யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (09.12) மாலை இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில், உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்
புத்தளம் – சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் , வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றநிலையில், இளஞனும் விரவில் அமெரிக்கா செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை படுகாயமடைந்த பசிந்து தேத்மிக பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞனும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட்டக்கல்லிய ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு செயற்படாததால், ரயில் சமிக்ஞை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை சரி செய்துள்ளபோதும்,
சிவப்பு ஔி சமிக்ஞை மாத்திரம் 24 மணித்தியாலமும் ஔிர்ந்துக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது ரயில் கடவையில் முதியவர் ஒருவர் கடமையில் இருந்ததாகவும், ரயில் வருதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் ரயில் கடவையின் இரு பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதனை அவதானிக்காது வந்த மோட்டார் சைக்கிள் ரயில் வீதியில் வந்த வேகத்தில் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னடுக்கபப்ட்டு வருகின்றது.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்.
பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 15.12.2024 என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,
தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை Online மூலமாகவும் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும் .
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 16 பேரிடமும் சிறு தொகையாக பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரபல பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதி பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகரசபை கட்டளைச் சட்டங்களின் பிரகாரமும், நகரப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகரசபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.
எனினும் குறித்த ஆதனத்தில் நகரசபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிக ரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அந்தவகையில் திருத்திய வரைபடத்திற்கான கட்டட அனுமதி, அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கான குடிபுகு சான்றிதழ், சுற்றுச் சூழல் உரிமம், வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபையால் கோரப்பட்டிருந்தது.
எனினும் அது சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் 7 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை வழங்குமாறு கடந்த 5ஆம் திகதி சபையின் செயலாளரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்படத் தவறின் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திருத்தச் சட்டங்களின் பிரிவுகளை மீறி நகரசபையின் அனுமதி பத்திரத்திற்கு முரணாக கட்டடம் அமைத்து செயற்படுவதாக கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என அறிவித்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வீடு ஒன்றில் சாரதியாக செயற்பட்ட நிலையில் இளைஞன் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் கணவனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் மொஹமட் நுஸ்ரா கேட்டுக்கொண்டுள்ளர்.
குவைத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்த 26 வயதான முகமது சமீர் சில தினங்களுக்கு முன்னர் தீ விபத்தினால் உயிரிழந்தார். கணவருடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மனைவி குறிப்பிடப்பட்டுள்ளார்.
தனது கணவர் முகமது சமீர் மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த மரணம் குறித்து தனது கணவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 18 -வயதில் சமிரா எனும் யுவதி விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
அனைத்து கடுமையான தேர்வுகளிலும் வெற்றி பெற்று தனது வணிகவிமானிஉரிமம் (CPL) ஈட்டி, விமான போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை அவர் அடைந்துள்ளார்.
சமிராவின் பயணம் அவருடைய ஒப்பற்ற அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, போட்டி நிறைந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான உறுதிக்கு சான்றாகும்.
இளம் வயதிலேயே இத்தகைய அசாதாரணமான சாதனையை பெற்று, நாடு முழுவதும் பயிலும் எண்ணற்ற விமானிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
அவளுடைய வெற்றிக் கதை ஒரு உத்வேகத்தின் தீரம், விடாமுயற்சியின் சக்தியையும் தடைகளை உடைக்கும் தைரியத்தையும் வெளிக்காட்டுகிறது.
அவள் புதிய உயரத்திற்கு உயரும்போது, சமைரா, இளம் மனங்களில் தங்கள் கனவுகளை ஊக்கப்படுத்துகிறாள் என பலரும் உவகை வெளியிட்டுள்ளனர்.
அனுராதபுரம் – கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டை கொலை செய்யப்பட்ட நபர் வேறு பிரதேசத்தை சேர்ந்த தம்பதியருக்கு வாடகைக்கு விட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த தம்பதியினர் நேற்று முன்தினம் முதல் வீட்டை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வந்ததாக தெரிகிறது. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார்.
2 முறை தேர்வி எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார். இதனால் இருமுறையும் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காமல் அவரது டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே தனுஜா நேற்று பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான கலபுரகிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சென்று தான் மீண்டும் கர்நாடக எல்லைக்குள் வரும். அதுபோல் அந்த ரயில் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் தனுஜா, தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தனுஜா பிணமாக கிடந்ததை பார்த்த அனந்தபூர் ரயில்வே போலீசார், ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து இறந்ததாக கருதி விசாரணை நடத்தினர்.
ஆனால் இது குறித்து தனுஜாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், டாக்டராகும் கனவு நிறைவேறாத அவர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
டாக்டர் கனவு நிறைவேறாத விரக்தியில் மாணவி ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அன்பழகன் நித்யாவிடம் எதுவும் சொல்லாமல் வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மதியம் தனது மகன் அனிஷ் (5), மகள் கோபிகா (2) ஆகியோரை அழைத்துக் கொண்டு அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்யா, அனிஷ்,
கோபிகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புகையிரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் புகையிரதத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்நிலை டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாகவே நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் கேட்டுள்ளதனையடுத்து காணாமல் போன பெண்ணின் மகன் அங்கு சென்று பார்த்த வேளை கிணற்றுக்குள் தனது தாயாரின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய குடும்பப் பெண் ஆவார். இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு(பால் சொதி) வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்துள்ள விலை
சந்தையில் தற்போது ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரிசி, முட்டை, உப்பு மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.