போட்டி தொடர் ஒன்றில் பங்கேற்கிறது. இந்த போட்டி தொடரில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் வியாஸ்காந்த் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் வியாஸ்காந்த்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கிரிக்கட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் வியாஸ்காந்த் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகத்தில் காதல் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). கூலி தொழிலாளி.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மதுமிதா (19). இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இருவரும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரணும்,
மதுமிதாவும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு, மதுராந்தகம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக மண வாழ்க்கையை தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று ஒரு நபருடன் மதுமிதா, செல்போனில் பேசி கொண்டிருந்தாராம். இதனால் சந்தேகமடைந்த சரண், ‘யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், ‘தெரிந்தவர்தான்’ என்று கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அதிகமாக ேகாபத்தை வெளிக்காட்டாமல் அமைதி காத்தார். ஆனாலும் மனதில் சந்தேகம் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட சரண் முடிவு செய்தார்.
இந்நிலையில், நேற்று மாலையில் மதுமிதாவை சமாதானப்படுத்துவது போன்று நடித்து நைசாக அனந்தமங்கலம் கிராம கோயிலுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றார் சரண்.
அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மலை பகுதியை பார்த்து விட்டு வரலாம் என அழைத்து சென்றார்.
அங்கு சென்றதும் இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை நைசாக எடுத்து மதுமிதாவின் கழுத்தை சரமாரியாக அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் மதுமிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சரண், தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அவ்வழியாக சென்ற கிராம மக்கள், மதுமிதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், சரண்தான் மதுமிதாவை கொலை செய்தார் என தெரியவந்ததால் அவரை தேடினர். அப்பகுதியில் சுற்றி திரிந்த அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 18 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் தினமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து மன உளைச்சலால்,
வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்போடை பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (43) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தினமும் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது மகள் ஜெயந்தி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BBA (பி.பி.ஏ.) முதலாமாண்டு படித்து வந்தார்.
ஜெயந்தி, பெற்றோரின் தொடர்ந்து போர் வாழ்க்கை அவளது கல்விக்கு தடையாக இருப்பதாக மன குழப்பத்தை வெளிப்படுத்தினாலும், அவரது கூறல்களை பெற்றோர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெயந்தி, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தினர் மற்றும் அக்கறை உள்ளவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வேதாரண்யம் போலீசார் சம்பவத்தை கடுமையாக எடுத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அம்மக்கள் கருத்து தெரிவித்த போது….
நாங்கள் பூர்விகமாக குறித்த காணிகளில் பயிர்செய்து வந்தநிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட போரினால் இடம்பெயர்ந்திருந்தோம். மீண்டும் 2012 ம் ஆண்டு மீள் குடியமர்த்தப்பட்டதுடன் எமது காணிகளில் நெற்பயிர்செய்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம்.
தற்போது 13ஆண்டுகளின் பின் வனவள பிரிவு உத்தியோகத்தர்கள் எமது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு விதைக்கப்பட்டுள்ள பயிர்களை அழித்து தேக்குமரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச்சென்று பயிர்களை சேதபடுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பதிவுசெய்ததற்கான ஆவணமும் எங்களிடம் இருக்கிறது.
எனவே வனவளத்திணைக்களத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எமது பூர்விக காணிகளை மீளவும் பெற்றுத்தருமாறு நாம் அரசிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளருக்கு அவர்களால் மகஜர் ஒன்றும் இன்று கையளிக்கப் பட்டிருந்தது.
சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது காதலிக்கப்படும் நபர்களால் கொல்லப்படுகின்றனர்.
காதல் எப்படி மூர்க்கத்தனமான கொலை வெறியாக மாறுகிறது? அந்த அளவுக்கு மனிதத்தை மீறும் வன்மம் நிறைந்த சூழலில் வாழ்கிறோமா என்ற அச்சமும் எழுகிறது.
குஜராத்தின் பாவ்நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மணமகன் மணப்பெண்ணை இருப்புக்கம்பியால் தாக்கி, கொலைசெய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சஜன் பரையாவும், சோனி என்ற பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ‘லிவ் இன்’ உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் இவர்கள் இருவரும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளார். நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருந்த நிலையில், திருமண நாளன்று காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருமணச்சேலை பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது அப்படியே வரதட்சணை, பணப்பிரச்சனை என நகர்ந்து பெரும் சண்டையாக மாறி உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சஜன், சோனியை இரும்புக்கம்பியால் தாக்கி, சுவற்றில் அவரின் தலையை மோதி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போலீசார் சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட சஜனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமண நாளுக்கு முதல் நாளில் அண்டை வீட்டாரோடு, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இவர் மீது 2 FIR பதிவுசெய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சீனாவில் வசிக்கும் சியான்சியான் என்ற இளைஞர் தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, திருமண உறவுகளில் பொருளாதார நிலை மற்றும் பரஸ்பரப் புரிதல் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.
