2 கோடி சம்பளம் : ஆனால் வேலைக்கு வர மறுக்கும் பெண்கள் : ஆள் கிடைக்காமல் தவிக்கும் முதலாளி!!

சீனாவில்..

சீனாவில் வருடத்திற்கு 2 கோடி சம்பவம் வழங்கியும் குறிப்பிட்ட வேலை ஒன்றுக்கு சேர பெண்கள் ஆர்வம் காட்ட மறுப்பது அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரத்தில் வாழும் பெண் ஒருவர் தனக்கான தனிப்பட்ட வேலைகளை செய்வதற்கான பணிப் பெண்ணை தேடி வருகிறார்.

இதற்காக மாதம் 16 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், ஆனால் தன்னை 24 மணி நேரமும் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பணிப்பெண் வேலைக்கு சேர விரும்பும் நபர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வழங்கப்பட்டுள்ள விளம்பரத்தில், பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் நபருக்கு மாதம் 16,44,435.25 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும், வருடத்திற்கு என்று பார்த்தால் 1.97 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் சேர விண்ணப்பிப்பவர்கள் 165 செ.மீ உயரம், 55 கிலோ உடல் எடை கொண்டு இருக்க வேண்டும், நேர்த்தியான தோற்றம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும், 12ம் வகுப்பிற்கு மேல் படித்து இருக்க வேண்டும், பாடி ஆடத் தெரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோடிகளில் சம்பவம் வழங்கப்பட்டாலும் இந்த வேலைக்கு செல்ல பலரும் தயக்கம் காட்டுகின்றனர், அதற்கு முக்கிய காரணமாக சம்பந்தப்பட்ட பணியில் சுய மரியாதையை இழக்க நேரிடும் என்று பலரும் உணர்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசியுள்ள ஒருவர், இந்த வேலையில் முதலாளிக்கு காலில் இருக்கும் செருப்புகளை முதற்கொண்டு கழட்டி போட வேண்டிய நிலை ஏற்படும், மேலும் அவர்கள் கேட்கும் போது எல்லாம் ஜீஸ், பழம், தண்ணீர் ஆகியவற்றை எடுத்து கொடுக்க வேண்டும், சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும் இதனாலேயே இப்படிப்பட்ட வேலைக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

வேலைக்கு விளம்பர கொடுத்துள்ள பெண்ணிடம், ஏற்கனவே இரண்டு பெண்கள் 12 நேரங்கள் என்ற கணக்கில் வேலை பார்த்து வருகின்றனர், அவர்களும் இதே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தன்று மணமக்கள் எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சி சம்பவம்.!!

மத்திய பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், திருமணத்தன்று மணமக்கள் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு காதலன் கேட்டதும், ஆத்திரம் அடைந்த நிஷா பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வேறு வழியின்றி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இதனிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் திருமணத்தன்று மணமகன் தீபக் தான் விஷம் குடித்தாக, மணமகளிடம் கூற அதிர்ச்சியில் மணமகளும் விஷம் குடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சையளிக்கபட்ட நிலையில் மணமகன் தீபக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் மணமகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணத்தன்று மணமக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், விஷம் குடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முகம் வீங்கி, கதறி அழுத பிக்பாஸ் ரைசா.. காரணம் இதுதான்!!

ரைசா..

முகம் வீங்கி, கண்ணீரோடு பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். மாடல் அழகியான ரைசா பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தி சேஸ்’ உட்பட படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முக அழகுக்காக பேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகள் அழகுக்கலை மருத்துவர் செய்தால் ஒரு பக்கம் அவரது முகம் வீங்கி விட்டது.

சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார் ரைசா. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ரைசாவிற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினர். பிறகு, ரைசா தவறாக சிகிச்சை அளித்த அழகுக்கலை மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், நடிகை ரைசா தனது சமூகவலைத்தளங்களில் கண்கள் சிவந்து அழுது கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதவில், “யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என” குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவரது பதிவு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சி!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார் – ரஜினி தம்பதி. இவர்களுக்கு சாரங் என்ற மகன் உள்ளார். இவர், அந்த திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அரசு ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானதில், மாணவர் சாரங் அனைத்து பாடங்களிலும் A+ சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனிடையே மாணவர் சாரங் கடந்த 6-ம் தேதி தனது தாயுடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் மாணவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் நேற்றைய முன்தினம் மூளை சாவடைந்தார்.

