கல்விப்பொது சாதாரண தர 2024 (2025) பரீட்சையை மார்ச் 17, 2025 இல் ஆரம்பிக்க இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
தேர்வு குறித்து மேலதிக தகவல்களை 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2786200 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
அடுத்த 2 நாட்களில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வவுனியாவில் மழையின் தாக்கம் காரணமாக டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து நகரசபையின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், ராணிமில் வீதி, வெளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்ற இவர்கள் வீதியேரங்கள், வாய்கல்களில் காணப்பட்ட பொலித்தீன்கள், வெற்று போத்தல்கள், சிரட்டைகள், மட்பாண்டத் துண்டங்கள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்க கூடிய பொருட்களை அகற்றி அப் பகுதியை சுத்தம் செய்தனர்.
வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்ப்பட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்ட வவுனியா நகரசபை அந்தவீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை நேற்றயதினம் அங்கு மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிசாரால் அகற்றப்பட்டிருந்தனர்.
கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒருவரும், 40 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 பேரும், 60 வயது தொடக்கம் 100 வயதுக்கு உட்பட்டவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.
அதேவேளை வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புதிதாக அமைப்பட்ட TILESகளுடன் 4 அறைகள் , 2 வரவேற்பறை , சமயலறை , வாகன தரிப்பிடம் , வீட்டுடன் கூடிய attach bathroom , வெளிப்புற bathroom , கிணறு , அழகிய வெளிப்பற அமைப்புக்களுடன் மேலும் நான்கு பக்கங்களும் மதில் கட்டப்பட்ட வீடு விற்பனைக்குள்ளது.
2பரப்பு அமைவிடம் கொண்ட குறித்த வீட்டிலிருந்து வைத்தியசாலை , பாடசாலை , நகரம் , பொலிஸ் நிலையம் , மாவட்ட செயலகம் என அனைத்து அரச நிறுவனங்களும் அண்மையிலேயே அமைந்துள்ளது சிறப்பம்சமாகும் என்பதுடன் 100மீற்றர் தூரத்திலிலேயே வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அமைந்துள்ளது.
விலை பேசி தீர்மாணிக்கப்படும் என்பதுடன் தொடர்புகளுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும் வாட்சப் இணைப்பும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வீட்டின் புகைப்படங்கள் கீழேயுள்ளது.
முகநூல் ஊடாக அறிமுகமான 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் புத்தல பொலிஸாரால் நேற்றையதினம் (17.12) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் படல்கும்புரை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முகநூல் ஊடாக அறிந்துக்கொண்டு அவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 16ம் திகதி தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற நிலையில் காதலனையும் சந்தித்துள்ளார்.
அதன் பின்னர், காதலனான இளைஞன், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி முச்சக்கர வண்டியில் அழைத்துச்சென்று , புத்தல வீதியில் உள்ள தேக்குமரக்காட்டுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தி வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாய், தந்தையிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (18.12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு கால சூழல் இனியொருபோதும் தோற்றம் பெறாது என்றும் 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேசமயம் சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2028 ஆம் ஆண்டு தமது அரசாங்கமே அமையும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, நேற்றிரவு (17) நாடு திரும்பிய சில மணித்தியாலங்களின் பின்னர், ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிரபலமான தனியார் வங்கியாக காட்டிக்கொண்டு, ஒன்லைன் வங்கி செயலி அல்லது ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை புதுப்பிப்பதாக மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை மாலை 04 மணிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் 3,800 ரூபா தொகையை செலுத்த நேரிடும் எனவும் மோசடியாளர்கள் அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயலியின் பயனர்களின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை புதுப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களிடம் மோசடி செய்பவர்கள் கேட்டுள்ளனர்.
இணைய வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவதால், மோசடிகள் பற்றிய செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மேலும், கடந்த சில நாட்களில் ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணைய வங்கிப் பாவனையாளர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் OTP குறியீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரியுள்ளது.