சியான்சியான் தனது பதிவில், “சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, மாதம் ரூ. 6.23 லட்சம் வருமானம் பெற்றேன். அப்போது மனைவியுடன் நலமான வாழ்க்கை இருந்தது.
குடும்பத்தின் செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டேன்; மனைவிக்காக செலவிடுவதிலும் எந்த தயக்கமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக திடீரென அந்த உயர்ந்த சம்பள வேலையை இழந்து விட நேர்ந்தது. வருமானம் குறைந்ததால், வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்திலும் அதிருப்தி ஏற்பட்டதாக அவர் தனது பதிவில் எடுத்து கூறியுள்ளார்.
“நான் வேலை இழந்து, வருமானம் குறைந்ததும், மனைவி என்னிடம் நடந்து கொண்ட விதம் மாறியது.
எனது வாழ்வாதார போராட்டத்தை புரிந்து கொள்ளாமல், வசதிகள் குறைந்து விட்டதற்காகவே அவர் என்னை விலக்கிப் பார்க்கத் தொடங்கினார்.
சில வாரங்களுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுவும் அளித்துவிட்டார்” என்று சியான்சியான் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு, சமூக அந்தஸ்து போன்ற பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தனது திருமணம் தகர்ந்துவிட்டதாக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். “அவர் உண்மையாக என்னைக் காதலித்திருந்தால்,
இந்த சிக்கலான நேரத்தில் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார். வருமானத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை அவர் எடுத்த முடிவு நிரூபித்து விட்டது” என்று பதிவில் எழுதியுள்ளார்.
சியான்சியானின் இந்த பதிவு சீன சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் குடும்பத்தில் பொருளாதார நிலைத்தன்மை அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்தில் பணம் முக்கியமா, பரஸ்பர அன்பும் புரிதலும் முக்கியமா என்பது குறித்து இணையத்தில் பெரிய விவாதம் உருவாகியுள்ளது.
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார்.
குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக, தற்போது அவர் சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்துத் தொடரில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற மேசைப்பந்துத் தொடர்கள் இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
ஹங்கேரியில் வைத்து உலகச் செம்பியனான போலந்து வீரரைத் தோற்கடித்ததன் மூலம், தாவி உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க முடிந்தது.
தாவியின் தந்தையான ஹசித சமரவீர மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மேசைப்பந்துப் பயிற்றுநர்கள் ஆவர்.
இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தாவி, ஒரு தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என சர்வதேச மட்டப் போட்டிகளில் 10 பதக்கங்களை வென்றுள்ளார். தாவி கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஆவார்.
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான சனிக்கிழமை (15.11.2025) மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதி கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) என கூறப்படுகின்றது.
யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கு யுவதியின் காதலன் என கூறப்படும் நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு குறித்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
படபோலாவின் கொண்டகலாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரிந்து ஷனகா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிகரெட், மதுபான பாவனையை விரும்பாத என் கணவன் விருந்தொன்றின் போது கொலை செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என மனைவி குறிப்பிட்டுள்ளார்.
“என் கணவர் ஒரு தச்சர். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் 7ஆம் வகுப்பு படிக்கிறார். இளைய மகள் பாலர் பாடசலையில் படித்து வருகிறார்.
அவருக்கு தினமும் வேலை இல்லாததால், வீடு கட்டவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் வெளிநாடு சென்றார். கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி இஸ்ரேலுக்கு சென்றார்.
வெளிநாடு செல்வதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 7 வீத வட்டியில் 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார்.
இந்த மாதம் 12 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தார். அந்தப் பணத்தில் அவர் எனக்கு 100,000 ரூபாய் அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் வேலை செய்யும் போது, கடனை அடைக்க எங்களுக்கு பணம் அனுப்புவதாகக் கூறினார்.
இவ்வாறான நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடன்களை எப்படி நான் அடைப்பேன். பிள்ளைகளை எப்படி பார்த்துக் கொள்வேன்.
என் கணவரின் உடலை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணியாற்றிய வேளையில் ஆபிரிகர் ஒருவரினால் இலங்கையரான தரிந்து ஷனகா கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமி ஒருவர் தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 13 வயது மாணவி என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.