இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 216,000 ரூபாவாக உள்ளது.

மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 199,800 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,712.57 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

கடந்த வாரம் (10) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 215,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 198,500 ரூபாவாகவும் இருந்தது.

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு : சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை!!

யாழ்ப்பாணம் (Jaffna) கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம், நேற்று (16.01.2025) மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது, குற்ற புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அக்குழுவினர் கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். மேலும், கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

கேரள இளைஞர் ஷரோன் ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி : நீதிமன்றம் அதிரடி!!

கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ஷரோன் ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷரோன் ராஜை சமாதானப்படுத்திய கிரீஷ்மா,

கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி ஷரோன் ராஜை வீட்டிற்கு அழைத்துள்ளார். கிரீஷ்மா அழைத்ததை நம்பி ஷரோன் ராஜ் தனது நண்பருடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது ஷரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார் கிரீஷ்மா. அதனை பருகிய ஷரோன் ராஜ் பின்னர் தனது நண்பருடன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், கிரீஷ்மா குளிர்பானம் கொடுத்ததை கூறியுள்ளார். வயிற்றுவலி நிற்காததால் மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார் ஷரோன் ராஜ்.

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் ஷரோன் ராஜ். கடைசி வரை தனது காதலி மீது ஷரோன் ராஜ் சந்தேகப்படவில்லை,

அவரைக் காட்டிக் கொடுக்கவும் இல்லை. ஆனால் அவரது ரத்த மாதரிகளில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், இது திட்டமிடப்பட்ட கொலை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துணை ஆணையர் ஜான்சன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிரீஷ்மா ஷரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்களை காட்டி பிரச்சனை செய்து விடுவார்

என்ற அச்சத்தில் ஷரோன் ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய் மாமாவுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து கிரீஷ்மா மீது கடத்தல் அல்லது கொலைக்கு கடத்தல், விஷத்தால் காயம் ஏற்படுத்துதல், கொலைக்கு தண்டனை,

ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அப்போது கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனவே க்ரீஷ்மாவின் தாய் விடுவிக்கப்பட்டார். மேலும் கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அணையில் தவறி விழுந்த 4 மாணவிகள் : 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் கிரேஸ், ஐரீன், அலீனா மற்றும் நிமா, நிமாவின் சகோதரி ஹிமாவின் நண்பர்கள் என குழுவினர் தேவாலய விருந்து கொண்டாட்டங்களுக்காக பீச்சி அணைக்கட்டுக்குச் சென்றுள்ளனர்.

பீச்சி நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த தோழி ஒருவரைக் காப்பாற்ற குழுவினர் முயற்சித்தபோது, ​​நான்கு மாணவிகளும் தண்ணீரில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், பட்டிக்காட்டைச் சேர்ந்த 16 வயது அலீனா திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பட்டிக்காட்டைச் சேர்ந்த எரின் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பீச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிமாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு நான்கே நாள் தான் : மகளை சுட்டு கொலை செய்த தந்தை!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை. வேறு ஒருவரை காதலிப்பதாக தந்தை மகேஷ் கர்ஜாரியிடம் கூறியுள்ளார்.

ஆனால் மகேஷ் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் திருமணம் செய்வதற்கு தன்னை கட்டாயப்படுத்தி வருவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் தந்தையும் பிற உறவினர்களும் தான் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகின்றனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் தனுவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களும் பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சி செய்தனர். அப்போது தனு வீட்டிற்கு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் மகளிர் பாதுகாப்பு அமைப்பாளர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மகேஷ் தனியாக பேச வேண்டும் என கூறி மகளை அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது மகேஷ் தனுவை கொலை செய்தது தெரியவந்தது. திருமணத்திற்கு 4 நாட்கள் முன்பாக தந்தை மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இங்கிலீஷும் தெரியல கருப்பா வேற இருக்க’ கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

நீ கருப்பா இருக்க இங்கிலீஷும் பேச தெரியல என்று கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்து வந்ததால் புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்திருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொங்கொட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சசனா மும்தாஜ் (19).

இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு மே 27ம் தேதி அதே மாவட்டத்தின் முரயூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 20 நாட்களுக்குள், அப்துல் வாஹித் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு வேலைக்காகச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, சஹானா மும்தாஜ் தனது கணவரின் மாமனார் மற்றும் மாமியாருடன் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், திருமணமானதிலிருந்து சஹானாவை அவரது கணவர் அப்துல் வாஹித் மற்றும் அவரது குடும்பத்தினர் மனரீதியாக துன்புறுத்தி வருகின்றனர்.

