வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30.07.2023) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.. கதறும் பழங்குடியினப் பெண்!!

மணிப்பூரில்..

மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி முதல் இரு சமூகத்தினரிடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், 6000க்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற கொடுமைகள் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வன்முறை கும்பல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதில் ஒரு பெண்ணை தீயிட்டு கொளுத்தியதும் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது மற்றுமொரு பழங்குடியினப் பெண், மே 15ம் தேதியன்று தானும் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊடகங்களிடம் பேசிய 19 வயது பழங்குடியினப் பெண், “கலவரக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஏடிஎம்-முக்குள் சென்றேன். ஆனால், 4 பேர் வெள்ளை நிற பொலேரோவில் வந்து கடத்திச் சென்றனர்.

டிரைவரைத் தவிர, அவர்களில் 3 பேர் என்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் ஒரு மலைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் இரவு முழுவதும் என்னைச் சித்ரவதை செய்தனர்.

சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. என்னை எந்த அளவுக்குக் கொடுமைபடுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தினர். குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அடுத்த நாள் காலை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது. அவர்களில் ஒருவன் என்னை அவிழ்த்து விட்டான்.

அப்போதுதான் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன். பிறகு அங்கிருந்து ஒருவழியாகத் தப்பித்துவிட்டேன். அதன் பிறகு மே 21-ம் தேதிதான் போலீசில் புகாரளிக்க முடிந்தது” என்றார். தப்பிக்கும்போது காய்கறி குவியலில் மறைத்திருந்த அந்தப் பழங்குடிப் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டார். அதன் பிறகு அந்தப் பெண் சொந்த ஊரை அடைந்தார்.

அதையடுத்து அவர், பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, 21-ம் தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கிலும் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் கைது செய்யப்படவில்லை என்ற வாசகமே தொடர்கிறது.

இருப்பினும் இதில் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறும் போலீஸ் தரப்பு, “பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாதது விசாரணைக்கு இடையூறாக இருக்கிறது. ஆதாரம் இல்லாததால் இத்தகைய பெண்களுக்கு நீதி கிடைப்பது சவாலான விஷயமாக மாறியிருக்கிறது” என்று கூறுகிறது.

கொரோனா காலத்தில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்… 3 கொலையில் முடிந்த திருமணம்!!

அஸ்ஸாமில்..

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் வசிப்பவர் நஜ்பூர் ரஹ்மான். இவரின் மனைவி சங்கமித்ரா கோஷ் (24). இருவருக்கும் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பொறியாளரான நஜ்பூர் சங்கமித்ராவுடன் பழகிய சில மாதத்தில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

உடனே அதே ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கொல்கத்தா சென்று திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் சங்கமித்ராவை அவரின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

ஆனால், சங்கமித்ரா வீட்டிலிருந்து நகைகளைத் திருடிவிட்டதாக அவரின் பெற்றோரே போலீஸில் புகார் செய்தனர். அதனடிப்படையில் சங்கமித்ரா கைதுசெய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு மீண்டும் தன் பெற்றோர் வீட்டுக்கே சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் சங்கமித்ரா நஜ்பூருடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இருவரும் சென்னைக்குச் சென்று சில மாதங்கள் வசித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் மீண்டும் கோலாகட்டுக்குத் திரும்பிவந்தனர். சங்கமித்ரா கர்ப்பமாக இருந்தார்.

கடந்த நவம்பரில் சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தன் கணவர் தன்னை சித்ரவதை செய்வதாகக் கூறி போலீஸில் புகார் செய்தார். இதனால் நஜ்பூர் கைதுசெய்யப்பட்டார். சங்கமித்ரா தன் குழந்தையோடு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

நஜ்பூர் ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தபோது தன்னுடைய குழந்தையைப் பார்க்க விரும்பினார். ஆனால், சங்கமித்ராவின் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதோடு சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்ற நஜ்பூர் தாக்கப்பட்டார். மீண்டும் நஜ்பூர் தன் மகனைப் பார்க்கச் சென்றார்.

