நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய் : சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட முச்சக்கரவண்டி!!

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது.

ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த போது, அந்த பெண் குரல் எழுப்பியமையால், முச்சக்கரவண்டியை அதன் சாரதி வேண்டுமென்றே புரட்டி விட்டுள்ளார்….!!

சம்பவத்தின் போது அந்த பெண்ணும், சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளம் தாய் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தேவாலயத்துக்குச் சென்று, முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது,

பின் சக்கரத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்த சாரதி, முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, பின்பக்க ஆசனத்துக்கு சென்று குறித்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் குரல் எழுப்பிய போது சத்தம் கேட்ட திசையை நோக்கி ஒரு சிலர் ஓடி வந்த நிலையில் அவர்களை கண்ட சாரதி, முச்சக்கரவண்டியை இயக்கி, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்து தான், பாய்வதற்கு முயன்றபோதும், அவ்வாறு செய்தால், முச்சக்கரவண்டி புரண்டு விடும் என்று தெரிவித்துள்ள சாரதி அந்த முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாகி விட்டாகவும் பெண்ணின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி : கணவன் செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.

கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததுள்ளது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார். குஞ்சன் இறந்துவிட்டதாக வைத்தியர்களும் அறிவித்துள்ளனர். சந்தீப்பை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

நோன்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

கம்பளை – கண்டி வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர், கம்பளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியின் அக்குரணைப் பகுதியில் பணிபுரியும் இந்த இளைஞன், நேற்று மாலை (18) தனது பணியிடத்திலிருந்து தனது நோன்பை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கார் ஒன்று தவறான பாதையில் வந்து இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டில் மனைவி : கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!!

கொழும்பில் தாய் ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பகுதியில் கை, கால்கள் மற்றும் துடைப்பக் கைப்பிடியால் தனது தாயை அடித்து கொன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் தெமட்டகொட, ஆராமய பிளேஸைச் சேர்ந்த சால்வம்மா என்ற 65 வயது பெண்மணி என தெரியவந்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி, சந்தேக நபர் பணம் கேட்டு தாயை துன்புறுத்தியதாக பொலிஸார் மேற்கொண்டு விசாரணையில் தெரியவந்துள்ளது.

கையால் அடித்து, உதைத்து, துடைப்பத்தை பயன்படுத்தி, காயங்களை ஏற்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த உயிரிழந்தவரின் சகோதரி, அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் 4 நாட்களுக்கு பின்னர் அறிந்ததாகவும், 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 2 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரது ஒரே மகன் ஈஸ்டர் தாக்குதல் நடந்த நாளில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்தபோது உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

42 வயதான சந்தேக நபர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அருகில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானம்!!

பால் தேநீரின் விலையை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால் தேநீர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

எனவே, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ் : மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு!!

ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல வந்துவிட்டன.

பிரான்சைப் பொருத்தவரை, ஒரு படி முன்னே போய், போர் போன்ற விரும்பத்தகாத சூழல் உருவானால், தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க, பிரான்ஸ் அரசு தயாராகிவருகிறது.

பிரான்ஸ் அரசு, போர், சுகாதார நெருக்கடி அல்லது இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால், அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக ‘உயிர் பிழைக்க உதவும்’ கையேடு ஒன்றைத் தயாரித்து வருவதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

அந்தக் கையேடு, மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று, உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி, இரண்டு,

உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் என்ன செய்வது, மூன்று, உங்கள் சமுதாயத்தைக் காக்கும் நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வது எப்படி என்னும் விடயங்கள் அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், ஆபத்து நேரத்தில் உயிர் பிழைத்து வாழ உதவியாக ’survival kit’ ஒன்றை தயார் செய்து வைத்துக்கொள்ள அந்த கையேடு அறிவுறுத்துகிறது.

குறைந்தபட்சம் ஆறு லிற்றர் தண்ணீர், ஒரு டசன் டின் உணவு, பேட்டரிகள், டார்ச், காய்ச்சல் மாத்திரை, உப்புக்கரைசல் மற்றும் பேண்டேஜ் போடத்தேவையான பொருட்கள் ஆகியவை அந்த survival kitஇல் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அமெரிக்கா நமக்கு உதவும் என நம்புகிறோம்.

அமெரிக்கா உதவவில்லையானால், நாம் நம்மைக் காத்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் நிலை : பயணிகள் விசனம்!!

வவுனியா புதிய பேருந்து நிலைய இருக்கைகள், பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரத பேருந்து நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காதலால் பறிபோன 20 வயது யுவதியின் உயிர் : 21 வயது இளைஞன் கைது!!

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தெற்கு வலய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காதல் விவகாரம்

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொரடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரின் காரை எரித்த விசமிகள்….!!

இலங்கையின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சமோத் கவிஷ்க பிரேமரத்ன வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை இனந்தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (18.03.2025) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமோத் கவிஷ்க பிரேமரத்னவுக்கு சொந்தமான அநுராதபுரம், குருந்தன்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவரக்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் ஆறாக ஓடிய பியர்!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, வீதி முழுவதும் உடைந்த கண்ணாடி போத்களால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இந்த விபத்தால் எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அங்கிருந்த பொது மக்கள் வீதியில் கிடந்த உடையாத பியர் போத்தல்களை எடுத்து செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு : நீதிமன்றம் உத்தரவு!!

யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று வெளியான காணொளி சர்ச்சையாக மாறி இருந்தது.

அந்த காணொளி தொடர்பில் Youtuber கிருஷ்ணா உட்பட நால்வர் கைதாகி இருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிருஸ்ணா மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்த்து.

இதனையடுத்து இன்றைய தினம் (19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே Youtuber கிருஷ்ணாவை , எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை தேர்தலில் களமிறங்கும் வெளிநாட்டுப் பெண்!!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.

இதற்கமைய, வைப்புத்தொகையை செலுத்திய பிறகு, இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் இருந்து வீடு திரும்பிய பல்கலைக்கழக பேராசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு!!

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவர், மூத்த விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்த குணேந்திரா விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

நேற்றிரவு (18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய சமூக வலைத்தளம்!!

இலங்கையில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியில் அரசாங்கம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(18.03.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இந்த சமூக வலைத்தள செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தனுகா திஸாநாயக்க கூறியுள்ளார்.

அதற்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கருத்துக்களையும் முனவைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.