கணவரும் அவரது குடும்பத்தினரும் சஹானாவின் நிறத்தைக் காரணம் காட்டி, அவருக்கு ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாது என்று கூறி சித்திரவதை செய்துள்ளனர்.

அப்துல் வாஹித் துபாயில் இருந்த போது வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் அவரைத் துன்புறுத்தி வந்தார். அப்துல் விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இதனால், சஹானா மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதை அறிந்த கல்லூரி ஆசிரியர்கள், சஹானாவின் குடும்பத்தினரிடம் அவரது நிலை குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, சஹானாவின் குடும்பத்தினர் அவளை கொங்கோட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை சற்று மேம்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் சஹானாவை மீண்டும் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ​அவரது மாமியார், என் மகனுடன் 20 நாட்கள் மட்டுமே வாழ்ந்ததாக சஹானாவிடம் கூறினார்.

பின்னர் அவர் இந்த உறவு தொடரும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அவரது உடல் நிறம் குறித்தும் அவர் சித்திரவதை செய்தார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சஹானா, கொங்கோட்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.

இந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாததாகவும், அவரது உடல் நிறத்தை விமர்சித்ததாகவும் கூறி சித்திரவதை செய்ததையடுத்து சஹானா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலை வெகுநேரமாகியும் சஹானாவின் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சஹானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவையா…..!!

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்த மசாஜ் சேவை வழங்கப்படுகிறது. காணொளியில் பதிவாகியுள்ள நபர் சிங்களத்தில் பேசுவதைக் கேட்கக் கூடியதாக உள்ளது.

இந்த சேவை தற்போது இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் வழங்கப்பட்டு வருவதாகவும் சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்குச் சென்ற மாணவன் திடீரென உயிரிழப்பு : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

புத்தளத்தில் 3ம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (16.01.2025) புத்தளம் – கற்பிட்டி, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதே பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2024 ஆம் ஆண்டிற்கான 3ம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இன்று நடைபெறவிருந்த செயல்முறை திறன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்மதுமா எனும் நோயினால் அவதிப்பட்டு வந்த குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் திடீரென வீசிங் நோயால் அவதிப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவன் வீசிங் நோய்க்காக பயன்படுத்தும் இன்ஹேலர் எனும் இயந்திரத்தை பாவித்துள்ள போதிலும் தனக்கு மூச்சு எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக அந்த மாணவன் ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் குறித்த மாணவனை மாம்புரி கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அந்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு பாடசாலை மாணவர்களின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் விபத்து!!

அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (16.01.2025) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும்,

குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று காலதிவுல்வெவ பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் மாயம்!!

கனடாவில் இருந்து இலங்கை சென்றவர் காணாமல் போயுள்ளார். ஹிக்கடுவ கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒருவரே நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 19 வயது கனேடிய பிரஜை ஒருவரே காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், வெளிநாட்டவர் நீச்சலுக்கு சென்ற இடத்தில் இருந்த எச்சரிக்கை பலகைகளை கவனிக்காமல் கடலில் நீந்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

காணாமல் போன நபரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படை படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மரணம்!!

தென்னிலங்கையில் பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் பெந்தோட்டையில் உள்ள காமினி கல்லூரியில் படித்து வந்த 7 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவன் நீண்ட காலமாக இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பாடசாலை ஆசிரியைகளின் ஆடையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த ஆசிரியர்கள் சிலர் கவுன் அணிந்து வந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று பாடசாலை நாள் என்பதால், புடவை அணிந்து வரவேண்டிய நிலையில் அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலை அதிபர், அவர்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.

மதிப்பீட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் பரீட்சை ஆணையம் இருப்பதால், இதில் அதிபருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பாடசாலைக்கென ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைக் கட்டுப்படுத்த பொலிஸாரை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், பரீட்சை ஆணையாளர் நாயகம் பரீட்சை மையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரவிடம் வினவிய போது இன்று கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த இளைஞன்!!

கிளிநொச்சி  கரடிப் போக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று 917.01.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளை முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது.

பரிசுத் தொகையை வென்றதாக கூறி பணம் பறிப்பு

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம்.

பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம்.

இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அவர் அறிவுத்தியுள்ளார்.

அதேவேளை சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணைத்தளம் குறித்து சாருக தமுனுகல கூறுகையில் இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் பட்டம் விட்ட இளைஞனை தீண்டிய பாம்பு!!

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது விஷப் பாம்பொன்று தீண்டியுள்ளது.

அதன் பின்னர், இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.