அதிசயக் கலைஞனாக திகழ்ந்த பிரபல இலங்கைத் தமிழர் : வாழ்க்கையில் மனைவியாக வந்த 3 பெண்கள்!!

மட்டக்களப்பில்..

இலங்கையின் மட்டக்களப்பில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் பாலுமகேந்திரா. தமிழ் திரையுலகில் இவர் பிரபலமான இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் கொடிகட்டி பறந்து பல சாதனைகளை செய்தார்.

நல்ல படத்தை, ரசிகர்களைக் கவருகிற படத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படி எத்தனையோ படங்களை எத்தனையோ பேர் கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரின் படங்கள்.

இன்றைக்கும் காவியங்களாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்தவர்களில் முக்கியமானவர்தான் பாலுமகேந்திரா. கடந்த 2014ஆம் ஆண்டு இவர் தனது 74வது வயதில் உயிரிழந்தார்.

பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்கள் நிறைந்தது. இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மெளனிகா என மூன்று மனைவிகள் இருந்தனர்.

தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா குறித்து பாலுமகேந்திரா முன்னர் கூறுகையில், எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் 18 வயது.

சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் புராணகாலத்தில் தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல.

கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்தது தான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மெளனிகாவுடனான என் உறவை நான் ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும்.

இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும், என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை என கூறினார்.

நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா திருமணம் செய்து கொண்டாலும் அவரை பற்றி சில இடங்களில் மட்டுமே பேசினார் ஷோபா தனது 17 வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் குறித்த நினைவலைகளை முன்னர் பகிர்ந்த பாலுமகேந்திரா, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார். ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.

நடிகை மெளனிகாவை பாலுமகேந்திரா கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். பாலுமகேந்திராவை விட மெளனிகாவுக்கு 30 வயது குறைவாகும்.

பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று அப்போது சிலர் சண்டை போட்டது பலரும் தெரிந்திருக்கும். கணவர் உடலை காண கதறி அழுத மெளனிகா இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு முன்பு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார்.

மெளனிகா குறித்து பாலுமகேந்திரா கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது என மெளனிகா கூறினாள்.

ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள் என கூறியிருந்தார் பாலுமகேந்திரா.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

ஒரே நேரத்தில் காதலித்த இரண்டு இளைஞர்கள் : அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56).

எலக்ட்ரீசியனான இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் திவ்யா (20). பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லவிருந்தார். இந்நிலையில், மருதங்கோடு இலுப்பப்பவிளையை சேர்ந்த ரஞ்சித் (20) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித் 12ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். திவ்யா, இணையம் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் புரூஸ்(19) என்பவரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஷெர்லின் புரூஸ் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ரஞ்சித் திவ்யாவிற்கு தொந்தரவு கொடுக்கப்பட்டதுடன், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது பெற்றோரிடமும் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஷெர்லின் புரூஸ் திவ்யாவிடம், ரஞ்சித்தை பார்க்க சென்றாயா என்று கேள்வி எழுப்பியதுடன் திட்டவும் செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த திவ்யா தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, காதலன் ஷெர்லின் புரூஸை கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் திவ்யாவிற்கு டார்ச்சர் கொடுத்த ரஞ்சித்தையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

இலங்கையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லொஸ்லியா!!

லொஸ்லியா..

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார்.

அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இதுதவிர்த்து மேலும் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.

அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் லாஸ்லியா, தற்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளார்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

54 வயதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணம் : பெண் யார் தெரியுமா?

எஸ் ஜே சூர்யா..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா.

இவர், சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும், விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி தயாரிப்பாளரை நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா : நடித்த 5 படமும் தோல்வி!!

பிரபுதேவா..

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. 90களில் ஆரம்பித்து அவரது சினிமா பயணத்தில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்தா.

இந்தி, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிப்படங்களுக்கு இவரின் நடன இயக்கத்திற்காக ஏங்கி கிடப்பார்கள். அப்படி இருந்த பிரபுதேவா சமீபத்தில் நடித்த பல படங்கள் படுமோசமான தோல்விகளை கண்டுள்ளது.

தேவி, தேவி 2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்கள் ஓரளவிற்கு வெற்றிக்கண்டது. மெர்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை என கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடி அளவில் சம்பளம் வாங்கி படுதோல்வியை கொடுத்துள்ளார்.

இதனால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கொடூர கணவன் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

சென்னையில்..

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஸ்ரீதர் திருமணம் செய்ததும் தெரியவந்தது.

கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்த கணவரிடம் இது குறித்து வைதீஸ்வரி கேட்டதும் அவரை தாக்கி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தற்போது வைதீஸ்வரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் முகம்.. இரவு முழுவதும் நடந்த போராட்டம் : இறுதியில் நடந்த திருப்பம்!!

ஆற்றில்..

மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மாலை சுமார் 6 மணியளவில், மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பைக் சறுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, பைக்கில் இருந்த சோனம், ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனால், அவரது சகோதரர் பதறிப் போன நிலையில், உடனடியாக சகோதரியை காப்பாற்ற ஆற்றில் விழுந்துள்ளார். ஆனால், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக, வெகு தூரத்திற்கு சோனம் அடித்து செல்லப்பட்டதால், அவரது சகோதரரால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆற்றில் விழுந்து சுமார் 5 கி. மீ தூரத்திற்கு சொன்னான் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவில் இருந்த கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ், ஒரு இரும்பு கம்பியை பிடித்தபடி நின்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் சோனம் நீரில் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், வலுவான நீரோட்டங்கள் இருந்ததன் காரணமாக, உடனடியாக அவர்களால் சோனமை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சில வீரர்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு லைஃப் ஜாக்கெட்டை கொடுத்துள்ளனர். தொடர்ந்து, படகு அருகே அவரை இழுக்க முயன்ற போது, மீண்டும் அவரை நீர் இழுத்து சென்றுள்ளது.

இதன்,பின்னர், மீண்டும் பல கி.மீ தூரத்திற்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்ட சோனம், மரக்கட்டை ஒன்றில் சிக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு சோனம் குறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழு மற்றும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழாய் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசும் சோனம், “பாலம் ஒன்றின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த போது, எனது பலம் குறைய ஆரம்பித்தது.

இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வேறு பெய்தது. ஆனால், எனது 8 வயது மகனின் முகத்தை நான் மனதில் நினைத்துக் கொண்டேன். இதனால்,அவனுக்காக நான் வாழ வேண்டும் என எனக்குள் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்” என சோனம் கூறிஉள்ளார்.

சுமார் 10 மணி நேரத்திற்கு மேல், இரவு முழுவதும் மழை, நீர் என கடுமையான சூழலில், மகனுக்காக வைராக்கியத்துடன் செயல்பட்டு பின்னர் மீட்கப்பட்ட தாயை அனைவரும் வேற லெவலில் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

அக்காவிற்கும் அக்காவின் காதலனுக்கும் எமனாக மாறிய தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மகாராஷ்டிராவில்..

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அ.க்காவையும் அ.வரது கா.தலரையும் கொ.லை செ.ய்.த த.ம்பியின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இ.ளம் பெ.ண் , அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சஞ்சய் (வயது 22) என்ற இளைஞரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஒ.ரு க.ட்டத்தில் இ.வர்களது தி.ருமணம் இ.ரு வீ.ட்டாருக்கும் தெ.ரியவந்துள்ளது. இ.ருவரும் வெ.வ்வேறு ச.மூகத்தைச் சே.ர்ந்தவர்கள் எ.ன்பதால் இ.வ.ர்கள் கா.தலுக்கு எ.தி.ர்.ப்.பு எ.ழுந்துள்ளது. இ.ளம் பெ.ண்ணின் உ.றவினர்கள் ராகேஷை ச.ந்தித்து அ.ந்த பெ.ண்ணிடம் பே.சக்கூடாது எ.ன்.று மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

ஆனாலும் எ.திர்ப்பை பொறுப்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகேஷிம் அந்த இளம்பெண்ணும் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து அந்த பெண்ணின் 17 வயது தம்பியிடம் கூறியுள்ளனர். உடனே பெண்ணின் தம்பியும் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு தனது அக்கா பேசிக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அ.ங்கு செ.ன்றவர் தா.ன் எ.டுத்துவந்திருந்த து.ப்.பா.க்.கி.யா.ல் ராகேஷின் த.லை.யி.ல் சு.ட்.டு.ள்.ளா.ர். இ.தி.ல் ச.ம்பவ இ.டத்திலேயே அ.வ.ர் உ.யி.ரி.ழ.ந்.த நி.லையில், த.ன.து ந.ண்பர்களின் உ.தவியோடு அ.க்காவின் து.ப்.ப.ட்.டா.வா.ல் அ.வ.ரது க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை.செ.ய்.து.ள்.ளா.ர்.