இதையடுத்து மாணவரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய எண்ணினர். அதன்படி கல்லீரல், 2 கிட்னி, இதய வால்வு, கண்கள் என 10 உறுப்புகளை தானம் செய்தனர்.

பின்னர் மாணவரின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்று, மாணவர்கள், நண்பர்கள் என அஞ்சலி செலுத்துவதற்கு வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவருக்கு இறுதி சடங்குகள் முடிந்தது.

மகன் இறந்த பெரும் சோகத்திலும் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பத்து பேருக்கு வாழ்வளித்த பெற்றோர்களின் மனித நேயம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தானத்தில் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம் என்பதற்கு ஏற்றார் போல் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்று பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

“நான் கல்விக்கு தகுதியில்லாதவன்” கடிதம் எழுதிவிட்டு 11ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

அண்ணாமலைநகரில்..

11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களை துணைத்தேர்வு எழுத வையுங்கள் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் தமிழகம் முழுவதும் 5 பேர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியது.

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கேஆர்எம் நகரில் வசித்து வருபவர் ஜானகி. இவரது மகன் 16 வயது ஜீவா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் இவர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் கடுமையாக மன உளைச்சலில் இருந்து வந்தார். ஏற்கனவே 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். 11ம் வகுப்பில் எடுத்துக் கொள்ளலாம் என கஷ்டப்பட்டு படித்தார்.

ஆனாலும் அவரால் மார்க் வாங்க முடியவில்லை. இதனால் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஜீவா விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்.

அந்த கடிதத்தில், தன்னோட அம்மாவும் பாட்டியும் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும் , 10ம் வகுப்பு படிக்கும் போது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால், 11ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறேன் என கூறி இருந்ததாகவும், இந்த முறையும் மதிப்பெண் குறைந்ததால் கல்விக்கு தகுதி இல்லாதவன் ஆகிவிட்டேன்.

அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இந்த கடிதம் மற்றும் தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் உயிரிழந்த பெண் உயிருடன் வந்த அதிசயம்.. இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்களுக்கு அதிர்ச்சி!!

பொல்பிட்டியவில்..

கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளார். இறந்ததாகக் கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார். நேற்று காலை 6.30 மணியளவில் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

அதற்கமைய, நேற்று காலை 7.00 மணியளவில் உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது, ​​வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் ஊன்றுகோல் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் காணப்பட்டன.

நீர்ச்செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளார். அப்போது அவரின் உடல் மிதப்பதனை அவதானித்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் கட்டுபொத்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர், விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளும் அங்கு கூடியிருந்தனர்.

காலை 10 மணியளவில், அந்தப் பெண்ணின் தலை அசைவதை பார்த்த உள்ளூர்வாசிகள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சுமார் 200 பேர் கொண்ட குழுவில், யாரும் உடலை பரிசோதிக்க முன்வராத நிலையில் அவ்விடத்தில் இருந்த இளைஞன் மாத்திரம் முன் வந்து பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அவருக்கு உதவியாக மற்றொரு நபர் வர, அவர்கள் இருவரும் மிகுந்த சிரமத்துடனும் எச்சரிக்கையுடனும் அந்த இடத்தை அடைந்தனர். அங்கு முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கையையும் கவனத்தில் கொண்டு இருவரும் பெண் இருந்த இடத்தை நெருங்கியுள்ளனர்.

இருவரும் அந்த இடத்தை அடைந்தவுடன், இறந்துவிட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்தது. அவரது மகனும் பிரதேசவாசிகளும் அவரை கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

தாயின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த பெண்ணின் வீடு இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புற்றிலிருந்து வந்த கடவுள்.. வசந்த மண்டப வாசலுக்கு வந்து மறைந்த சர்ப்பம்.. கொழும்பில் அதிசயம் மிக்க ஆலயம்!!

தெஹிவளையில்..

கொழும்பு – தெஹிவளையில் அமையப்பெற்றுள்ள விஸ்ணு ஆலயம் புராதனமான ஆலயமாகும். இந்த ஆலயம் தொடர்பில் செவிவழி கதைகள் பல இருக்கின்றன.