இம்முறை இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நஜ்பூர் தன்னுடைய மனைவி மற்றும் அவரின் பெற்றோரைக் கொலைசெய்தார். பின்னர் தன் ஒன்பது மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

போலீஸார் சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்றபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ரீல்ஸில் மோகம்… 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய பெற்றோர்!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்று தம்பதியர் ஐபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய சமூகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நடித்து பதிவேற்றுவதை விரும்பி செய்து வருகின்றனர். இந்த ரீல்ஸ் எடுக்கும் மோகத்தால், தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பல தவறுகளையும் செய்து வருகின்றனர்.

இது போன்ற ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்கு விலை உயர்ந்த செல்போன்களை தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள். அந்த செல்போன்களை வாங்குவதற்கும், பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின், பர்கானாஸ் மாவட்டம், பராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்தேவ் – சதி தம்பதிக்கு இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் மோகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், புதியதாக ஒரு ஆப்பிள் போன் வாங்க ஆசை பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தரமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக ஐபோன் வாங்க முடிவு செய்து தங்களது 8 மாத ஆண் குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று புது ஐபோனை வாங்கி உள்ளனர்.

இதையறிந்த அக்கப்பக்கத்தினர் அளித்த தகலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை விற்றது அம்பலமானது. இதனால் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு மற்றும் குற்றவாளி பெற்றோரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காதலை ஏற்க மறுத்த பெண்.. இரும்பு கம்பியால் துடிக்க துடிக்க அடித்தே கொன்ற இளைஞன்!!

டெல்லியில்..

டெல்லியில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25).

இவருக்கு இர்ஃபான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்ஃபான் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்துள்ளார். ஆனால் நர்கீஸ் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் நர்கீஸ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளான். பின்னர் நர்கீஸ் பேச மறுத்த நிலையில் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான்.

இதனை நம்பி வந்த நர்கீஸை ஈவு இறக்கமின்றி இரும்பு கம்பியால் துடிக்க துடிக்க அடித்து கொன்றுள்ளான். பின்னர் நர்கீஸ் உடலை கல்லூரி அருகே வீசிவிட்டு சென்றுள்ளான். மறுநாள் தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே நர்கீஸின் சடலம் கிடந்துள்ளனது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.

பெண்ணின் உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. விசாரணையில் இர்ஃபானுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இர்ஃபான் தான் கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். பின்னர் போலீசார் இர்ஃபானை கைது செய்தனர்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார். அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கூறினார்.

ஜிம் பயிற்சியின்போது காதல் : 40 வயதுப்பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞர் தற்கொலை!!

டெல்லியில்..

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து சென்றதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

டெல்லியின் தாப்ரியில் வியாழக்கிழமை இரவு 40 வயது பெண் ஒரு இளைஞர் அவரது காதலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண் ரேணு கோயல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொஞ்சம் அருகில் நின்றே அந்த நபர் சுட்டுள்ளார். ‘பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச்’ என்று துப்பாக்கி சூட்டில் கூறப்படும் தூரத்தில் இருந்து அவர் சுடப்பட்டுள்ளர்.

அதாவது புல்லட் துப்பாக்கியை விட்டு வெளியேறி, கீழே சாயாமல் நேராக செல்லும் தூரம் வாரை பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணை கொலை செய்த பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நபர், 23 வயதான ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்ணைக் கொன்றுவிட்டு வீட்டுக்குச் சென்ற வாலிபர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக தெரிகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் குறித்து வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு குழு மூலம், அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தொழிலாளியின் மனைவி ரேணு கோயல், அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண் உதவி கேட்டு அலறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து செல்வதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

“அந்தப் பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார், துப்பாக்கி ஏந்தியவர் அந்த இடத்திற்குச் சென்று அவரைச் சுட்டார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கொலை நிகழ்வு எஃப்ஐஆராக பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று டிசிபி (துவாரகா) எம் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு ஒரு குழு சென்றது. சந்தேகத்திற்குறிய அந்த நபர் வீட்டின் மொட்டை மாடியில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பின்பு தெரியவந்தது.

