உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தங்களது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. ஆனால், அவற்றிற்கு உரிமைக் கோர குழந்தைகள் எதுவும் இல்லை. இதனால், குரங்கு ஒன்றை அவர்கள் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
தங்களின் மறைவுக்குப் பின்னால் அந்தக் குரங்கு ஆதரவு இல்லாமல் அவதிப்படக் கூடாது என நினைத்த அத்தம்பதி, தங்களது சொத்துக்கள் முழுவதையும் அக்குரங்கின் பெயருக்கே எழுதி வைத்துள்ளனர்.
உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார்.
இந்திய அணி உலகக்கிண்ணப் போட்டியில் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வருகின்ற 22ம் திகதி தென் ஆபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பு பற்றி அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறுகையில், இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். ஆனால் என்னை பொறுத்தமட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதே எனது கணிப்பாகும். உலகக்கிண்ணத்தை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் இப்போது அணிகளின் செயல்பாடுகளை வைத்து எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது. முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய திருக்கை மீன் சிக்கியுள்ளது.
சுமார் 1000 கிலோ எடையுடைய இந்த மீன் கொம்பு திருக்கை இனத்தினை சேர்ந்தது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் தொழிலாளர்கள் மீன்பிடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர். பிடிக்கப்பட்ட இந்த மீன் சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யமுடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடல்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் பெரிய மீன்கள் பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கந்தபுரம் நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று (19.02) கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் பூசை நடைபெற்று நிறைவடைந்தவுடன் பூட்டப்பட்ட நிலையில் இருந்த கோவில், இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோவிலில் அம்மனின் தங்க ஆபரணங்கள் மற்றும் குத்துவிளக்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு முற்றாக எரிந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது.
இச் சம்பவத்தினால் பாடசாலை மாணவர்களது கற்றல் உபகரணங்கள் உட்பட வீட்டின் அனைத்து பொருட்களும் தீயில் முற்றாக எரிந்து எரிந்து நாசமாகியுள்ளன.
இந் நிலையில் குறித்த வீட்டு உாிமையாளரான துரைராசா அகிலனுக்கு உரித்துடைய ஒரு பரப்பு தாழ்நிலக்காணி இருப்பதாகவும் தற்காலிக வீடு ஒன்றினை அமைப்பதற்கும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொள்ள உதவிகளை எதிா்பாா்ப்பதாகவும் தொிவித்துள்ளாா்.
அத்துடன் தனது கல்வி நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொள்ள தனக்கு உதவுமாறு மகளான 10 வயதுடைய பாடசாலை மாணவியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே மேற்படி சம்பவம் தொடா்பில் குறித்த குறித்த குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்க விரும்புவோா் பின்வரும் வங்கிக்கணக்கில் பணவைப்பு மேற்கொள்ளலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விவரம்:
அகிலன் லதாமினி
Commercial Bank – Vavuniya
A/C: 8610028746
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு கனகசுந்தரசுவாமியின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலை அடைகிறேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை, முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
கிராமசேவையாளராக முல்லை மாவட்டத்தின் பல்வேறு கிரமங்களில் அளப்பரிய சேவையாற்றிய இவர் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போதும் மக்களோடு மக்களாக இருந்து ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவையாகும்.
இவரது இழப்பு அன்னாரது குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்த போதும் அவரது மக்கள் பணி தொடர காலன் இடம் கொடுக்கவில்லையே என்ற ஏக்கமே பிள்ளைகளின் மனங்களிலும் மக்களின் இதயங்களிலும் மேலோங்கி இருந்ததை அவதானிக் முடிந்துள்ளது.
அன்னாருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாணசபைக்கும் புதுக்குடியிருப்பு பிரதேசவாசிகளுக்கும் பேரிழப்பாகவே நான் கருதுகிறேன். மிக அமைதியாக இருந்து தனக்குரிய பணிகளை மக்களுடன் கைகோர்து செய்து முடிக்கின்ற ஆற்றல் மிகுந்த அன்னாரது இழப்பினால் துயருறுகின்ற மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து நிற்கிறேன்.
இ.இந்திரராசா,
வடமாகாண சபை உறுப்பினர்,
வவுனியா மாவட்டம்
புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால் “புறப்பட்ட புரட்சிப் புயலின் தலைவன் உமா மகேஸ்வரன் ,
ஈழ விடுதலைப் போரினை இதயத்தில் சுமந்த விடுதலை சூரியன், எங்கள் உமா மகேஸ்வரன்” எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்துக்கான ஒருதொகை கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் திரு த.அகிலன் அவர்களிடம் நேற்று (18.02) கையளிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு எஸ்.சஞ்சீவன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பாடலின் இணைப்பு – https://www.youtube.com/watch?v=Pg5L7_wDX5U&feature=youtu.be
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 9ம் திகதி தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்டதாரிகளுடனான சந்திப்புக்கு நாளை 20.02.2015 வெள்ளிக்கிழமை வவுனியா பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது .
வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா கண்டி வீதியில் சனச அபிவிருத்தி வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்படுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் மேற்படி சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஆனந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கத்தோலிக்க, ஆர்தோடக்ஸ், கொப்டிக் அல்லது லூதர்ன்ஸ் என எந்த பிரிவை கொண்டிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகள் கிறிஸ்துவரை சார்ந்து உள்ளதால் அவர்கள் அனைவரும் ஒரே மதம் தான்.
