யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும், கடவையை கடக்க முற்பட்ட KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக எந்த வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
பெண்னொருவரை கொலை செய்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை கொலை செய்யத் தயாராகவிருந்த நிலையில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகே முன்னிலையில் பிரச்சனப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர், கொலை செய்வதற்குத் தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் அந்த பகுதியில் உள்ள பெண்ணொருவரை கொலை செய்யுமாறு சந்தேகநபரிடம் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
கொலை செய்யுமாறு சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்த வர்த்தகரால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தகரிடம் மேலும் பல துப்பாக்கிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வில்கமுவ – பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்று (27) உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை தயார் செய்து மாலை 06.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 06.00 மணிக்கு மின்சாரத்தை துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் மின்சாரத்தை துண்டிக்க மறந்துள்ள நிலையில் சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்து விளாங்காய்களை பறிக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா(NASA) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம்,
“பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
அதன்படி 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த முதல் விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 இலட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது.
இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இரண்டாவது விண்கல் 2007 யூடி3 என்று பெயிரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 42 இலட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.
ஆனால் 3ஆவது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த மூன்றாவது விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.
பூமியிலிருந்து சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது. இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும்.
மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல் 1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. ஆனால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லையென்பதால் எந்த பாதிப்புமில்லை.” என தெரிவித்துள்ளது.
குருணாகல் கிரியுல்ல பிரதேசத்தில் ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணியை சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமையை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த உணவுப் பொட்டலத்தை மேலும் 3 குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். எனினும் உணவை சாப்பிட்டதும் இந்த மாணவிக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் உணவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்து்ளளா்.
கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). ரேபிடோ நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று 22ம் தேதி நள்ளிரவு மணலி பகுதியில் இருந்து செங்குன்றம் செல்வதற்காக பெண் ஒருவர் செல்போனில் காருக்கு முன்பதிவு செய்தார்.
வினோத்குமாரும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்து 2 பேரை அழைத்துக்கொண்டு மாதவரம் சென்றார். அதன்பின், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சாஸ்திரி நகர் பகுதியில் சென்றபோது, கால்டாக்சியில் வந்த இருவரும், வினோத்குமாரை சரமாரியாக தாக்கி, 2700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து வினோத்குமார் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர், குறித்த கார் டிரைவரை அழைத்து, பயணி ஏறிய இடத்திற்கு சென்று பார்த்தபோது, குறித்த வீட்டில் அவர் இல்லை. எனவே, போலீஸாருக்குக் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை அந்தப் பகுதி மக்களிடம் காட்டியபோது, மணலிப் பகுதியில் இருப்பதாகக் கூறினர்.
மணலியின் துர்கை அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் ராஜி (24), அவரது மனைவி பிரவீனா (22) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது ராஜி வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு கையில் லைட்டரை எடுத்து, என்னை பிடித்தால் அனைவரையும் தீ வைத்து கொளுத்தி கொன்று விடுவேன் என போலீசாரை மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் திகைத்தனர்.
சிறிது நேரம் கழித்து, போலீசார் ராஜியை கைது செய்து அவரது லைட்டரை எடுத்து முதலில் வீட்டிற்கு வெளியே வீசினர். இதற்கிடையில், ராஜி மீண்டும் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயன்றார். ஆனால் போலீசார் ஒருவழியாக சமாளித்து அவரை பிடித்தனர்.
பின்னர் கணவன்-மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது ராஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 18 குற்ற வழக்குகள் இருப்பதும், வரலாற்று சாதனையாக ரவுடி இருப்பதும் தெரியவந்தது.
மேலும் ராஜி தனது மனைவியுடன் காரை முன்பதிவு செய்துவிட்டு தனது நண்பர் மணலி ராஜியுடன் சென்று வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராஜி, பிரவீணா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மணலி ராஜியை தேடி வருகின்றனர்.
பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குடும்ப உறுப்பினர்கள் உடலில் அசைவுகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.குழந்தையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கியாரா மீண்டும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை கியாரா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது.
முதலில் குழந்தை இறந்து விட்டதாக அறிவித்து தவறு செய்ததை மருத்துவமனை ஒப்புக்கொண்டது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.
இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ள நிமேஷா, இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றினை தான் படைத்திருப்பதாகவும்,ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனியாக இருக்கும் போது சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு வாசனை வந்தால் அங்கிருந்தே பெற்றோர் அல்லது பெரியவர்களிடம் கையடக்க தொலைபேசியில் அறிவிக்க வேண்டாம் என தீயணைப்புத் துறையின் முதன்மை அதிகாரி பி.டி.ஏ.கமல் வில்சன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால், சிலிண்டரில் இருந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே சென்று இது தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல சிறுவர்களை தங்கள் ஆடைகளை அயர்ன் செய்து முடித்ததும் மின்சார இணைப்பில் இருந்து வயரை அகற்ற மறந்து விடுகின்றார்கள். இதனால் வீடுகள் தீப்பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த மறதி பெரும் ஆபத்தாக அமைந்து விடும். எனவே, சிறுவர்களை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்யும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டனில் சுமார் 142 நாட்களாக காணாமல் போயுள்ள பெண் ஒருவர் மற்றும் அவரது 7 வயது மகன் விவகாரத்தில் அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு லண்டனில் ரிச்மண்ட் பகுதியை சேர்ந்த 43 வயது கரிமா மஹ்மூத் என்னும் பெண் மற்றும் அவரது 7 வயதான மகன் அடம் க்லான்வில் ஆகியோர் கடந்த ஜூன் 3ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இருவரையும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதன் காரணமாக, அந்த பெண் தொடர்பில் ஒரு புதிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் ஃபெல்தாம் பகுதியில் அமைந்துள்ள பெட்ஃபோன்ட் சாலைக்கு அருகில் குறித்த குறித்த பெண்ணை கடைசியாக சிலர் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறிப்பிட்ட பகுதியில் அவரை யாரேனும் எதிர்கொண்டாலோ அவர்களுக்கு உதவும் வகையில் வாடகைக்கு அறை அளித்தாலோ அவர்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்துடன், அவரை தேடும் பணியில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையிடையே வாந்தி ஏற்படுவது வழமை.
இந்நிலையில் கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் 11 மணியளவில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்புறுத்தலுக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வட்ஸ்எப் ஊடாக அனுப்பிய கடிதத்திற்கு, குறித்த அதிபர் அந்த மாணவியை தரம் 04 க்கான கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் கடைக்கு போவதாக கூறி i.c.t.நிலையத்திற்கு வருமாறு அந்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளமை தெரிய வந்ததால்,
நேற்றைய தினம் பெற்றோர்கள் ஒன்று கூடி பாடசாலை அதிபரை கைது செய்யுமாறும் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் அருந்திய நண்பருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து நடுவீதியில் விட்டுச்சென்ற நபரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிம்ரோஸ் பூங்காவின் கீழ் பகுதியில் வீதியோரத்தில் இருந்து சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீதியோரமாக வந்தமை குறித்து விசாரணை நடத்தியதில், நண்பர் ஒருவர் அவரை அழைத்துச்சென்று அந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரும் அவரது நண்பரும் கண்டி பிரிம்ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் உள்ள சுற்றுலா வலயங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் விசேட பாதுகாப்புத் திட்டத்தை தொடர்ந்தும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த முன்முயற்சியானது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமன்றி பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி
அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ மற்றும் திக்வெல்ல உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.