வவுனியா வர்த்தக சங்கத்தால் காரசார விவாதம் : அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சலசலப்பு!!

வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் முன்வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுனர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நேற்று(26.07) இடம்பெற்றது. இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் திட்ட முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டது.

இதன்போது நகரில் ஏற்க்கனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டங்கள் தொடர்பாகவும், நகரில் உள்ள காணிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் எவ்வாறான நடவடிக்கையினை எடுப்பது என்று அபிவிருத்திகுழு தலைவரால் கோரப்பட்டதுடன்,

வவுனியா வர்த்தக சங்கத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி அரச காணியாக இருப்பதால் பிரதேச செயலாளர் ஏன் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ஆளுனரால் கோரப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக நகரசபைக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை. அப்படியானால் வர்த்தகசங்கம் செய்தது தவறு நான் செய்தது பிழையா என்று தெரிவித்தார்.

எனினும் காணி பிரதேச செயலாளரின் கீழ் இருப்பதால் நீங்கள் கட்டடம் அமைக்க முன்னரே அதற்கான நடவடிக்கையினை எடுத்திருக்க வேண்டும் என்று ஆளுனர் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட குழுக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா நகரில் இவ்வாறு பல கட்டடங்கள் அனுமதியற்று கட்டப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்த ஆளுனர் ஏற்கனவே அமைக்கப்படிருந்த கட்டடங்களின் பெறுமதிக்கமைய அவர்களிடமிருந்து குத்தகையினை அறவிட்டு குத்தகை அடிப்படையில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!!

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று (26.07.2023) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுனரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமையுடன்,

வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை இவ் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுனர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கட்டிடத்தினை வடமாகாண ஆளுனர் பி.எஸ்எம்.சாள்ஸ் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன், உள்ளூராட்சி அதிகாரிகள், ஆளுனர் அலுவலக அதிகாரிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் சீனி தொழிற்சாலைக்கு என 400 ஏக்கர் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் ஆளுனரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

அது தொடர்பில் தெரியாது எனவும் மேலும் அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு பணிக்க வேண்டிய தேவை எனக்கில்லை இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது தெரிந்தால் அறிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவனுக்கு கிடைத்த அங்கீகாரம் : உலக அளவில் குவியும் பாராட்டுக்கள்!!

கல்யா கந்தேகொட கமகே..

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவன் சர்வதேச விருதொன்றை வென்றுள்ளார்.14 வயதான கல்யா கந்தேகொட கமகே என்ற சிறுவனே இவ்வாறு மவுண்ட் பேட்டிங் என்னும் பதக்கத்தை வென்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகளில் நாடு ஒன்றில் ஓர் ஆண்டில் மேற்கொண்ட மிகச்சிறந்த உயிர் காப்பு வீரதீர செயலுக்கான விசேட அங்கீகாரம் இந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலகில் இந்த வீர பதக்கத்தை வென்ற மிகவும் இள வயது சிறுவனாக கல்யா கருதப்படுகின்றார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி படகு விளையாடில் ஈடுப்பட்ட போது , அவரது 11 வயது சகோதரர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது சம்பவத்தை அறியாது கரைக்கு நீந்தி வந்த கல்யா, மீண்டும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் நீந்தி சென்று தனது சகோதரனை மீட்டு தரைக்கு கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் இந்த வீர செயல் பெரும் அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

56 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த ஆண்டில் பதிவான மிகச்சிறந்த வீரச் செயலாக இந்த செயல் கருதப்படுகின்றது.தனது சகோதரனே பாதுகாத்த கல்யாவிற்கு அரச உயிர் காப்பு சங்கத்தின் மவுண்ட் பாட்டின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய வெள்ளைக்காரர்!!

கனடாவில்..

நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் முருகனுக்கு காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் கனடா – மொன்றியல் முருகன் (montreal val morin murugan temple) கோவிலில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. வேல் முருகன் கோவில் உற்சவத்தின் தேர்த் திருவிழா தினமன்று குறித்த நபர் காவடி எடுத்துள்ளார்.

