தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் காதலனை கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி நான்கு வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட காதலி என கூறப்படும் பலுகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த பெண் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த காதலர்கள் இருவரும் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பொலன்னறுவையில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளனர்.
பேருந்தில் ஏறியதில் இருந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே காதலியை காதலன் தள்ல்விட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம் (28-10-2024) ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசி பாவித்தல் என பல குறைபாடுகளை முன்வைத்து மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர்கள் வீதி மறியலிலும் ஈடுபட்டனர். வீதியை மறித்து போராடியதால் சிறிதுநேரம் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.
எனினும், கோப்பாய் பொலிஸார் நிலைமையை சரிசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024) இந்துரானை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் இந்துரானை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிட்டம்புவையில் இருந்து ருவன்வெல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் வலதுபுறம் உள்ள பக்க வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதியான தாய், 4 வயது சிறுவன் மற்றும் 10 சிறுமி ஆகியோர் கொனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 10 வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை ( 29) தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான இடங்களில் Wi-Fi ஐ பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
எனவே, பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தி இணைய வேலைகளை செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“இலவச Wi-Fi ஐ சேவையின் மூலம் தமது இணைய சாதனங்களில் ஊடுருவி கடவுச்சொற்கள் மற்றும் பிற இரகசிய தகவல்களை திருடும் மோசடி இடம்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது மின்னஞ்சல் முகவரிகளை அணுகி எந்த நேரத்திலும் கணக்கியல் பணியையும் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் WhatsApp கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
அதற்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருட நாடாளுமன்ற தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வாட்ஸ்அப் கணக்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையக் குற்றவாளிகள் பொதுமக்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவதற்கு சரிபார்ப்புக் குறியீட்டினை (OTP) பயன்படுத்துகின்றனர்.
திடீரென வாட்ஸ்அப் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், மோசடி செய்பவர்கள் பயனர்களைத் தொடர்புகொண்டு, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ காட்டிக்கொண்டு, சரிபார்ப்புக் குறியீட்டைக் கோருவதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு ஒருமுறை சரிபார்ப்புக் குறியீட்டினை வழங்கியவுடன் குறித்த கணக்குள் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகின்றன.
இதேவேளை, வாட்ஸ்அப் கணகை ஹேக் செய்தவுடன் அதில் உள்ள தொடர்பு இலக்கங்களுக்கு அவசர உதவியாக சிறு தொகை பணத்தை கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், அந்த பணத்தை பெற பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு இலக்கமும் ஏனையவர்களிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (36). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கீழமட்டையான் கிராமத்தில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில், தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்றார் அழகர். அப்போது அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற அழகர், மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.
மதுரை முழுவதும் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில், தொடர் மழையால் கண்மாய் முழுவதும் நீர் நிரம்பியிருந்துள்ளது.
அதன் காரணமாக ஆழம் தெரியாமல் கண்மாயில் இறங்கிய அழகரும் அவரது நான்கு வயது மகன் ஜெகதீஸ்வரனும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே திருவிழாவுக்குச் சென்ற கணவனும், மகனும் வீடு திரும்பாததால் அழகரின் மனைவி இந்துமதியும் அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் இருவரையும் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் கண்மாயில் தந்தையும், மகனும் சடலமாக மிதந்ததைப் பார்த்து விட்டு கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் காடுபட்டி காவல் நிலைய போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அழகரின் மனைவி இந்துமதி அளித்த புகாரின் பேரில் காடுபட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன்.
பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
19 வயசு காதலி சோனி சலீம் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் கர்ப்பமடைந்திருக்கிறாள். அப்போதிலிருந்தே கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி சலீம் தொடர்ந்து சோனியை வற்புறுத்தி வந்துள்ளான்.
சோனி கர்ப்பத்தைக் கலைக்க மறுத்து, மாறாக தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளக் கூறி சலீமை வற்புறுத்தி வந்ததால் 7 மாத கர்ப்பிணியான சோனியை தனியே அழைத்து சென்று கொலைச் செய்து, யாருக்கும் தெரியாமல் 3 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்.
சோனியின் காதலன் சலீம், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து இந்த கொடூர கொலையைச் செய்ததாக போலீசாரிடம் கூறியிருக்கிறான்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கர்ப்பமடைந்ததால் சோனி தனது காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். 7 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், கர்ப்பத்தைக் கலைப்பது பற்றியும் அவள் ஆரம்பத்தில் இருந்தே சம்மதிக்கவில்லை.
இதன் காரணமாக காதலர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும் போது சலீம் சோனியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த கோரிக்கையை சோனி மறுத்து விட்டார்.
தனது தங்கை காணாமல் போனதாக சோனியின் அண்ணன் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் துவங்கினார்கள். சோனி அடிக்கடி யாரிடமாவது செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை கவனித்ததாக அவளது பெற்றோர் போலீசாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் சோனியின் செல்போனில் வந்த அழைப்புகளை வைத்து சலீமை போலீசார் நெருங்கினார்கள். கடந்த திங்கட்கிழமை சோனி சலீமை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து அவளுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில், சலீம், மேலும் இருவரின் உதவியுடன், சோனியை ஹரியானாவின் ரோஹ்தக் நகருக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளான். காரில் சோனியை அழைத்து சென்ற போதே அவளுக்கு காதலன் மீதும், அவனது இரு நண்பர்கள் மீதும் சந்தேகம் வந்துள்ளது.