பி.ன்னர் நே.ரடியாக கா.வ.ல்நி.லை.ய.ம் செ.ன்றவர் ந.டந்ததை கூ.றி ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். பி.ன்னர் போ.லி.ஸா.ர் ச.ம்பவ இ.டத்துக்கு வ.ந்து அ.வர்களின் ச.ட.ல.த்.தை ப.ரி.சோ.தனைக்காக ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர்.

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இருவரை போலிஸார் கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர். மேலும் மூவரிடம் இது தொடர்பாக வி.சாரணை ந.டத்தி வருகின்றனர். வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்கா என்றும் பாராமல் தம்பியே இந்த கொ.டூ.ர செ.ய.லை செ.ய்துள்ளது அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

பட்டதாரி இளம் பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம் : சமூகவலைத்தளத்தால் வந்த வினை!!

சென்னையில்..

சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்தவர் அரிதா ராஜேஸ்வரி (25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதை அடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தற்கொலை செய்து கொண்ட அரிதா ராஜேஸ்வரி செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அரிதா ராஜேஷ்வரி சமூக வலை தளம் வாயிலாக மதுமோகன்(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அரிதா ராஜேஷ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிய பின் மது மோகன், அரிதா ராஜேஷ்வரியை தொடர்பு கொள்ளாமலும் பேசுவதை நிறுத்தியும் வந்துள்ளார். மேலும் அரிதா ராஜேஷ்வரியின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அரிதா ராஜேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது மோகனை பொலிசார் கைது செய்தனர், அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

மனைவிக்கு பாலியல் தொல்லை : வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி கூறிய கணவன்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தட்டிக்கேட்ட்ட கணவனை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் விருமன் திரைப்படமானது நான்கு காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு காட்சியில் தம்பதியினர் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தனது கணவரிடம் கூறவே கணவர், இளைஞர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் கணவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் திரையரங்குக்கு வந்த காவல்துறையினரும் அந்த நபரை, கண்மூடித்தனமாக தாக்கும் கும்பலிடம் இருந்து அவரை மீட்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் மர்ம கும்பலிடமிருந்து தனது கணவரை மீட்க நீண்ட நேரமாக போராடி உள்ளார் அந்த பெண். அந்த இளைஞர்கள் அப்பெண்ணையும் கண்மூடி தனமாக தாக்கவே அப்பகுதியிலேயே பெண் மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் அவரை தனது தோளின் மீது தூக்கிக்கொண்டு அங்கே நின்றிருந்த காவல்துறையிடம் நன்றி எனக் கூறிவிட்டு அரசு மருத்துவமனைக்கு கணவர் கொண்டு சென்றது பெரும் வேதனை அளிக்கும் காட்சியாக உள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

திருமணமான மூன்றே மாதத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் மர்மமாக மரணம் : தலைமறைவான கணவன்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், டவன்கேரே மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் (32). இவருக்கும் ரூபா பாய் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கங்காதரின் பெற்றோர் கேட்ட வரதட்சணையை ரூபாவின் குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ரூபாவின் பெற்றோர் அவருக்கு 3 கிராம் நகை குறைவாக போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரூபாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருந்த ரூபா, மூன்று நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்ததாக கூறி சன்னகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்தே ரூபாவின் குடும்பத்திற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, ரூபா உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.

இதனால் ரூபாவின் பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கணவர் கங்காதர் தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கங்காதரை தேடி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : சிசிரிவியில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் ஆண்ணொருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13.08.2022) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முனைத்தீவு பெரிய போரத்தீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 11ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 12 ம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, சிசிரிவி கமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து 22, 21 வயதுடைய இரு இளைஞர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதைக்கு அடிமையாகிய உயிரிழந்தவர் மனைவியுடன் பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு வீதிக்கு அருகில் நிர்வாணமாக குறித்த நபர் கிடந்துள்ளதை பார்த்த இளைஞர்கள் இருவர் அவரை திருத்தும் நோக்கில் இவ்வாறு தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் உயிருக்கு போராடிய விமானிகளை காப்பாற்றிய இலங்கையர்கள்!!

தென் கொரியாவில்..

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தின் போது மூன்று இலங்கையர்கள் விமானியை காப்பாற்றியுள்ளனர். கொரிய விமான படைக்கு சொந்தமான F-4E என்ற போர் விமானம் விபத்துக்குள்ளாகி நெருங்கியுள்ளது.