தமிழர்களின் ஆதிகடவுளான முருகனுக்கு இந்துக்கள் பக்தி பூர்வமாக காவடி எடுத்து நேர்த்திகடன்கள் செய்வது வழமை. ஈழத்தில் மட்டுமல்லாது , புலம்பெயர் தேசத்திலும் நம் பாரம்பரியங்கள் நம் மக்கள் வாழும் இடமெல்லாம் வியாபித்துள்ளது.

அதேசமயம் எமது தெய்வங்களின் மீது வெளிநாட்டவர்களும் ஆர்வம் கொண்டு வணங்கி வருவதும், தமிழர் திருநாளை கோலாகலமாக கொண்ட்டாடியும் வருகின்றனர்.

அந்தவகையில் கனடா முருகன் ஆலயத்தில் (montreal val morin murugan temple) வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்து தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளமை இந்து மக்களை புழகாங்கிதமடைய வைத்துள்ளது.

இலங்கையில் தாய் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம் : பெண்ணின் நகை அடகு கடையில்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் தொழில்நுட்பத்தின் ஊடாக பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனவே இது தொடர்பிலான உண்மைத் தன்மையை உறுதியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சந்தேக நபரை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் அண்மையில் இளம் தாயும் ,கை குழந்தையும் படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் வடமராட்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் மாவட்டம் – வடமராட்சி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (25-07-2023) மந்திகை, மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டு சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா வாள்வெட்டு, தீவைப்பு : உயிரிழந்த இளம் தம்பதிகள் : களமிறங்கிய கொழும்பு பொலிசார்!!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று (26.07) சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிறு அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.

இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம் : மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

மஹரகமவில்..

மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தாம் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் சமிந்து திவங்க என அழைக்கப்படும் கணவர் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், தெமட்டகொடயில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து கேட்டதாகவும், அவர்கள் வரவில்லை என கூறியதாக திவங்க குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு புகையிரத்தில் இப்படியும் சம்பவம் : யுவதிகளே அவதானம்!!

கொழும்பில்..

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த நிலையில் அதனை அவதானித்த இளைஞர்கள் நன்றாக கவனித்துள்ளனர்.தனது கைத் தொலைபேசியை சூம் பண்ணி யுவதியின் அந்தரங்கப் பகுதியை குறித்த பயணி காணொளி எடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபரை நையப்புடைத்த இளைஞர்கள், பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளைங்களில் வெளியாகியுள்ளது.

எனவே பேருந்துகளில் , புகையிரதங்களில் வெளியிடங்களுக்கு பயணிக்கும் யுவதிகள் இதுப்[ஓன்றவர்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இளைஞனும் மரணம்!!

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று(26.07.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலையில் சடுதியாக பதிவான தலைகீழ் மாற்றம்!!

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.நேற்றைய தினம் (24.07.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்தது.

அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக காணப்படுகிறது.இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய விலைகளின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை கடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலையில் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்ட உணவு திருவிழா!!

யாழ்.பல்கலைக்கழகத்தில்..

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் உணவுத் திருவிழா இடம்பெற்றுள்ளது.

இந்த உணவுத்திருவிழா சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில் காலை 9.30 மணியளவில் உணவுத் திருவிழா ஆரம்பமானது.

தமிழ் சிங்கள இஸ்லாமிய கலாசார உணவு வகைகள் மற்றும் மேலைத்தேய உணவு வகைகள், குடிபானங்கள் என பல்வேறுபட்ட உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இரண்டாம் ஆண்டு முதலாம் அரையாண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவுத் திருவிழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறைத்தலைவரும் பேராசிரியருமான சி.சிவேசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு தனிப்பட்ட பிரச்சனையே காரணம் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 23.07.2023 அன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டமையுடன் வீட்டிற்கும் தீ வைத்தததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததமையுடன் பத்து நபர்கள் தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்பி ருவான் குணசேகர, குறித்த வீட்டில் வசித்து வந்த 19வயது சிறுமியின் பிறந்தநாள் வைபவம் 22ம் திகதி இரவிலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.

இதன் போது வீட்டிற்கு வருகை தந்த சிலரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளமையுடன் வீட்டு உரிமையாளருக்கு பாரிய ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரனையில் தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டமையுடன்,

காயமடைந்தவர்களில் 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களின் ஒருவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்படத்தக்கது.

