இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம் : அறையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, உரதுதாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்றுமுன்தினம் (18) முதல் காணாமல்போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் தாய் காணாமல்போனதையடுத்து, சந்தேகநபர் தனது மனைவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வந்த முச்சக்கர வண்டியை மோப்ப நாய் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இளம் தாய் மற்றும் 11 மாதகுழந்தை காணாமல்போனமை தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணிப்பதற்கு முன்னர் நான்கு பேரை வாழ வைத்த பெண் : இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

உடுகமவில்..

உடுகம வைத்தியசாலையில் உயிரிழப்பதற்கு முன்னர் நான்கு பேரை வாழ வைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் நான்கு பேருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறப்பட்டதாக உடுகம வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுசந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உடுகம வைத்தியசாலை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரிடமிருந்து உறுப்புகள் சேகரிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.2/169, நயதொல, அலபலதெனியவில் வசிக்கும் எல்.பிரேமாவதி என்பவர் இந்த மாபெரும் தொண்டுக்காக தனது உடல் உறுப்புகளை வழங்கியுள்ளார்.

இதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் உறுப்புகள் பிக்கு ஒருவர் உட்பட மூவருக்கு மாற்று சிகிச்சைக்காக தேசிய உறுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

மூளைச்சாவு அடைந்த இந்த நோயாளி உறுப்புகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.பிரேமாவதி சுகயீனம் காரணமாக மூளை நரம்பு வெடித்து இரத்தம் கசிந்ததால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மூளைச்சாவுடைந்துள்ளமையினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.இந்த மிகப்பெரிய தியாகத்தை செய்த குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது!!

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக,

பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

தேவகோட்டையில்..

தேவகோட்டையில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் செவிலியர் மனைவியை வெட்டிக் படுகொலை செய்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி சூர்யா (30).

இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. சூரியா தேவக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த நான்கு வருடங்களாக பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தம்பதியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை விட்டு சூரியா பிரிந்து வந்து தேவகோட்டை சரஸ்வதி ஸாசகசாலை தெருவில் முனியய்யா கோவிலில் அருகில் வாடகை வீட்டில் தனியாக மகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சூர்யாவை வழிமறித்த கணவர் பிரபாகரன் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனைவி சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து, மனைவி நடத்தையில் மீது சந்தேகம் உள்ளதால் கொலை செய்ததாக கூறி பிரபாகரன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உடனடியாக பிரபாகரனை கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“உன் உயிர் ஊஞ்சலாடுது..மரணம் நெருங்குது” இளம் பெண் கடத்தல்.. பதறவைக்கும் குரல் பதிவு!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறையில் கடத்தப்பட்டு ஒருமாதமாகியும் இளம்பெண் குறித்து எந்த தகவலும் இல்லாததால் பெண்ணின் தாயார் மகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்ரி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது. இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2022 டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான 4 மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொடர்பு கொண்ட மகேஸ்வரி தனது கணவன் சைக்கோ போல தன் மீது சந்தேகப்படுவதாகவும் அடடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனலெட்சுமி தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். மாரிமுத்துவிடம் இருந்து தனலெட்சுமியை பிரித்து அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வீட்டை விட்டா போகிறாய் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் ஒருமாதமாகும் நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது, கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை அவர் போலீஸாரிடம் வழங்கி, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

2 மகன்களை கொன்று தாயும் தற்கொலை செய்த சோகம்!!

தமிழ்நாடு..

அழகழகான ரெண்டு குழந்தைகள். அந்த குழந்தைகளைக் கொல்வதற்கு எப்படித் தான் மனசு வந்ததோ என்று இன்னும் இறந்து போன குழந்தைகளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பரமத்திவேலூர் பகுதி மக்கள்.

நாமக்கல் மாவட்டம் வெட்டுக்காட்டுப்புத்தூர் பகுதியில் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு, அதே கிணற்றில் தாயும் குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் இன்னும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை பரப்பியுள்ளது.நாமக்கல் மாவட்டம், வெட்டுக்காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகரன்(30).

இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என்று இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் வழக்கம் போல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சசிகலா, அடுத்த நாள் காலை 6 மணியளவில் குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

அங்கு தனசேகரன் மட்டும் தூங்கி கொண்டிருந்தார். சசிகலா மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர், வெளியே வந்து மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை தேடினார். முதல் நாள் இரவு கணவன் – மனைவிக்கிடையே நடந்த தகராறு குறித்து கேள்விப்பட்ட சசிகலாவின் தந்தை பழனிசாமி, அதிகாலை 6.30 மணிக்கு மகள் வீட்டிற்கு சமாதானம் பேச சென்றுள்ளார்.

அப்போது, தனசேகரனின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது, அங்கு சசிகலாவின் செருப்பு கிடந்தது.இதனால், சந்தேகமடைந்த அவர், கிணற்றில் எட்டி பார்த்த போது, அங்கு குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக மிதந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டிற்கு சென்று மருமகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன், கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் சசிகலாவின் சடலங்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் மனமுடைந்த சசிகலா, குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை எதுவும் காரணமா? என திருச்செங்கோடு ஆர்டிஓ ரமேஷ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏலியன் போல் உருவத்தை மாற்றிக் கொண்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இங்கிலாந்தில்..

நம்ம ஊரு பார்த்திபன் கண்ணில் இந்த செய்தி படாமல் இருப்பதாக என்று சமூக வலைத்தளங்களில் இந்த தகவலைப் பகிர்ந்து வருகிறார்கள். வித்தியாசமாக செய்வதும், ரசனையுடன் செய்வதும் வரவேற்கதக்கது தான் என்றாலும்,

சமயங்களில் வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என்று பலரும் சங்கடத்தை உருவாக்குகின்றனர் சிலர், தங்களது வித்தியாசமான யோசனைகளினால் சங்கடத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி சங்கடத்தில் சிக்கிக் கொண்ட இளம்பெண்ணின் கதை இது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏலியன் போல தனது தோற்றத்தை மாற்றி கொண்டதால், அவரை நேரில் பார்க்கும் பொதுமக்கள், அலறியடித்தப்படி அவளை சூனியகாரியாக பார்த்து வருவதால் பெரும் சங்கடத்தைச் சந்தித்துள்ளார்.

தனது தலை, உதடு, மூக்கு, காது, முடி, விரல், நகம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து, ஏலியனைப் போல தோற்றமளிக்க விரும்பி, உருமாறியுள்ளார் இளம்பெண்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இளம் பெண் ஃப்ரீஜா ஃபோரியா (27). இவர், மற்றவர்களை விட தான் வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை முழுவதுமாக உருமாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் 11 வயது முதலே தனது தோற்றத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவரை பார்ப்பவர்கள் உண்மையிலே ஒரு ஏலியனை பார்ப்பது போல் வியந்து பார்க்கின்றனர்.மற்றவர்களை விட வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பிய ஃப்ரீஜா, ஒரு ஏலியன் போல தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார்.

தலைமுடியை நீல நிறத்தில் கலர் செய்தும் அதற்கு ஏற்ப உடை அணிந்தும் ஒரு ஏலியன் போலவே காட்சியளிக்கிறார்.சிறு வயதில் இருந்தே மேக்கப் செய்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 17 வயதில் தனது தோற்றத்தில் மாற்றத்தை உணர ஆரம்பித்துள்ளார்.

இவரை பார்க்கும் மக்கள் சிலர், தீய சக்தி என கருதி தேவாலயங்களில் உள்ள புனித நீரை இவர் மீது தெளித்து வருகின்றனர். மேலும் சிலர் இவரை அமானுஷ்ய சக்தி என்றும், சூனியக்காரி என்றும் கருதி மாந்திரீகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஃப்ரீஜா ஃபோரியா கூறுகையில், பள்ளி நாட்களில் இருந்தே வித்தியாசமான உடைகள் அணிவது, அமானுஷமான பாடல்கள், இசைகள் கேட்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது வித்தியாசமான தோற்றித்திற்காக பாரிஸ்ல் உள்ள நேட்ரோ டேமில் அனுமதி மறுக்கப்பட்டது தனக்கு மிகுந்த மன வேதனை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

தாம்பரத்தில்..