அதே ஆயுதம் பெண்ணின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். டிசிபி ஹர்ஷவர்தன் கூறுகையில், “ஆஷிஷ் மற்றும் ரேணு இருவரும் ஒரே ஜிம்மிற்கு சென்றதால் ஒருவரையொருவர் அறிந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் அறிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்து வருகிறோம்.” என்றார்.

பிரிந்து வாழ்ந்த பெற்றோர் : யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவால் வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றிரவு (28) குறித்த யுவதி துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த யுவதி சப்ரகமுவ பல்கலையில் கல்வி பயின்று அண்மையிலேயே பட்டதாரியாக பட்டம் பெற்றவர் என கூறப்படுகின்றது.

யுவதியின் பெற்றோர் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளின் பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் நன்றாக கல்வி கற்று பட்டதாரியாகி நல்லதொரு நிலைக்கு வந்த மாணவி , வாழவேண்டிய வயதில் பெற்றோர் பிரச்சனையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாலிக்கொடியை களவாடிய ஆசிரியை கைது!!

புத்தளத்தில்..

புத்தளம் – உடப்பு பகுதியில் சக ஆசிரியை ஒருவரின் தாலிக் கொடியை களவாடியதாக மற்றுமொரு ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடியொன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

தாலிக்கொடியை அணிந்திருந்த ஆசிரியையின் கழுத்தில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தாலிக்கொடியை கழற்றி பணப்பையில் வைத்து விட்டு கற்பிக்கச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதிபர் அழைத்த காரணத்தினால் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ஆசிரியை, மீண்டும் வகுப்பறைக்கு சென்று பணப்பையில் வைத்த தாலிக்கொடியை தேடியுள்ளார்.

இதன்போது பணப்பையில் தாலிக்கொடி இல்லை என்பதனை அறிந்துகொண்ட ஆசிரியை இது குறித்து அதிபருக்கு அறிவித்துள்ளார்.அதிபர் வகுப்பறையில் மாணவர்களிடம் விசாரணை செய்த போது, சக ஆசிரியை ஒருவர் பணப்பையை திறந்து தாலிக்கொடியை எடுத்துச் சென்றார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதிபர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.சந்கேதத்திற்கிடமான ஆசிரியையிடம் பொலிஸார் நீண்ட விசாரணை நடத்திய போது, தாலிக்கொடி மற்றும் ஒர் தங்க சங்கலி என்பனவற்றை தாம் களவாடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பாடசாலை வளாகத்தில் ஒர் இடத்தில் கைகளினாலேயே குழி பறித்து அதில் இந்த ஆபரணங்களை மறைத்து வைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.பின்னர் சந்தேகத்திற்குரிய ஆசிரியை கைது செய்த பொலிஸார், ஆசிரியையை புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் மகனின் துணையுடன் தந்தை அரங்கேற்றிய கொடூரம்!!

பதுளையில்..

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பெண் கொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது.தந்தை , மகன் மற்றும் தாய்க்கு இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவியை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பெண்ணின் 70 வயது கணவர் மற்றும் அவர்களது 26 வயதான மூத்த மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

பாட்னாவில்..

பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார். அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர்.

இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் காதலித்து வந்தது ரவிக்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது.

அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகா சவுத்ரியை சந்திக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று கூறி ரவிக்குமாரை மிரட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் வைத்து, ரவிக்குமார், அதிகா சவுத்ரி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. திருமணம் முடிந்தவுடன் இருவரும் ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ரவிக்குமாரின் தந்தை சத்யேந்திர சிங், தாய் மற்றும் மூத்த சகோதரர் தஞ்சய் சிங் மூவரும் சேர்ந்து, இருவரையும் அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் வேறு பகுதிக்கு சென்று குடியிருந்துள்ளனர்.

இந்தச் சூழலில், கடந்த 13ஆம் தேதி ரவிக்குமார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. ரவிக்குமார் அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார்.

இந்த நிலையில், ரவிக்குமார் நேற்று(ஜூலை 25) தனது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது டானாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநங்கையை திருமணம் செய்ததற்காக தனது பெற்றோர் மற்றும் சகோதரர் தன்னை மிரட்டுவதாகவும், அண்மையில் தன்னை கொல்ல முயற்சி நடந்துள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிக்குமார் கூறும்போது, “நான் திருமணம் செய்வதற்கு முன்னரே எனது இணையரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு முறை அதிகாவை சந்தியுங்கள், எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று என் பெற்றோரிடம் கேட்டேன்.

ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். என் பெற்றோர் என்னை அடித்தார்கள், என் சகோதரர் என்னை மிரட்டுகிறார்” என்றார்.மேலும், ரவிக்குமாரின் குடும்பத்தினர் 60 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்பதாக அதிகா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தகராறில் இளைஞன் வெட்டிக் கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

தமிழ்நாடு..

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை ஊராட்சியில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலையில் மோப்ப நாயுடன் துப்பு துலக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்ட மொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சுதாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று மதியம் 2:30 மணிக்கு அப்புவிளை சாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்கு சென்று முத்தையாவை நேரில் சந்தித்துள்ளார் சுதா.

பின்னர் நான்கு முப்பது மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை இட்ட மொழியில் கொண்டு விட்டு விட்டு திசையன்விளை வந்துள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே வந்தவர் இரவு 9:30 மணி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்புறங்களில் தேடி உள்ளனர்.

அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை எஸ்.பி.யான சிலம்பரசன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை சுதாவின் உறவினர் வீடுகள் அமைந்துள்ள இட்டமொழி படப்பார்குளம் பகுதிகளில் தேடி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலை சம்பவம் நடைபெற்ற காரம்பாடு பகுதியிலும் காவல்துறையினர் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திசையன்விளை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29.07) காலை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில்,

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை தொடர்கின்றமையுடன் அதே கிராமத்தினை சேர்ந்த 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

12 வயது மாணவனை கொன்று வீசிய 18 வயது இளைஞன்.. பதறவைத்த சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 12 வயது மாணவனை 18 வயது கல்லூரி மாணவன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ்.

இவரது மகன் மணிகண்டன், 7ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 20ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளான்.

அங்கு திருவிழா முடிந்து பல மணிநேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் தேடி அலைந்துள்ளனர். அப்போது தான் அருகில் உள்ள குளத்தில் மணிகண்டன் பிணமாக கிடந்தது தெரியவந்தது, உடனடியாக அவனை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முடிவில், கழுத்தை நெறித்து மணிகண்டனை யாரோ கொலை செய்தது கண்டறியப்பட்டது, யார் இதை செய்திருப்பார்? என்ன காரணம்? என பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவன் ராகுல் குற்றவாளி என கண்டறியப்பட்டது.

மணிகண்டன் அடிக்கடி பாட்டி வீட்டுக்கு வரும் போது ராகுல் அறிமுகமாகியுள்ளார், இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில், மணிகண்டன் தனது தோழனிடம் ராகுலின் சகோதரியை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ராகுல், மணிகண்டனை கொலை செய்த திட்டமிட்டார், இதன்படி சம்பவதினத்தன்று தனியாக இருந்த மணிகண்டனை தன்னுடன் வருமாறு அழைத்து சென்று கழுத்தை நெறித்து குளத்தில் மூழ்கடித்து கொன்றுள்ளார். இதனைதொடர்ந்து ராகுலை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி,‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா பொலிஸ் அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.54 வயதான குறித்த பொலிஸ் அலுவலர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, பொலிஸ் அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர்.எனினும் அவரின் கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆறு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சொய்ஸாவின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்த போதும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை நோக்கி சுட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், சொய்ஸாவுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கொழும்பில்..

ஹைலெவல் வீதி மீகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு சென்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் ஹெட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த வினிது சத்சர என்பவரே உயிரிழந்துள்ளார். சிறுவனின் தந்தை மற்றும் காரை ஓட்டிச் சென்றவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்!!

வவுனியா – நொச்சுமோட்டையில் வீடொன்றில் புகுந்து திருட முற்பட்ட அடையாளம் தெரியாத குழுவொன்றை, வீட்டு உரிமையாளர் அவர்களின் வாளை பறித்து பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அடையாளம் தெரியாத குழுவொன்று குறித்த வீட்டில் புகுந்து நேற்று (27.07.2023) இரவு அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தம்பதியினர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.