கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த மனைவி!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண்.

இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் . இவர்கள் இருவரும் 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிட்டு சமூக வலைதளத்தின் மோகத்தில் சிக்கியிருந்தார். சமீபத்தில் பிரதிமாவுக்கு 28 வயதான திலிப் ஹெக்டேவுடன் காதல் ஏற்பட்டது.

இந்த காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை பிரதிமாவின் குடும்பத்தார் அறிவுறுத்தினர்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்திற்கு புகாராக சென்ற நிலையில், அங்கு தான் திலிப் உடன் வாழ விரும்புவதாக அவர் கூறினார். இந்நிலையில் அனைவரும் அவரை சமாதானம் செய்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இது நடந்து சில நாட்களில் பாலகிருஷ்ணாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு அடுக்கடுக்காக பல உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் உடுப்பி, மங்களூரு, பெங்களூரு என பல நகரங்களில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தான் உயிர் பிழைப்பது கடினம் என்று தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணா, அக்டோபர் 19ம் தேதி பெங்களூரு நகரில் இருந்த விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கிளம்பி இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

அடுத்த நாள் 20ம் தேதி காலை பாலகிருஷ்ணா மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது முகத்தில் பல இடங்களில் கீறல்களும் காயங்களும் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விசாரணையில் பிரதிமாவின் அண்ணன் சந்தீப் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை தனியாக அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்.

பிரதிமாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் 20ம் தேதி காலை சுமார் 1:30 மணிக்கு அவரது காதலனை வரவைத்து தலையணையை கொண்டு அவரை அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

தவறை மன்னித்து விட்டுவிடும் படி அவர் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காமல் அவரது சகோதரர் சந்தீப் உடனடியாக இந்த கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலகிருஷ்ணாவை தலையணையை வைத்து கொலை செய்தது மட்டுமின்றி பிரதிமாவிடம் ஸ்லோ பாய்சன் வாங்கிக் கொடுத்தது தான்தான் என விசாரணையில் திலீப் வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான தகவல்களை கவனத்திற் கொள்ள வேண்டாம்.

அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை மாத்திரம் கவனத்திற் கொள்ளுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கடற்கரையில் காதலனின் செயலால் 19 வயது காதலி பரிதாபமாக உயிரிழப்பு!!

தியலகொட பிரதேசத்தில் காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த காதலி தனது காதலனுடன் இணைந்து பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டுள்ளார்.

இதன்போது, கடலிலிருந்த பாறைகளின் மேல் விழுந்த காதலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடம் கற்றுகொடுப்பதாக மாணவிகள் இருவர் துஸ்பிரயோகம் : கணித ஆசிரியர் கைது!!

இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு!!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் மாணவைன் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழில் கணவன் மனைவி கொலை : அதிர்ச்சியில் பிரதேசவாசிகள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவியுமே கொங்கிறீட் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தமிழ் வீராங்கனை!!

 

இலங்கை வலைப்பந்து (SL – Netball) அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார்.

இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அணி நிர்வாகம்

அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலப்பந்தாட்டப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்றார்.

இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி, இலங்கை அணியிலிருந்து நழுவியது துரதிர்ஸ்டவசமானது, இந்த பின்னடைவுக்கு அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு உள்நாட்டு அளவில் போதுமான அனுபவம் இருந்த போதிலும், வெளிநாட்டுக்களங்களில் வீராங்கனைகளுக்கு உரிய அனுபவம் இல்லை என்றும் தர்ஜினி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவர்கள் முன்கூட்டியே போதுமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், அந்த அணிக்கு சர்வதேச அனுபவமும் உள்ளது என்று தர்ஜினி கூறியுள்ளார்.

இலங்கையில் 7 தம்பதிகளுக்கு நடந்த வித்தியாசமான திருமண நிகழ்வுகள்!!

அனுராதபுரத்தில் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாத 7 பெற்றோருக்கு சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று முன்தினம் கல்நேவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த பெற்றோர்கள் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினால் 16 பிள்ளைகள் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான சட்ட நெருக்கடியை தீர்க்கும் வகையில் இந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 7 குடும்பங்களும் சட்டப்படி திருமணம் செய்து வைப்பதுடன், அவர்களின் பிள்ளைகளுக்கு பிறப்புப் பதிவின் கீழ் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கிராமத்தில் உள்ள தகவல்களை பார்க்கும் போது, ​​16க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் உள்ளனர்.

பிள்ளைகளின் பெற்றோர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிள்ளைகளுக்கு சட்டப்பூர்வ பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டியதன் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 7 குடும்பங்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தில் சேர்க்கப்பட்டதாக கல்நேவ பிரதேச செயலாளர் கே.ஆர். பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாது. எனவே பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தலையிட்டு 7 குடும்பங்களுக்கு இந்த இடத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாததால் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. நாங்கள் அடையாளம் தெரியாத மனிதர்களாக இருந்தோம்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு மதிப்பு கொடுத்தனர் என திருமணம் செய்துக் கொண்ட தம்பதி ஒன்று தெரிவித்துள்ளது.

 

சமூக ஊடகங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்படும் போலி செய்திகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட நம்பகமான நிறுவனங்களின் பெயரில், தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் நிதியியல் தகவல்களை மோசடியாகப் பெறுவதற்கு போலியான செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் இணைய குற்றத்தில் ஈடுபடுவர்களால் சமூக ஊடக தளங்கள், போலி இணையத்தளங்கள், குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பப்பட்டமை குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு கூறுகிறது.

எனவே, இது போன்ற செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொதுமக்களை கோரியுள்ளது.

ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்று போனில் பேசிய யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரத்தனர்.

விபத்து ஏற்படும் முன்பு குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன இறக்குமதி குறித்த அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய முறைமையை தயாரித்து எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நவம்பர் முதலாம் திகதி தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஈடுசெய்யப்படவுள்ளது.

கொண்டாடப்படுகின்றது. எனவே, நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண ஆளுநரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை பரிசீலித்த பின்னர், நவம்பர் முதலாம் திகதி ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மாகாணா கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.

அதேவேளை விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும், விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில், அந்நாளுக்குரிய கல்வி செயற்பாடு எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (01) வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோனின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேனகா ஹேரத் மேலும் தெரிவித்தார்.

கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து : 150க்கும் மேற்பட்டோர் காயம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது.

அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

நள்ளிரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் அப்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தீமூட்டப்பட்ட பட்டாசு தவறுதலாக விழுந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதம் பிரதேசவாசிகளிடையே துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு பெறலாம்!!

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போதியளவு கடவுசீட்டு கையிருப்பில் உள்ளதால் நீண்ட கால தேவைகளுக்காக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் காத்திருக்க வேண்டும்.

தற்போது, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 1,600 கடவுசீட்டுகள் திணைக்களத்தில் நாளாந்தம் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

யாழில் பெண்ணால் இடம்பெற்ற கோர விபத்து : மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதி யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் கோர விபத்து இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை செல்லும் பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் பெண் மருத்துவர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யாழ்ப்பாண கல்லூரியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாரை மீறியும் அதீதவேகமாக பயணித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் வட்டுக்கோட்டைப் முன்னெடுத்து வருகின்றனர்.