பலியானவர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இறப்பதற்கு முன்பு ‘Jesus help me’ என்பது தான் கடைசி வார்த்தைகளாக இருந்ததாக போப் தெரிவித்துள்ளார்.
21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து எகிப்து மற்றும் லிபியா நாட்டு ராணுவங்கள் அங்குள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் ஐ.எஸ் பகுதிகளில் குண்டுகளை பொழிந்து பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக பல புகைப்படங்களை எகிப்து நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும், தாக்குதல் குறித்து பேசிய லிபியா ராணுவ அதிகாரி, வான்வெளி தாக்குதல் நடத்தியபோது பொதுமக்கள் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ராணுவ தாக்குதல், சமயங்களில் பொது மக்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய ராஜஸ்தானில் கழிவறைக்குள் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவுரி பல்பி (32) என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர், தாயாருடன் சூரத்காரில் இருந்து ஹனுமன்காருக்குய் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ஹனுமன்கார் ரயில்வே நிலையத்திற்கு 13 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னால், பல்பிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்ற அவருக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
பல்பி மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை கழிவறை தொட்டியின் வழியே ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டது. ரயிலும் ஹனுமன்கார் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி கழிவறையில் இருந்து வெளியே வராததால் அவரது கணவர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் கழிவறையின் கதவை திறந்து, மயங்கி கிடந்த பல்வியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தண்டவாளத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர், தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது, அவருடனான சந்திப்பின்போது, மோடி 10 லட்சம் மதிப்புள்ள கோட்டை அணிந்திருந்தார்.
அதில் அவருடைய பெயர் சிறிய எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்தன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய “கோட்’ குஜராத் மாநிலத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து சூரத் மாநகராட்சி ஆணையர் மிலிந்த் தோராவனே பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது, ஒபாமா வருகையின் போது மோடி அணிந்திருந்த கோட், அத்துடன் கடந்த 9 மாதங்களில் மோடி தனது ஆட்சியில் பெற்ற 455 பரிசுப் பொருள்களும் புதன்கிழமை முதல் ஏலம் விடப்படும்.
இந்த ஏலத்தில் திரட்டப்படும் நிதி “கங்கையை தூய்மைப்படுத்தும்’ திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஏலம் எஸ்எம்சியின் அறிவியல் மாநாட்டு மையத்தில் நடைபெறும். சூரத்தில் இந்த ஏலத்தை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்நிலையில் ஈராக்கின் மேற்கு நகரான அல்பாக்தாதியில் 45 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.
இதுகுறித்து ஈராக்கின் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
எனினும் அவர்களில் சிலர் பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பர் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினர் இருக்கும் வீடுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இருக்கும் வீடுகள் சிலவற்றை சுற்றிவளைத்துள்ளதால், இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரி அரசாங்கத்திடமும், சர்வதேச சமூகத்திடமும் உதவி கோரியுள்ளார்.
பாரிசில் கறுப்பினத்தவர் ஒருவரை ரயிலில் ஏற விடாமல் கால்பந்து ரசிகர்கள் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பிரித்தானியாவை சேர்ந்த செல்சி அணியுடன், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி மோதியது.
போட்டியை காண்பதற்காக ஏராளமான செல்சி அணி ரசிகர்கள், ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது கறுப்பினத்தவர் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது, அவரை அனைவரும் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.
எனினும் அதனை பொருட்படுத்தாது ரசிகர்களை தள்ளி விட்டு ஏற முயன்ற அந்த கறுப்பினத்தவரை அனைவரும் சேர்ந்து மீண்டும் கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதனால் அவரால் அந்த ரயிலில் ஏற முடியாமல் போயுள்ளது. இச்சம்பவத்தை ரயில் நிலையத்தில் குவிந்திருந்த ஏராளமான மக்கள் பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ரயிலில் ஏறிய பிரித்தானிய கால்பந்து ரசிகர்கள், “நாங்கள் இனவெறி பிடித்தவர்கள்… இப்படிதான் நடந்து கொள்வோம்” என்று கூச்சலிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை பொலிசில் புகார் செய்யப்படவில்லை என்றாலும், செல்சி அணியின் நிர்வாகம் அந்த ரசிகர்களை இனம் கண்டு அவர்களின் பருவக்கால பயணச்சீட்டுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், தமிழ் மாநில கட்சியில் இணைந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை நேற்றிரவு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். உடனே அவருக்கு கட்சி நிறுவனர் பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மாநில கட்சியின் தேர்தல் சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து பால்கனகராஜ் பேசியதாவது, 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மாநில கட்சி எழுச்சியுடன் வீறுநடை போடுகிறது.
ஏராளமான இளைஞர்கள், படித்தவர்கள் தமிழ் மாநில கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் முன்னேற வேண்டும். மக்களுக்கு அரசு இலவசங்களை தருவதை நிறுத்தி விட்டு கல்வியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.
67ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது, இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற பஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு இன்று காலை சென்ற குறித்த பஸ் புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் நையினமடுவுக்கு அருகில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளது.
இவ் விபத்தில் பேருந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகிய போதிலும் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
நேற்று சிவராத்திரி தினமாகையால் திருகேதீஸ்வரம் ஆலயத்திற்கான சேவையில் ஈடுபட்டு, இன்று காலை தமது வழமையான சேவையில் சாரதி ஈடுபட்ட போது, தூக்கக் கலக்கம் காரணமாகவே இவ் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.