அந்த வகையில் ஆலயத்தின் நிருதி மூளையில் இருக்கும் ஒரு பாம்பின் புற்றில் பகவான் இருந்த போது பசுவொன்று பால் சொரிந்துள்ளது. இதனை ஞானதிருஷ்டியால் பார்த்த சுவாமியாரொருவர் புற்றை அகற்றுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து புற்று உடைக்கப்பட்ட போது பகவான் விஷ்ணு வெளிவந்துள்ளார் என கூறப்படுகிறது. இதேநேரம் வரலாறுகளில் பல அழிவுகளையும் இந்த ஆலயம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில வன்செயல் சம்பவங்களினால் ஆலயத்தின் விக்கிரங்கள் உடைக்கப்பட்டு கிணற்றுக்குள் போட்டு பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கையின் கீழ் கிணற்றிலிருந்து விக்கிரகங்கள் எடுக்கப்பட்டு ஆலயமாக புனருத்தானம் செய்யப்பட்டு தற்போது இலங்கையிலே முதன்மை பொருந்திய ஆலயமாக விளங்குகிறது.

சந்தானத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் இலங்கைப் பெண்!!

சாசினி சதுரங்கி..

இந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானத்துடன் இலங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு நகரைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான சாசினி சதுரங்கி எனும் பெண்ணே சந்தானத்துடன் நடிக்கவுள்ளார்.

இவர் சமூக வலைத்தங்களில் வீடியோ, போட்டோசூட் போன்றவற்றை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

அதுமட்டுமின்றி சிங்களப் பெண்ணாக இருந்த போதிலும் தமிழில் நல்ல கருத்துக்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு தமிழ் மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் ‘என்ரி’ கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

அப் பதிவில் ‘இந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானம் சேரின் புதிய படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த பொன்னான சாதனை’ என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தாயின் முன்னிலையில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை!!

கொழும்பில்..

விசேட தேவையுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கொஸ்கம பகுதியிலுள்ள கான்ஸ்டபிளின் வீட்டில் பணிபுரிந்து வரும் 26 வயதான விசேட தேவையுடைய யுவதியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யுவதியின் தாயார் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நேற்றைய தினம் (20.05.2023) பாதிக்கப்பட்ட யுவதி தனது தாயாருடன் கொஸ்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பேரில் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யத் தேடப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயாரைக் கவனிப்பதற்காகக் குறித்த யுவதியும் அவரது தாயும் இரண்டு வருடங்களாக கான்ஸ்டபிளின் வீட்டில் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், தனது பணப்பையிலிருந்த 10,000 ரூபா பணத்தைக் காணவில்லை எனக் கூறி தாய் மற்றும் மகளை அறைக்கு அழைத்துச் சென்றே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் 26 வயதுடைய விசேட தேவையுடைய யுவதியை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பண்டாரவளையில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவி : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

பண்டாரவளையில்..

பண்டாரவளை நகரில் கடத்தல்காரர்களிடமிருந்து மாணவியொருவர் புத்திசாலித்தனமாக தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19.05.2023) பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் (20.05.2023) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளை – துஹுல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியே கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பேருந்துக்காக குறித்த மாணவி தனியாக நடந்து சென்றபோது, வான் ஒன்றில் வந்த நபரொருவர் மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியை தம்முடன் அழைத்துவருமாறு சிறுமியின் தாயார் கூறியதாக தெரிவித்து சிறுமியை வானில் ஏற்றிக் கொள்ள முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது அச்சமடைந்த மாணவி பண்டாரவளையில் அமைந்துள்ள கடை ஒன்றுக்குள் சென்று இந்த விடயம் பற்றி கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாயாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம்!!

இலங்கையில்..

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 150,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டித் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(20.05.2023) 160,000 முதல் 165,000 ரூபா வரை இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் கடுமையான உயர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகி வருவதுடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் 11 ஆயிரம் ரூபாவிற்கும் மேல் குறைவடைந்துள்ளது.

குருநாகலில் பெரும் சோக சம்பவம் : பாடசாலை மாணவியின் உயிரை பறித்த ஜீப்!!

குருநாகலில்..