அதேபோன்று இவ்வாறான மோசடி செயலில் சிக்கினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கைத்துப்பாக்கி போன்ற வடிவிலான இரத்தினகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான தனியார் அருங்காட்சியகத்தில் குறித்த கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கைத்துப்பாக்கி வடிவ இரத்தினக்கல் சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி எலபாத்த பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நீலக்கல் மாணிக்கக்கல் கைத்துப்பாக்கி வடிவில் உள்ளது. இரத்தினபுரி மாணிக்க அருங்காட்சியகத்தின் உரிமையாளரான நந்தன இந்த கல்லை கொள்வனவு செய்துள்ளார். இது 10.20 கரட் எடை கொண்டதாகும்.
உலகின் மாணிக்க கல் நகரமாக இரத்தினபுரி இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரத்தினபுரிக்கு வரவழைத்து அவர்களுக்கு இரத்தினக்கற்களை விற்பனை செய்வதற்காக இவ்வாறான தனித்துவமான மாணிக்க கற்களை சேகரித்து அருங்காட்சியகம் நடத்தப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்போதும் இரத்தினபுரி பகுதியில் இரத்தினக்கல் வியாபாரிகளால் பல தனியார் இரத்தினக்கற்கள் அருங்காட்சியகங்கள் நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரவபொத்தானையை சேர்ந்த 5 வயதான நெஸது துலாஷ் பெரேரா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி முன்பள்ளியில் கற்கும் சிறுவன் பாடசாலை முடிந்து விளையாடிக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை முறிந்து விழுந்துதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது என்று அவர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான அடிகளைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய்,
மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பன அவையாகும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன், அனைத்து நாடுகளின் ஆராய்ச்சி பயணங்களுக்குமான,
ஒரு வருட தடைக்காலம் முடிவடைந்த பிறகும், இலங்கை, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை, குறிப்பாக சீனக் கப்பல்களை, இலங்கை துறைமுகங்களில் தரித்து நிற்க அனுமதிக்குமா?
என்ற கேள்விக்கு ஹேரத் தெளிவான குறிப்பை தெரிவிக்கவில்லை என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள், மேலும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாக உள்ளனர்.
அத்துடன் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தீவுக்குத் திரும்ப விரும்பவில்லை என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.
புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடருந்து வரும் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் அவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சாரதி தொடருந்தினை நிறுத்தி யுவதியின் சடலத்தை மதுரங்குளிய ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்படுகின்றார். குறித்த இளைஞன் தனது வீட்டு வளவிலேயே, இருந்த நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான வைரஸ் ஒன்று கொள்ளைநோயை உருவாக்கும் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார்கள் ஆவிகளுடன் பேசும் நபர்கள்.
கோவிடின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் உலகம் முழுமையாக விடுபடாத நிலையில், 2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளை நோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளது, ஆவிகளுடன் பேசுவோர், ஜோதிடர்கள் மற்றும் குறி சொல்லுவோரைக் கொண்ட குழு ஒன்று.
அதுமட்டுமின்றி பல பயங்கர விடயங்கள் 2025இல் நடக்கும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள். ஜேர்மனி, ஸ்பெயின், போலந்து முதலான பல நாடுகளில் 2025ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஜோதிடக்கலையின் அடிப்படையில் அந்த நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிவித்துள்ளனர் அந்த எதிர்காலத்தைக் கணிக்கும் குழுவினர்.
Tarot card என்னும் அட்டைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சிலர், 2025இல் கோவிடைவிட மோசமான ஒரு கொள்ளைநோய் உலகைத் தாக்கும் என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், மார்ச் 14ஆம் திகதி ஒரு முழு சந்திர கிரகணமும், செப்டம்பர் 21ஆம் திகதி பகுதி சூரிய கிரகணமும் ஏற்படும் என்றும், அவை முடிவுகளுக்கும், மாற்றங்களை ஏற்படுத்தும் துவக்கங்களுக்கும் அடையாளம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஜோதிடக்கலையின்படி, AIயின் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், அதனால், அதைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
ஆவிகளுடன் பேசுபவர்கள், 2025ஆம் ஆண்டில், விண்வெளி தொடர்பான பல முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் பெரிய அளவில் துவங்கும் என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், ஜோதிடக்கலையின் அடிப்படையில், சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்கள் அவர்கள்.
குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி, எழுச்சி ஏற்படும் என்றும், உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தில், பாரம்பரிய கொள்கைகள் மீண்டும் திரும்பும் என்றும் அவர்கள் கணித்துள்ளார்கள்.