பின்னர் காரை விட்டு ரோஹ்தக் நகரில் இறங்கியதும் அவள் தனது சந்தேகம் குறித்தும் தகராறு செய்திருக்கிறாள்.
ஆள் அரவமற்ற பகுதி என்பதால் வாக்குவாதத்தில் தைரியமாக சோனியை மூவரும் சேர்ந்துக் கொலை செய்து, சோனியின் உடலை 3 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான் சலீம்.
சோனி, இன்ஸ்டாகிராமில் 6,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் சலீமுடன் புகைப்படங்களையும், வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக தளங்களில் சோனியின் பல படங்களையும் சலீம் வெளியிட்டதாக காவல்துறையினர் கூறினர். இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ரொறன்ரோவில் வியாழக்கிழமை நடந்த துயரமான விபத்தில் குஜராத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த டெஸ்லா கார் பாதுகாப்பு கம்பத்தில் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ராவை சேர்ந்த சகோதரர்கள் கேதாபா கோஹில் (29) மற்றும் நீல்ராஜ் (25), ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்ராஜ்சிங் சிசோடியா (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
இன்னொரு ஆண் அடையாளம் காணப்படவில்லை. 25 வயது பெண் ஒருவர் இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
விபத்தின் போது அருகில் இருந்த லாரி ஓட்டுனர்கள் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றதாக CTV நியூஸ் செய்தி தெரிவித்தது.
தீவிரமாக காயமுற்ற அந்த பெண் சாலையோரத்தில் உட்கார்ந்து பேசக்கூடிய நிலையில் இருந்தார், ஆனால் விபரங்களை பகிரவில்லை.
சகோதரர்களின் உறவினர் தெரிவித்ததாவது, கெதாபா ஐந்தாண்டுகளாக ரொறன்ரோவில் வசித்து வந்தார், நீல்ராஜ் இந்த ஆண்டு ஜனவரியில் அவரது உடன்பிறப்புகளுடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு சென்றார். அவர்கள் பிறந்தநாள் விழாவுக்குப் பின் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்தது.
கனடா அதிகாரிகள் தீக்காயமுற்ற உடல்களுக்கு டிஎன்ஏ சோதனை செய்ய குடும்பத்தினரின் அனுமதி எதிர்பார்த்துள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார். அங்கு மரியம் என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின் காதலில் விழுந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மரியத்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிறித்துவ முறைப்படி, இருவரும் கடந்த மே மாதம் பிரான்சில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டியில் இவர்களின் திருமணம் தமிழர் பாரம்பரிய முறைப்படி மீண்டும் நடந்தது.
கலைராஜன்-மரியம் இருவரின் குடும்பத்தினரும் ஒன்றாக மணமக்களை வாழ்த்தினர். திருமணம் குறித்து மரியம் கூறுகையில்,
“கலைராஜனும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்தியாவிற்கு வந்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் குடும்பத்தில் நானும் ஒருவர் என்பது மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி பிரியாவுடன் (37) சேர்ந்து ‘Sellu Family” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார்.
இதன்மூலம் தம்பதியர் இருவரும் பிரபலமாகினர். இவர்களின் மகன் சேது எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சேது தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சேது உடனடியாக பெற்றோரைப் பார்க்க நேரில் சென்றுள்ளார்.
வீட்டின் முன் வாயில் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது, ஆனால் முன் கதவு லேசாக திறந்திருப்பதை கண்ட சேது, உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
அவரது தந்தை செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும், தாய் பிரியா படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றினர். அவர்களில் பிரியா விஷம் அருந்தி உயிரிழந்தது பின்னர் தெரிய வந்தது.
தம்பதியரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையில் இருந்த இருவரும், யூடியூப்பில் வருமானம் போதிய அளவில் இல்லாததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், யூடியூப்பில் எதிர்மறை கருத்துக்கள் வந்ததால் மனம் உடைந்த தம்பதி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இருவரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.89 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 387.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி செலுத்திய நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை பந்தயம் வைத்து ஓடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 முச்சக்கர வண்டிகள் மற்றும் 09 சாரதிகள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்ட சாரதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த பந்தயத்தில் குறித்த குழுவினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய போது, அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கைதான சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்து கொழும்பிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுள்ளார்.
குறித்த பேருந்து யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த பின்னர் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்காத காரணத்தினால் அவரை அவதானித்த நடத்தினர் எழுப்பமுற்பட்டுள்ளார்.
இதன்போது அவர் மயக்கநிலையில் காணப்பட்டமையினால், 17ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் சிறுவனுடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து தாலிக்கொடியை திருடி சென்ரூள்ளார்.
சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தாலிக்கொடி (நகை) திருடிச் சென்றுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (25) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,
குறித்த வீட்டிற்கு சிறுவனுடன் சென்ற பெண் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். வீட்டார் பணம் வழங்கிய நிலையில் குடிக்க நீர் கேட்டுள்ளார்.
குடிக்க நீர் கொடுத்த பின்னர் தான் சாத்திரம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கும் சாத்திரம் பார்த்துள்ளார்.
இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசி வீட்டிலிருந்த பெண் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.
அதனையடுத்து மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவனுடன் குறித்த வீதியால் சென்ற CCTV விடியோ கட்சியும் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.