காணாமல் போயுள்ள தாயையும் சிறுமியையும் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!!

ஹங்குரன்கெத்தயில்..

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ள 21 வயதுடைய இளம் தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய மகளைத் தேடி ஹங்குரன்கெத்த பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த யுவதி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். ஹங்குரன்கெத்த ஹோப் பகுதியில் வசித்து வந்த சுரேந்த ராணி என்ற தாயும், தருஷிகா அபி என்ற சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு கடந்த 17ஆம் திகதி மருத்துவ தேவைக்கருதி தனது மகள் அவரின் சிறிய மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக காணாமல் போன பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக, அருகில் உள்ள சிசிரீவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவரது கணவர் எப்பொழுதும் குடித்துவிட்டு பெண்ணுக்கு இடையூறு செய்வதாகவும், இதனை பொறுக்க முடியாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறித்த தாயும் மகளும் ஏதேனும் வீட்டில் பாதுகாப்பு கருதி தங்கியிருந்தால் ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0718-591055 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி : உயிரை மாய்த்துக் கொண்ட சித்தப்பா!!

ஹொரவபொத்தானயில்..

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்தத்தையும் சந்தேக நபரின் இரத்தத்தையும் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தான ஒலுகஸ்கடவல பகுதியை சேர்ந்த சமன்சிறி என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.சிறுமியை பலாத்காரம் செய்த நபர் தனது முந்தைய திருமணத்தின் மனைவியை கைவிட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது மனைவியின் சகோதரியின் 12 வயது மகளை இரண்டாவது திருமணத்தில் இருந்து பலாத்காரம் செய்துள்ள நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையின் இரத்த மாதிரிகள் மற்றும் சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்ப முயற்சித்த போது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தம்பதிக்கு நேர்ந்த சோகம் : தாலியை கழட்ட சொல்லி அதிகாரிகள் அட்டூழியம்!!

சென்னையில்..

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மலேசியா வாழ் தமிழ் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் , பெண்னின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டசொல்லி அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில்,இன்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மலேசியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதி வெளியே வருகையில் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் பெண் அணிந்திருந்த தங்க தாலி செயினை கழட்ட சொல்லி வற்புறுத்திய நிலையில் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண் நாங்கள் கல்யாணம் முடிந்ததில் இருந்து என் தாலியை நான் கழட்டி வைத்தது இல்லை என்று தெரிவித்த நிலையில், அவரது கணவர் அதிகாரிகளிடம் எப்படி தாலியை கழட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியர்கள் கிடையாது என்றும் நீங்கள் மலேசியன் என்று கூறியுள்ளார். அப்போது அந்த தம்பதிகள் எங்களுக்கு எவ்வளவு நகை கொண்டு வரவேண்டும் என்று தெரியாது என்றும் எவ்வளவு அபராதம் என்றும் கேட்டுள்ளார்.

மேலும் தங்களை விமான நிலையத்தில் 2 1/2 மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாய் மாதிரி ட்ரீட் செய்ததாக கூறிய அந்த பெண் அதுமட்டுமல்லாது தன் கணவரிடம் இருந்த நகையை அதிகாரிகள் பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாது தங்கள் நகை மீட்க லட்சக்கணக்கில் சுங்கத் துறை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுங்கத்துறை அதிகாரிகள் தனக்கு அபரதமாக 7 லட்சம் ரூபாய் எழுதியதாகவும் பின்னர் அதை ரூ 5 லட்சமாக குறைத்தாகவும் அப்போது அங்கிருந்த மற்றொரு சுங்கத்துறை அதிகாரி ஏன் சார் இவ்வளவு குறைத்துவீட்டீர்கள் என கேள்வி எழுப்ப, மற்றொரு அதிகாரி பிழைத்து போகட்டும் என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இது இந்தியா..என்ன நடக்குது.. ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துறீங்க… இது இந்தியா 10 கிராமில் தான் தங்கம் கொண்டு வரவேண்டும் என்றால் எப்படி முடியும் என்றும் அப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் சம்பவம் குறித்து மலேசியன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறியுள்ளார்.