குருநாகலில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜீப் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (20) காலை குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயதான சித்துமினி ராஜகுரு என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்து சம்பவம் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒருதலைக்காதல் விவகாரம் : பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருச்சியில்…

திருச்சி அருகே ஒருதலையாக காதலித்த பெண்ணின் கண்களை தனது ஆட்டோவில் வரைந்து வைத்திருந்த காதலன் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்லும் இந்த காலத்தில், ஒரு தலையாக காதலித்த பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞரின் செயலால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் தாயாரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அருகே உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவர், செல்வகுமாா் (19). இவர் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

செல்வகுமார் உடன் பள்ளியில் ஒன்றாக படித்து வந்த மாணவியுடன் அவர் நட்பாகப் பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்தப் பெண் மீது காதல் வயப்பட்ட செல்வகுமார், அந்த பெண்ணின் கண்களை தனது ஆட்டோவில் வரைந்துள்ளாா்.

இதனை அறிந்த பெண்ணின் உறவினா்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் செல்வகுமாரை, அழைத்த போலீசார் வாகனத்தில் வரைந்துள்ள கண்களை அகற்றி விடும்படி கண்டித்து அணுப்பியுள்ளனர். சில நாட்களுக்குள் அகற்றி விடுவதாக போலீசாரிடம் உறுதி அளித்த செல்வக்குமார், ஆட்டோவிலிருந்து பெண்ணின் கண்களை அகற்றாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் அண்ணன் விக்ரம் உள்ளிட்ட 14 போ் இரண்டு நாட்களுக்கு முன்பு காளவாய்ப்பட்டியில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்குச் சென்று அவரது தாய் கமலம் (40), அண்ணன் கோபிநாத் (25), செல்வக்குமார் ஆகிய மூவரையும் சராமாரியாக தாக்கி ஆட்டோவையும் அடித்து நொறுக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து செல்வகுமார், அண்ணன் கோபிநாத் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், தாக்குதலில் ஈடுபட்ட விக்ரம் (20), சரண் (22), வினோத் (23), கெளதம் (35), சுதர்சன் (19), பிரசாந்த் (22), லோகேஸ்வரன் (19), வேலவன் (20), குமரேசன் (28), பாலு (23), பிரவீன் (24), மணிமாறன் (33), சதிஷ்(28), மணிகண்டன் (37) ஆகிய 14 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3-ல் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நட்பாகப் பழகி வந்த பெண்ணை ஆட்டோ ஓட்டுநரான செல்வகுமார் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், பெண் தரப்பினர் 14 பேர் வீடு புகுந்து, செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களையும், சேதப்படுத்திய சம்பவம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான்.. 17 ஆண்டுகளாக உணவே சாப்பிடாமல் உயிர் வாழும் நபர்!!

ஈரானில்..

ஈரானில் ஒரு மனிதன் கடந்த 17 ஆண்டுகளாக உணவே சாப்பிடவில்லை என்று கூறி அதிர்ச்சியளிக்கிறார். ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தனக்கு பசியே எடுத்ததில்லை என்றும் கடந்த 17 ஆண்டுகளாக குளிர்பானம்‌ மட்டுமே அருந்தி உயிர்‌ வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

கடந்த 2006-ம்‌ ஆண்டு முதல்‌ உணவு எடுத்துக்கொள்வதை கைவிட்டதாக கூறி ஆச்சரியமளிக்கிறார். அதுமட்டுமின்றி ஒரு நாளில் நான்கு மணி நேரம்‌ தான்‌ தூங்குவதாகவும்‌ கூறுகிறார்.இந்த நபரின்‌ பெயர்‌ கோலமரேஜா அர்தேஷிரி (Gholamreza Ardeshiri).

கடந்த 17 ஆண்டுகளாக தான்‌ ஒரு துளி கூட சாப்பிடவில்லை என்று அர்தேஷிரி கூறுகிறார்‌. அவர்‌ தனது முழு நாளையும்‌ பெப்சி மற்றும்‌ செவன்‌ அப்‌ குடித்து கழிக்கிறார்‌. அவர்‌ உயிருடன்‌ இருப்பது மட்டுமின்றி குளிர்‌ பானங்கள்‌ அருந்தி ஆரோக்‌கியமாகவும்‌ இருக்கிறார்‌.

கண்ணாடியிழை பழுதுபார்ப்பவரான அர்தேஷிரி, தனது வயிற்றில்‌ குளிர்‌ பானங்களை மட்டுமே உண்ண முடியும்‌ என்கிறார். அவர்‌ வேறு ஏதாவது சாப்பிட முயற்சித்தால்‌, அவர்‌ உடனடியாக வாந்தி எடுத்துவிடுவாராம்.