தற்கொலை செய்வதற்காக இளைஞர் ஒருவர் நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதிக்க முயன்றபோது, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது மாந்தோப்பு. இங்கு தனது குடும்பத்துடன் டேனியல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில் நேற்றும் வழக்கம்போல் இவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன ஆறுதலுக்காக பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கே மணிகண்டனும் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் நண்பர்களுடன் சேர்ந்து முதல் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார் இளைஞர் டேனியல். இதையடுத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக நண்பரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய கீழே குதித்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பிகளுக்கு இடையே சிக்கிய டேனியல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். டேனியல் கீழே குதித்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பதறியடித்து இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மின்சார துறையினர் மூலம் உடனடியாக மின்சாரமும் நிறுத்தப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு தீயனைப்பு வாகனத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் டேனியல் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்வதற்காக தனது நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மனைவி , மகளை கொன்று தானும் தற்கொலை முயற்சி.. கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில்..

சென்னையை அடுத்த தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32வயது அரவிந்த் . இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அரவிந்த்துக்கு 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அரவிந்த் முடிவு செய்தார். அவருடைய 7வயது மகள் ஐஸ்வர்யாவுக்கும் , மனைவிக்கும் மாத்திரை கொடுத்துவிட்டார்.

இதன் பிறகு மனைவியின் வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்தார். அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் அறுத்து கொண்டார்.

உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையிலும் இருந்தனர்.

போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தால் மகனுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

சேலத்தில்..

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் 46 வயது பாப்பாத்தி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜூலை 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்று உள்ளார்.

திடீரென குறுக்கே வந்த டூவீலர் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்ததும், அதன் பிறகு 2வதாக வந்த பேருந்தின் முன்பு ஓடிச்சென்று, விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனே, ஓடி பேருந்து முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உருக்கமான தகவல் வெளியானது. மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45000 செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டு உள்ளார்.

அப்போது யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் வேலை மகனுக்கு கிடைக்கும் என கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பாத்தி ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தங்கை உயிரிழந்த சோகம்… விபரீத முடிவெடுத்த அண்ணன் மற்றும் அக்கா… உடலைக் கூட வாங்க வராத உறவினர்கள்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன் மற்றும் அக்காவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அண்ணன் தங்கைகளான பாபு, உஷா பார்வதி, ஸ்ரீ தேவி.

இவர்களது பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் குடும்ப வருமை காரணமாக மூவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது மூவரும் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாபுவின் தங்கை உஷா பார்வதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாமல் பாபுவும், ஸ்ரீ தேவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை வாங்க உறவினர்கள் முன்வராததால் மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் உதவியுடன் மூவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த மகன்!!

சென்னையில்..

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா பகுதியில் வசித்து வருபவர் 55 வயது பாலசுப்பிரமணியன் . இவரது மனைவி 48 வயது சுப்புலட்சுமி . இவர்களுக்கு 28 வயதில் சுமித்ரா என்ற மகளும் 23 வயதில் ஜபரீஷ் என்ற மகனும் உள்ளனர்.

இவர்களுக்குள் சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் தாய், மகன், மகள் மூவரும் பாலசுப்பிரமணியை வீட்டில் அனுமதிக்காமல் இருந்து வந்தனர்.

அத்துடன் குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கடந்த ஒரு வருடகாலமாக பாலசுப்பிரமணி குடும்பத்தில் இருந்து பிரிந்து வீட்டின் கீழ் நடைபாதையில் வசித்து வந்தார்.

நேற்று சுமித்ராவுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் இதனால் தம்பி ஜபரீஷ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இருவரும் வீடு திரும்பியதும் குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி ஆபாசமாக திட்டினார்.

ஆத்திரமடைந்த ஜபரீஷ் அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணியின் தலையில் சராமாரியாக தாக்கினார்.

இந்த கொடூரத் தாக்குதலில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக அவரே காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜபரீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலசுப்பிரமணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காதலித்துவிட்டு வேறொருவரை மணந்ததால் 12 முறை குத்திக்கொன்றேன்.. காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் மருத்துவமனையில் புகுந்து இளம்பெண்ணை கொன்ற நபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலி பகுதியில் லிஜி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

மகேஷ் என்ற நபர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மகேஷை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், பள்ளிப்பருவம் முதல் லிஜி தன்னுடன் பழகி வந்துள்ளார் என்றும், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் பேசுவதை அவர் தவிர்த்துள்ளார் என்றும் மகேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கொலை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது தப்பியோடிய அவரை துரத்திப்பிடித்து 12 முறை கத்தியால் குத்தி மகேஷ் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பதை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை வழக்கில் மகேஷின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் தக்காளி விற்றே கோடீஸ்வரர் ஆன விவசாயி.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!!

