ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.
சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜோர்ஜ் சீலன் 1971 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக முதன்முறையாக இலங்கைக்கு வந்தார்.அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் இந்நாட்டுக்கு வந்துள்ளார்.திருமணமாகாத ஜோர்ஜ் சீலன் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கையின் வீதி அமைப்பு தற்போது மிகவும் முன்னேறியுள்ளது. இலங்கை அன்றைய காலத்தை விட மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது. நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28.07.2023) இலங்கை வருகின்றார்.
பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.
“La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.30 ஆவது முறையாக இடம்பெறும் இந்த போட்டியில், இந்தமுறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம் மிக்க baguette போட்டிக்கு பாணைத் தயாரித்து அனுப்பியிருந்தனர்.
இதில் தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து,முதலிடத்தைப் பிடித்திருந்ததுடன் வெற்றி பரிசாக 4000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார்.அத்துடன் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியது.
2009ஆம் ஆண்டு முதல் அவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.இந்தநிலையில் இன்றைய தினம் (28) இலங்கை வரும் அவர் அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.
குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் 59 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் மீதமுள்ள மூன்று பேர் ஆண் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக விடுதிகளில் தங்கி, பல்வேறு பணியிடங்களில் மாதந்தோறும் பணிபுரியும் இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
250 குவைத் தினார் சம்பளம் பெற்று விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என்று அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இலங்கையில் உள்ள குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சுகவீனம், வயோதிபம் போன்ற காரணங்களால் இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் இவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் பதிவு செய்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றங்களுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் பணியாற்றி வருகின்றது. அவர்களுக்கான தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை விட்டு அனுப்பியது. இக்குழுவினர் இன்று காலை 5 மணியளவில் குவைத் நாட்டில் இருந்து அல் ஜசீரா விமானம் ஜே.-9555 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர ஆகிய பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உறவினர்களான இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (28.07.2023) முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்புக்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள மனிதபுதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும் அதற்கு, சர்வதேசநிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தால் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்தவகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன்,மொத்த வியாபாரசந்தையின் செயற்பாடுகள்ளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை முன்னெடுத்திருந்தது.
குறிப்பாக நகருக்கு வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், சேவைகளை பெற்றுக்கொள்ள சென்ற பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.
பாடசாலைகள் வழமைபோல திறக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டிருந்தது
யாழ்ப்பாணம், தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் சிறிய வீட்டில் வசித்து வந்த தம்பையா சறோசா (வயது 82) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (27.07.2023) மட்டுவில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அருகில் உள்ள பால் சாலைக்குச் சென்று திரும்பும்போது மூதாட்டியின் நாய் பெண்ணின் ஆடையைப் பிடித்து மூதாட்டியின் வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளது.
வீட்டினுள் மூதாட்டி சடலமாகக் காணப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மட்டுவில் வடக்கு கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.மூதாட்டி உயிரிழந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உடல் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து மூதாட்டியின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023) வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக முந்தலம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமியர் தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தலகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாயமான சிறுமிகளின் நண்பர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுடன் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்வதாகவும், அந்த பயணத்திற்கு செல்வதற்கு தாயாரிடம் அனுமதி கேட்டதாகவும் தாய் அனுமதி வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறுமிகள் தமது தாயாரிடம் 500 ரூபாவை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை தாய் வழங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான பெண்ணின் மகளை பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து விட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் மறந்து விட்டு சென்ற பைக்குள் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் அடங்கிய பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு முச்சக்கர வண்டி சாரதி செயற்பட்டுள்ளார்.
மாலைத்தீவைச் சேர்ந்த தந்தை, தாய், மகள், மகன் ஆகிய நால்வரும் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக மிஹிது மாவத்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
அதற்கமைய, கடந்த காலை குடும்பத்தினர் அனைவரும் பல பைகளுடன் வந்து பிரசாத் ரொட்ரிகோ என்பவரின் முச்சக்கரவண்டியைப் பெற்றனர். பயணத்தின் முடிவில், ஒரு பையை மறந்து விட்டது சென்றுள்ளனர்.