தனக்கு இவ்வாறு இருக்கும் காரணத்தை இன்னும் அவர் கண்டுபிடிக்கவில்லையாம். தன் வாய்க்குள் முடி போன்ற ஒரு பொருள் இருப்பதைப் போல ஒரு விசித்திரமான உணர்வு இருப்பதாயும், அந்த முடியின் தலைப்பகுதி வாயிலும், முடிவுப்பகுதி வயிற்றிலும் இருப்பதாகவும் உணர்கிறாராம். என்ன செய்தாலும் அந்த உணர்வை அகற்ற முடியவில்லையாம்.

இதனால், பின்னர் மூச்சுத் திணறுவது போல் உணர்ந்ததாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் இறுக்கமாக இருந்ததாகவும், தன்னால் அந்தக் கொடுமையை விவரிக்க முடியாது என்றும் அது பைத்தியம் பிடித்தது போல் இருந்ததாகவும் கூறுகிறார்.

பல மருத்துவர்களை சந்தித்த பிறகும் யாராலும் பிரச்சினையை கண்டறிய முடியவில்லை. அவருடைய குடும்பம் அவர் முன் சாப்பிடுவதில்லை, ஏனெனில் அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது அவருக்கு குமட்டல் ஏற்படுகிறது. கோலமரேஜா ஒரு இரவில் நான்கு மணி நேரம் தூங்குவதாகவும், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் சோடா பானங்களை உட்கொள்வதாகவும் கூறினார்.

மனைவியின் பெண் காதலியை ஏற்றுக்கொண்ட கணவன் : ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க வாழ் இந்தியரான சன்னி என்ற நபர் இந்தியாவை சேர்ந்த ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணம் முடிந்த ஓராண்டுகளுக்கு பிறகு மனைவி ஸ்பீட்டி சிங் தன்னுடைய பழைய காதல் வாழ்க்கை குறித்து, அதாவது ஸ்பீட்டி சிங் 18 வயதுடைய பெண்ணாக இருக்கும் போது மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் உறவில் இருந்தது குறித்து கணவர் சன்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காத கணவர் சன்னி, தனது மனைவியுடன் தொடர்ந்து அழகான வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த பித்து கெளர் என்ற பெண்ணுக்கு மற்றொரு இந்திய ஆணுடன் கடந்த 2009ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்காத நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து பித்து கெளர் என்ற இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் குடியேறியுள்ளார்.

அங்கு இந்திய வம்சாவளி தம்பதியான சன்னி மற்றும் ஸ்பீட்டி சிங்குடன் பித்து கெளர் அறிமுகம் ஆகியுள்ளார், அப்போது தன்னுடைய விவாகரத்து குறித்து பித்து கெளர் பகிர்ந்து கொள்ளவே, அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று ஒரு வாரம் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு சன்னி-ஸ்பீட்டி சிங் தம்பதி அழைத்துள்ளனர்.

இதனடிப்படையில் சன்னி-ஸ்பீட்டி சிங் வீட்டில் பித்து கெளர் தங்கி இருந்த போது, சன்னியின் மனைவியான ஸ்பீட்டி சிங்க்கும், பித்து கெளருக்கும் இடையே மனதளவிலும், உடலளவிலும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கணவர் சன்னிக்கு தெரியவந்த போது, ஸ்பீட்டி சிங் மற்றும் பித்து கெளருக்கு இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் பித்து கெளரை தன்னுடைய இரண்டாவது மனைவியாகவும் சன்னி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த உறவின் மூலம் முக்கோண காதல் தம்பதிக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்களான இரண்டு மனைவிகள், கணவர் சன்னி மற்றும் நான்கு குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த உறவுக்கு மூவரின் உறவினர்களும் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல் ஒற்றுமையுடன் மூவரும் வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியா நெளுக்குளம் மாட்டிறைச்சிக் கடையில் பழுதடைந்த இறைச்சி : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!!

வவுனியா நெளுக்குளம் பிரதேச சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி கடையில் பழுதடைந்த இறைச்சிகள் விற்பனை செய்த நிலையில் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்களான க.சிவரஞ்சன் மற்றும் த.வாகீசன் ஆகியோர் நேற்று முன்தினம் (19.05.2023) முன்னெடுத்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பிரதேசசபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி கடையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பழுதடைந்த மாட்டிறைச்சிகள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டன.

இதனையடுத்து சந்தேகநபரையும் பழுதடைந்த இறைச்சிகளையும் பொது சுகாதார பரிசோதகர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 22.05.2023ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.