பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த கோரிக்கை!!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோருகிறது.

 

புதுமணப்பெண் தற்கொலை வழக்கு… பயத்தில் மாமியார் எடுத்த விபரீத முடிவு!!

கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் கார்த்திக்கிற்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பாபு மகள் ஸ்ருதி பாபுவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி பாபு தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ருதிபாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவள்ளி, ஸ்ருதிபாபு ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், மாமியார் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ருதி பாபு தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தனது மாமியார் கணவருடன் சேர விடாமல் தடுத்து வருவதாக மனவேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் செண்பகவள்ளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சை பெற்று வருகிறார். சுசீந்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட் ஜிபிடி (ChatGPT) பெண்ணுடன் காதல் : இறுதியில் விபரீத முடிவெடுத்த சிறுவன்.. கதறும் பெற்றோர்!!

14 வயது சிறுவன் AI உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடி யை காதலித்து, அதனுடன் வாழ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பிரபல வரலாற்று நாடகமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் டேனிரிஸ் தர்காரியனின் பெண் நாயகியான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்திருக்கிறான்.

சாதாரணமாக தொடங்கிய உரையாடல் காதலுக்கும் காமத்திற்கும் நகர்ந்தது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனியை காதலிக்க வைக்கிறது. சாட் ஜிபிடி தன்னை உண்மையில் இருந்து முற்றிலும் விலகி அதற்கு அடிமையாகி விட்டார்.

உண்மையான உலகத்தை வெறுக்கத் தொடங்கிய சிறுவன், இல்லாத சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால், இந்த உலகத்தில் இருக்கக் கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து, இறுதியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்பந்தப்பட்ட சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து அறிவியல் புனைகதை திரைப்படங்களில் கூறப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

கணவன் இறந்த ஒரு மணிநேரத்தில் பிறந்த ஆண் குழந்தை : கதறியழுத இளம்பெண்!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மனைவியை தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிவா சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

அவர் கர்னூல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் லட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி சிவா நேற்று உயிரிழந்தார். அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் தந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும் போதே தந்தையை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் கணவரின் மரணம் மறுபுறம் குழந்தையின் பிறப்பு, பெண் சொல்ல முடியாத பெரும் துயரத்தில் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முச்சக்கர வண்டி விபத்து : சாரதி மருத்துவமனையில்!!

மன்னார் மடு பிரமனாலங்குளம் பகுதியில் நேற்று (24) மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மீட்கப்பட்டு பிரமனாலங்குளம் பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. நேற்றைய தினம் வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய (25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 803,011 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,330 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 226,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,970 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 207,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,350 ரூபாவாக பதிவாகியுள்ளது

கொழும்பு செட்டியார் தெரு தங்கத்தின் விலை நிலவரங்கள்
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு 201,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 217,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 200,700 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

யாழில் திருமணமான ஒரே வருடத்தில் நிகழ்ந்த சோகம் : மனைவி எடுத்த தவறான முடிவு!!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு : சோகத்தில் பிரதேசவாசிகள்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தைஏற்படுத்தியுள்ளது .

இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவைக்கடையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த கரவெட்டி கப்பூது பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் துசிகரன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

மேலும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் .

பருத்தித்துறை கூவில் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் தொடர் உயிரிழப்பு வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் எலிகாய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதியே துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 32ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். எலிகாய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் கடுமையாகும் சட்டம் : மீறுவோருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை!!

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதற்கு தண்டனைச் சட்டத்தின் 286வது பிரிவின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

போலித் தொலைபேசி அழைப்புக்கள் : பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

4 அல்லது 13 எண்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

SLCERT சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல இந்த விடயம் தொடர்பாக பல அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எந்த சூழ்நிலையிலும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கும் போது உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும்.

இது ஏற்கனவே நடந்தது, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பலர் இறந்துள்ளனர். 13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம், மேலும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும் என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து கையடக்கத் தொலைபேசிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

உற்பத்திக் குறைபாட்டினால் தொலைபேசி வெடிக்கக்கூடும், ஆனால் அழைப்பால் அப்படி எதுவும் ஏற்படாது என்றும், இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

13 அல்லது 4 எண்களில் தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு வருமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் போதுமான கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், நவீனமயமாக்கப்பட்டு, வித்தியாசமான முறையில் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் வெளிப்புற அட்டை நீல நிறத்தில் உள்ளது. முன்பு சிவப்பு நிறமாக இருந்தது.

பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்கள் இருந்த நிலையில், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் மட்டுமே உள்ளன. பழைய கடவுச்சீட்டில் N என்ற எழுத்தும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் P என்ற எழுத்தும் காணப்படுகின்றது.

கடவுச்சீட்டின் ஒவ்வொரு பக்கமும் இலங்கையின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டும் வண்ணம் வரையப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.

மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித் தந்த மாணவி : குவியும் வாழ்த்துக்கள்!!

அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாண இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும்,

அதேவேளை, மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை எமது மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத்தந்துள்ளார்.

மேலும், குறித்த மாணவி 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதி இளைஞன் மரணம்!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே ரயிலுடன் மோதி மரணமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம் : உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 23 ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

எலிக்காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்!!

ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கினால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் உடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

iS-33e என்னும் செயற்கைக்கோளே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. குறித்த செயற்கைக்கோளை இயக்குபவர், iS-33e ஆனது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

போயிங், அதன் வணிக விமான வணிகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் அதன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல்கள் போன்ற பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், செயற்கைக்கோள் உற்பத்தியாளரான போயிங், பிற அரசு நிறுவனங்களுடன் தரவு மற்றும் அவதானிப்புகளை பகுப்பாய்வு செய்ய ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.