அதனை அவதானிக்காமல் வந்த சாரதி சிறிது நேரத்தின் பின்னர் கவனித்துள்ளார்.அதன் பின்னர் மீண்டும் அந்த குடும்பத்தை தேடி சென்று பையை ஒப்படைத்துள்ளார். பணப்பை சோதனையிட்ட வெளிநாட்டவர் இலங்கையரின் நேர்மையை பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது. கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உக்ரைனுடனான ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் இரண்டு பெரிய தானிய உற்பத்தி நாடுகளாக அறியப்படுகின்றன. இருப்பினும், தானியக் கப்பல்களைத் தவிர பயணிகள் கப்பல்கள் கருங்கடல் வழியாக செல்ல ரஷ்யா அனுமதிக்காது என்று பிரித்தானியா குற்றம் சாட்டியது.பயணிகள் கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக கருங்கடலில் கடல் குண்டுகளை ரஷ்யா சேர்த்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளது.
அஹங்காம மலைக்கு அருகில் உள்ள கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை அவதானித்த அண்ணன் ஜனித சதுரங்க அவ்விடத்திற்கு சென்றுள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட அவர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது சகோதரனைக் காப்பாற்றும் நோக்கில் கடலில் குதித்தார்.ஆரம்பத்தில் கடல் அலையில் சிக்கிய சமீர சந்தருவன் நீண்ட நேர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வேடசந்தூர் அருகே சரக்கு வேன் ஓட்டுனர் தற்கொலை – தற்கொலைக்கான காரணம் குறித்து செல்போனில் பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது 25) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வினோதினி கிருஷ்ணமூர்த்தியுடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி தனியாக வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அவர் தந்தை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் எடுக்காததால், அவர் வசித்து வரும் வீட்டிற்கு தேடிவந்துள்ளார்.
அங்கு அவரது செருப்புகள் வெளியே இருந்த நிலையில் மீண்டும் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரிங் உள்புறம் ஒலிக்கவே, வேசந்தேகப்பட்டு அவர் கதவை உடைத்துள்ளார். இதையடுத்து கதவைத் திறந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் நூல் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து தொங்கிய நிலையில் கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
அதில் தனது மனைவி வினோதினி 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் என்றும், இதனால் தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும் தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்தி கண்ணீர் சிந்தி பேசியுள்ளார்.
மேலும் தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக்கொள்ளும்படியும் தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேசியுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆர்ப்பரித்து கொட்டிய அருவியை ரசித்துப் பார்த்த 23 வயது இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் அரிசினங்குடி அருவியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.
இதனை 23 வயது இளைஞர் ஒருவர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு பார்த்துக் கொண்டிருப்பதை அருகில் மற்றொருவர் காணொளி எடுத்துள்ளார்.
இளைஞர் ஒரு கட்டத்தில் தனது கால்களை மெதுவாக அசைத்த போது, வழுக்கி கரைபுரண்டு ஓடும் அருவியில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
VIDEO | A man died in Karnataka’s Udupi after falling into an overflowing waterfall. pic.twitter.com/gP1q1L6EG7
கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளயது.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.
தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.’யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (26.07) பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த பெண் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று (26.07.2023) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்படி,
இந்த மரண விசாரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சி விசாரணை இன்று நீதிமன்றில் நிறைவடைந்த நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதேவேளை பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் இருந்தபோது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இவ் ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகசங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஆகிய தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, எமக்கு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை, கோரிக்கை எவையும் கிடைக்கப்பெறாமையினால் எவ்வித தீர்மானமும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது,
எமது பேரூந்துகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் சேவைகள் ஈடுபடுத்தப்படாது என்பதுடன் ஏனைய பகுதிகளுக்கான சேவைகள் பேரூந்து உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர்..
இவ்விடயம் தொடர்பாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, மாவட்டத்திலுள்ள ஏனைய சங்கங்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடக அமையும் எனவும் இதுவரை எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட சிகை அலங்கார சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது, சங்கத்தில் இது தொடர்பில் எவ்வித கூட்டங்களும் இடம்பெறவில்லை என்பதுடன் எமது நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சங்கத்தினரை தொடர்பு கொண்டு வினவிய போது,
ஹர்த்தாலுக்கு எமக்கு எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதினால் சங்கத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவே நாளை வழமை போன்று இயங்கும் என தெரிவித்தனர்.