சியோலில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கில் உள்ள ஜியோங்கோக் துறைமுகத்திற்கு தெற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் விழுந்தது. எனினும் அதில் பயணித்த இரண்டு பரசூட் மூலம் கடலில் குதித்தனர்.

இதன்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட குழுவினர் அவர்களை காப்பாற்றியுள்ளனர். தங்கள் ஜெட் விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடலோரப் பகுதியை நோக்கிப் பாதையை மாற்றிவிட்டு சென்றதாக கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது.

முதியவரை கட்டிப்போட்டு காதலர்கள் செய்த மோசமான செயல்… விரட்டிப் பிடித்த பொதுமக்கள் : நடந்த விபரீதம்!!

கோயம்பத்தூரில்..

முதியவரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியராயப்பன் (வயது 80). இவருக்கு மனைவி, மகன், மகள், மருமகள் இருக்கும் நிலையில், மகனும் மருமகளும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக வெளியே சென்றுள்ளார். இந்த சமயத்தில் பெரியராயப்பன் மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு காதல் ஜோடி, முதியவரிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளனர்.

எனவே முதியவர் உள்ளே தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த இந்த ஜோடியினர், முதியவரின் கைகளை பிடித்து அவரை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டி வீட்டில் இருந்து பீரோ பூட்டை உடைக்க முயன்றனர்.

ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை என்பதால் மற்ற இடங்களில் நகை பணத்தை தேடியுள்ளனர். பிறகு அங்கு ஒரு பையில் இருந்த பணத்தை எடுத்து வெளியே தப்பி செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் எதேர்ச்சியாக வெளியூரில் இருந்து மகனும், மருமகளும் வீட்டிற்கு வர முதியவர் கட்டிப்போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு அவர் கட்டை அவிழ்த்துவிட்ட போது முதியவர் தப்பி செல்லும் ஜோடியை பற்றி தெரிவித்துள்ளார். பின்னர் உடனே அவர்கள் சத்தம் போட, சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தப்ப முயன்ற ஜோடியை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்ததால், இளைஞர் தானாக முன்வந்து சரணடைந்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையில் ஒப்படைத்தனர். அங்கு இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் விருதுநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், அவருடன் வந்த பெண் திருச்சியை சேர்ந்த செண்பகவல்லி என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது.

அதோடு இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத முதியவரை நோட்டம் செய்து அவர்களை கட்டிப்போட்டு பணம் பறித்து வந்துள்ளனர்.

முன்னதாக கோவை, குனியமுத்தூர் பகுதியில் முதியவர் ஒருவரை கட்டிப்போட்டு 20 ஆயிரம் ரூபாய் வரை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இருவரிடம் இருந்தும் இரும்புக் கம்பி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 24 மணி நேரத்தில் இளைஞர் செய்த மிகப்பெரிய சாதனை!!

கனடாவில்..

கனடாவை சேர்ந்த இளைஞர் தனது 23 வயதிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மரங்களை பாதுகாத்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற விழிப்புணர்வை உலக அமைப்புகள் தற்போது வழியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கனடாவின் கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க தொடங்கி தற்போது லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 18-ம் திகதி வெறும் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளார். அண்டோயின் மோசஸ்(Antoine Moses) தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரி பெண்களை குறிவைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிவரும் கணவர் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

சென்னையில்..

ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை குறி வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி (26). இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதிர்ச்சி இதனால் ஆத்திரம் அடைந்த ஶ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு கணவர் வீட்டைவிட்டு சென்று உள்ளார்.

இதன்பின்னர் சில நாட்கள் கழித்து மனைவி கணவர் ஶ்ரீதரின் செல்போனை ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் சில ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதில் கணவர் ஸ்ரீதர் பிரபல இணையதளமான ஷேர் சாட் ஆப் மூலமாக பல கல்லூரி பெண்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது பல பெண்களுடன் தொடர்பு .

மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆடியோக்கள் சிக்கி உள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்பவைத்து நெருக்கமாக பழகியுள்ளார்.

அப்பெண் ஶ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பகீர் புகார் பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கி இருந்துள்ளார்.

மேலும் இந்த ஆப் வாயிலாக கல்லூரி மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அனைத்தும் தெரிந்து கணவரிடம் கேட்ட வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தலைமறைவாகியுள்ளார்.

எனவே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கோரிக்கை இதுகுறித்து வைதீஸ்வரி கூறுகையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணம் நடைபெற்று சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த 15 சவரன் நகைகளை அடகு வைத்து விற்பனை செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.எனவே அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.