கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் கொடுமை செய்து சிறுவன் கொலை!!

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் 6 வயது மதியரசு.

இவன் கடத்தூர் பகுதியில் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். ஜூலை 16ம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடித் திரிந்தனர். சிறுவன் காணாமல் போனதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது .

காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்ட போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனின் உறவினரான 18 வயது பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொபைலை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை செய்து கொலை செய்துள்ளார். சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசி சென்றுவிட்டதாக பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டாகத்தான் கொலை செய்திருக்க வேண்டும் என காவல்நிலையம் முன்பு சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை : பொலிஸாரிடம் நடிக்கும் சந்தேக நபர்!!

ஹொரணை..!

ஹொரணை – அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தையின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விலங்குகள் கடித்ததால் அந்த உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாவு திணைக்களத்திற்கு துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைகள் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரிடம் நேற்று பிற்பகல் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சந்தேகநபர் தனது மன நிலை இன்னமும் குழப்பமடைந்துள்ளதாகக் கூறி மந்த நிலையில் வாக்குமூலம் வழங்கும் நிலை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொரணை – வரக்காகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர், தனது வீட்டிற்கு அடுத்துள்ள கைவிடப்பட்ட வீட்டில் தங்கியிருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைது செய்யச் சென்ற போது, ​​அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது அவர் கத்திரிக்கோலால் தன்னை தானே வெட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் மயக்கமடைந்த சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்த போது ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப சுமையால் கனவை தொலைத்த இளம் வீராங்கனை!!

சச்சினி பெரேரா..

தடையூன்றி பாய்தல் என்ற போல்வால்ட் (Paul Vault) போட்டியில் தேசிய சாதனைகளை படைத்த இலங்கையின் தலைசிறந்த தடகள வீராங்கனை ஒருவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நாணய நெருக்கடி காரணமாக உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்கள், நீண்ட கால நோய் பராமரிப்பு தேவைப்படும் தனது தாயை கவனிப்பதில் பிரச்சினையை கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் 24 வயதான சச்சினி பெரேரா தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து அவர் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.எனினும் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவை சச்சினி பெரேரா தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் “இதுதான் எனது உலகம் என்று நான் உணர்கிறேன்” எனவும் ஆங்கில நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“நீ ஒரு விளையாட்டு வீராங்கனை, வீட்டு வேலைக்காரி அல்ல” என்று தனது பெற்றோர் அடிக்கடி கூறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.இதன்போது இலங்கையில் தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்த வலிமை பயிற்சி அட்டவணையை தற்போது பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகங்களினால் இந்த தகவல் வெளியானதையடுத்து சச்சினி பெரேராவின் நிலைமை கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தநிலையில் சச்சினிக்கு அரபு இராச்சியத்தில் விளையாட்டு தொடர்பான வேலையைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : கடுமையான நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,யார் எதை கூறினாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் உள்ளூர் தயாரிப்புகள் மூலம் உள்ளூர் வருமான பொருளாதாரத்தையும், அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் வெளிநாட்டு பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.

பொருளாதாரச் செயற்பாடுகளை வெறும் பேச்சளவில் மாத்திரம் வைத்திருந்தால் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (21.07.2023) மத்திய வங்கி வெளியிட்டிருந்த நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318.7256 ரூபாவாகவும், விற்பனை விலையானது 331.9854 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டுபாயில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கை இளைஞன்!!

டுபாயில்..

டுபாயில் 23 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞன் சுற்றுலா விசாவில் டுபாயில் வேலைக்காகச் சென்றிருந்தார்.

அவர் நாட்டிற்குச் சென்ற சொற்ப நாட்களில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தை சேர்ந்த 23 வயதான கசுன் பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெற்றோருக்கு வந்ததையடுத்து கசுனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாயும் குழந்தையும் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

ஹேவாஹெட்டயில்..

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரில் அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே சவப்பெட்டியில் படுகொலை செய்யப்பட்ட தாய், குழந்தை.. இலங்கையில் நடந்த சோகம்!!

அங்குருவத்தோட்டயில்..

அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்றையதினம் (22-07-2023) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்றன.

அங்கு, சட்ட வைத்திய அதிகாரி வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்தார். விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய செல்லும் போது சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தரிக்கோலால் தாக்க முற்பட்டதாகவும், அதனை தடுக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கத்திரிக்கோலால் தன்னை தானே குத்தி காயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : முழுமையான விபரம்!!

இன்று (23.07.2023) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

119 பொலிஸ் அவசர பிரிவு ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பத்து பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவனை தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல், அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெற்றோல் ஊற்றியுள்ளனர்.

“எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை வெட்ட முயன்ற போது கணவனை காப்பாற்ற குறுக்கே சென்ற 21 வயதான மனைவியும் சரமாரியான வெட்டுக்காயங்களிற்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதான பாத்திமா என்ற மனைவி உயிரிழந்தார். கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளானார்.

02 வயதுடைய சிறுவன் மற்றும் 07,08 ,13, ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளமையுடன் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தடவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டமையுடன் சட்ட வைத்திய அதிகாரி ம.கோகுல்சங்கர் மற்றும் பதில் நீதவான் தயாபரன் ஆரத்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து வீட்டின் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு : இளம்பெண் பலி : 10 பேர் காயம் : நடந்தது என்ன?

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

119 அவசரச் சட்டத்தின் ஊடாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா பொலிஸாரும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பத்து பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவனை தேடிச் சென்ற குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் இளைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு திடீரென உள்நுழைந்த கும்பல்,

அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், அனைவர் மீதும் பெற்றோல் ஊற்றியுள்ளனர். “எங்கே சுகந்தன்” என தேடியபடியே அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டின் மேல்மாடியில் இருந்த சுகந்தன் என்ற குடும்பஸ்தர் கீழே இறங்கி வந்தபோது, அவரை வெட்ட முயன்ற போது கணவனை காப்பாற்ற குறுக்கே சென்ற 21 வயதான மனைவியும் சரமாரியான வெட்டுக் காயங்களிற்கு உள்ளானார்.

பின்னர் அவர்கள் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 21 வயதான பாத்திமா என்ற மனைவி உயிரிழந்தார். கணவன் உயிராபத்தான காயங்கள், எரிகாயங்களிற்கு உள்ளானார்.

02 வயதுடைய சிறுவன் மற்றும் 07,08 ,13 ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய ஒருவரும் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்களுக்கு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளமையுடன் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தடவியல் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டமையுடன் திடீர் மரணவிசாரணை அதிகாரி ம.கோகுல்சங்கர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களை பார்வையிட்டார்.

வவுனியாவில் புகையிரத்துடன் பாரவூர்தி மோதி விபத்து : இருவர் காயம் : பாரவூர்தி சேதம்!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07.2023) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன்,பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், மற்றொரு நபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் : குடும்பப் பெண் எரித்துக்கொலை : வீடும் எரிப்பு : 9 பேர் காயம்!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுளைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவரது கணவர், சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மற்றும் தடவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக இனம் தெரியாத நபர்கள் நடமாடித்திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

17 லட்சம் கடன்.. குழந்தை மனைவியை கொன்று தந்தை விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்-க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தனது 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு எதோ மாத்திரையை கொடுத்துள்ளார்.

பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார்.  பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்துகொண்டுதில் மயக்கமடைந்துள்ளார்.

அவரது உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி கையில் இருந்து வெளியேறிய இரத்தம் அறை முழுவதும் பரவி நிலையிலும், 7-வயது மகள் வாயில் நுரை தள்ளியபடியும் உயிரிழந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 17 லட்சம் கடன் உள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் மனஉளைச்சலில் வேறுவழி தெரியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து குழந்தைக்கு மாத்திரை கொடுத்தும், மனைவி மற்றும் அரவிந்த் இருவரும் மாத்திரை உட்கொண்டு கை நரம்பை அறுத்துகொண்டாதாக கூறியுள்ளார்.

வவுனியா வடக்கில் முன்னாள் போராளி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21.07) மாலை அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும், கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுகிறது.

நேற்றும் முறுகல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மகேஸ்வரன் மீது கொலையாளி கல் வீசி தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மகேஸ்வரன், மண்வெட்டியை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றுள்ளார்.

தப்பியோடியவர் பக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று, அங்கிருந்த இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள். மகேஸ்வரன் யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

39 வயதான கொலையாளி ஒன்றரை வருடமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர், யுத்தம் முடிவதற்கு முன்னரே அந்த அமைப்பை விட்டு விலகி விட்டார்.

அவர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளது. கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

 

இளம் தாய் மற்றும் மகள் படுகொலை : திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது!!

அங்குருவாதொட்டயில்..

அங்குருவாதொட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வரகாகொட சல்கஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் மோதிலில் ஈடுபட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் அதிகாரிகளை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் குத்திக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அங்குருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவிலிருந்து யாழ் வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில்..

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2023) தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார்.

எனினும் தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளார். சங்கிலி தொடர்பில் கேட்ட போது, சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய் என தங்கை கூறியுள்ளார். அதனால் அக்கா – தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பி பிடி சண்டையாக மாறியுள்ளது.

அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்ததையடுத்து, கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன், பொலிஸ் நிலையம் சென்ற தங்கை, தனது அக்கா மீது முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்..

யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது. சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரை உயிரிழந்துள்ளார்.