இந்தியாவில்..

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தக்காளி விலை குறைக்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 1 மாதத்திற்குள் கோடீஸ்வரர் ஆன நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் துக்காராம் பாகோஜி கயாகர். விவசாயியான இவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி போட்டு தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த சூழலில் தற்போது தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கபட்டு வரும் நிலையில், இவர் அதனை வியாபாரம் செய்து சம்பாதித்துள்ளார். இவரது நிலத்தில் இருந்து சுமார் 13,000 பெட்டி தக்காளி அறுவடை செய்து விற்றுள்ளார்.

இப்படியே தொடர்ந்து 1 மாத காலமாக விற்று வந்த இவருக்கு இதில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார்.

குடும்பமாக சேர்ந்து உழைத்ததற்கான பலன் என்று விவசாயி துக்காராம் பாகோஜி தெரிவித்துள்ளார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே போல் கர்நாடகாவில் விவசாயி 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

மேலும் ஆந்திராவில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் லாபம் பார்த்த விவசாயி மர்ம நபர்களால் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் முடிந்த புகைப்பட மோகம் : குழந்தைகளின் முன்னே தாய்க்கு நடந்த பயங்கரம்!!

மும்பையில்..

குழந்தைகளின் கண்ணுக்கு முன்னே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தாயை ராட்சத அலை ஒன்று கடலுக்கு இழுத்து சென்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிலர் புகைப்பட மோகத்தில் நாம் எத்தகைய ஆபத்தின் நுனியில் நிற்கிறோம் என்று கூட தெரியாமல் தங்கள் வாழ்கையோடு அவர்களே விளையாடுகின்றனர்.

அந்தவகையில் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட்-டில் உள்ள கடல் பகுதியில் தம்பதி ஒருவர் தங்களின் குழந்தைகளின் முன்னிலையில் ஆபத்தான முறையில் புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த கற்களை நோக்கி வந்த ராட்சத அலை ஒன்று குழந்தையின் தாயை கடலுக்கு இழுத்து சென்றது, இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில் பெரிய அலைகள் வருவதை பார்த்து தம்பதியின் குழந்தை கத்தும் சத்தங்களை கேட்க முடிகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணைய தளத்தில் வேகமாக பரவிய நிலையில், உயிருக்கு மிகவும் ஆபத்தான வகையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை குறித்து நெட்டிசன்கள் தீவிர விவாதத்தை மேற்கொண்டனர்.

இணையம் மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

Online மூலம் மிரட்டி பண மோசடி செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை சென்னை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் அஸ்வினி. 20 வயது இளம்பெண்ணான இவர், தனது படிப்பை முடித்து விட்டு பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது இவர் பார்லருக்கு தேவையான அழகு சாதன பொருட்களை எல்லாம் ஆன்லைனில் பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கு லண்டனில் இருப்பதாக கூறி மர்ம நபர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

இருவரும் தொடர்ந்து சமூக வலைதள வாயிலாக பேசி வந்த நிலையில், அந்த லண்டன் இளைஞர் அஸ்வினியை காதலிப்பதாக கூறியதோடு, தான் சென்னை வந்து திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பெற வேண்டும் என்றால் வங்கி கணக்குக்கு 25 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்தவில்லை என்றால், சுங்க அதிகாரிகள் கைது செய்து விடுவார் என்று மிரட்டியுள்ளார். அதேபோல் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டு முகவரிக்கு சுங்க அதிகாரி போல் வந்த ஒருவர் அந்த பெண்ணை கைது செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண் உடனடியாக அந்த வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் மேலும் 45 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி வைத்து தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை விவகாரம் குறித்தும், மோசடி குறித்தும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் நபர்களை குறி வைத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்த மோசடி கும்பலை பிடிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையடுத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று நைஜீரியா நாட்டை சேர்ந்த மோசா என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த மோஸாவை டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று காலை சென்னை அழைத்து வந்துள்ளனர்.

சென்னை அனைத்துவரப்பட்ட மோஷாவிடம் மோசடி கும்பல்கள் தொடர்பாக கீழ்பாக்கம் துணையான தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.