அங்குருவாதொட்ட, உருதுதாவவில் இடம்பெற்ற இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப் பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (30), இவரின் மனைவி தாரணி காமாட்சி (29). இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.
சுதாகர் எலெக்ட்ரிக் மற்றும் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமக்குடி பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் ஜன்னலில் கொசுவலை மாட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சுதாகர்.
வெளிப்புற ஜன்னலில் கொசுவலை மாட்டுவதற்காக பக்கவாட்டு சுவரில் நின்று வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.
இதில் அவரின் தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுதாகரை அவரின் உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உயர் சிகிச்சைகள் அளித்தும், பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் சுதாகர். கணவர் இறந்த துக்கம்தாளாமல் கைக்குழந்தையுடன் தாரணி காமாட்சி கதறி அழுதபடி இருந்திருக்கிறார்.
அவரின் உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அழுகையை நிறுத்தவில்லை எனச் சொல்லப்படுகிறது. நேற்றுவரை சாப்பிடாமல் குழந்தையை வைத்துக்கொண்டு கணவரின் படத்துக்கு முன்பு அமர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.
உறவினர்களும், அந்தப் பகுதியினரும் தொடர்ந்து ஆறுதல் கூறிய நிலையில், அழுகையை அடக்கிக்கொண்டு, “நான் அழமாட்டேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்” எனக் கூறி குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு, “நான் தூங்கச் செல்கிறேன்” எனக் கூறிவிட்டு, தனி அறைக்குள் சென்று உள்பக்கமாகப் பூட்டியிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, அவரை வெளியே வருமாறு உறவினர்கள் அழைத்திருக்கின்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்திருக்கின்றனர்.
அப்போது அவர் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். இது குறித்து தகவலறிந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்ட தாரணி காமாட்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல், கைக்குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொது இடத்தில் ஹிஜாப் அணியாத ஈரான் பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணியாமல் சென்ற காரணத்துக்காக ஈரானிலுள்ள நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் வந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும் சிறையில் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை கைது செய்யபட்டுள்ளார்.இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.தந்தை இரவில் கடற்தொழிலுக்கு செல்லும் வேளையில் சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் சிறிய தந்தை சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த பகுதியில் பிரதேச செயலக அதிகாரிகளால் சிறுவர் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொாடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா, ஈரற்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21.07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நள்ளிரவு (20.07) இரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“செஃப்டர் எக்ஸோன் (Ceftriaxone) மருந்து பயன்பாட்டினால் மரணம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றே மீண்டும் பதிவாகியுள்ளது.மேலும், சில மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் தற்போது காணப்படும் நிலை மிகவும் அசாதாரணமானது.
நாட்டில் பல பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்ற காரணத்தினால் ஒவ்வாமை என்ற விடயத்திற்கு அப்பால் சென்று இந்த மருந்தில் சிக்கல் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகங்களை மாத்திரம் எழுப்பாமல் உரிய மருந்துகளை உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீடகப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருவரும் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையான தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.கணவர் வேலைக்குச் சென்ற நிலையிலேயே அவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்னின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் அவர்மீது முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராவார்.
எனினும் அவர் உயிருடன் இல்லாததால் இன்று (20.07.2023) இடம்பெற்ற 37ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில், அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ள நிலையில், குறித்த பட்டத்தை தாய் கண்ணீருடன் பெற்றுக் கொண்டுள்ளார்.
வவுனியா பறனட்டகல் பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த பாரவூர்த்தி பறன்நட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19.07) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது.
இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப் பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.
பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.
மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை இழுந்துச் சென்றிருந்தது.
யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பில் 7 வயது சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யக்கல பகுதியில் வீட்டுத்தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சதுரிகா மதுஷானி இவ்வாறு உயிரிழந்திருந்தார்.இவ்வாறு உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி குடும்ப தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சம்பவ தினத்தன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏழு வயது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டம் பாசையூர் பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், பாசையூரைச் சேர்ந்த 19 வயதுடைய லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.இதனால் கோபமடைந்த சானுயா தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் உயிரிழந்த மாணவியின், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்த மாணவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.மேலும், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8 பாடங்களில் விசேட சித்தியினையும் 1 பாடத்தில் திறமைச் சித்தியினையும் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் மரணம் தொடர்பில் அவரது சகோதரிகள் ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.
2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.
2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமாவினால் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளனர்.