பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!!

பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை “இரக்கமற்ற தாக்குதலில்” குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் கூறியுள்ளதாவது,

47 வயதான நிமலராஜா மதியபரணம், செஃப்டனில் உள்ள கடை ஒன்றில் பணி புரிந்த நிலானி நிமலராஜாவை (44) கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நிலானி தனது மகள்களுடன் கடைக்கு மேலே உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.

மதியபரணம், ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கப்படாததால் படு கோபமடைந்தார் என கூறப்படுகின்றது. இது அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி உள்ளது.

கொலை நடந்த ஜூன் 20 அன்று – தாயை இழந்த மகள் தனது “உலகம் நின்றுவிட்டதாக” கூறினார், மேலும் தனது தந்தையால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது எனவும் கூறினார்.

கொலையாளிக்கு குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி, கொலை செய்யப்படவரின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களையும் நான்கு வெட்டுக் காயங்களையும் வைத்திய நிபுணர் அடையாளம் கண்டுள்ளதாகவும், மதியபரணம் “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” செயல்பட்டதாகவும்” கூறினார்.

நீதிபதி இந்தக் கொலையை “மிகவும் கொடூரமானது” என்று விவரித்தார், இது பாதிக்கப்பட்டவரை “உயர்ந்த அளவிலான மன மற்றும் உடல் ரீதியான துன்பத்திற்கு” ஆளாக்கியது எனவும் கூறினார்.

தாக்குதலுக்கு முன்பு, மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அவரது நடத்தை ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. “உங்களை ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கவில்லை,

ஆனால் இதை அறிந்ததும், நீங்கள் கோபமடைந்தீர்கள்,” என்று நீதிபதி கூறினார். “பாதிக்கப்பட்டவர், எல்லா வகையிலும் ஒரு கனிவான மற்றும் முற்றிலும் ஒழுக்கமான பெண், தனது உயிருக்கு பயந்து, உங்களுடன் கடையில் சிக்கிக்கொண்டார்.

“பாதிக்கப்பட்டவர் எவ்வகையிலும் உயிர் பிழைக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய நீங்கள் உறுதியாக இருந்தீர்கள் என்பதை உங்கள் செயல்கள் காட்டுகின்றன.”

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்டோர் அறிக்கையில், மதியபரணத்தின் மகள்களில் ஒருவர், தற்போது 18 வயது, கூறியதாவது , “அம்மாதான் எனக்கு எல்லாமே, நாங்கள் சிறந்த தோழிகள்.

இந்த கொலை நடந்த நாளில், என் அப்பா என் முதுகில் குத்தியதைப் போல உணர்ந்தேன். “நான் அதிர்ச்சியடைந்தேன், வார்த்தைகளை அறிய முடியாமல் தவித்தேன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் உலகம் என்னைச் சுற்றியே நின்றுவிட்டது.

முன்பு சம்பவங்கள் நடந்திருந்தாலும், இது நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அந்த நாள் வரை என் அப்பாவை நேசிப்பதை நான் நிறுத்தவில்லை. “நான் என் அம்மா, அப்பா, என் வீடு மற்றும் என்னையே இழந்தேன்.” அவர் மேலும் தொடர்ந்தார்.

என்னைப் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர வைத்தவர் இப்போது இல்லை. அவரை என்னிடம் இருந்து எடு சென்றவர் என் அப்பா – குறைந்தபட்சம் நான் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்.

அப்பாக்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் நபர்களாக இருக்க வேண்டும், அதை அழிக்க மாட்டார்கள்.” அம்மாவை இழந்தது “எல்லாவற்றையும் மாற்றிவிட்டது” என்று அவர் கூறினார்,

மேலும் “நான் ஆலோசனை, ஆறுதல் மற்றும் ஆதரவுக்காகச் சென்ற நபர் அவர்தான். “அவள் எனக்குப் பள்ளிப் படிப்பை முடிக்கவும், என் எதிர்காலத்தைத் திட்டமிடவும், பாதுகாப்பாக உணரவும் உதவினாள். அவள் இல்லாதது எனக்கு ஒவ்வொரு நாளும் உணர வைக்கும் ஒன்று.

” புதன்கிழமை விசாரணையின் இரண்டாவது நாளில் பொதுவில் கொலை மற்றும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த குற்றத்தை மதியபரணம் ஒப்புக்கொண்டார். தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளத் தடை விதித்த தடை உத்தரவை மீறியதாகவும் அவர் முன்பு ஒப்புக்கொண்டார்.

குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் வரை அவரை விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார் என்று நீதிபதி கம்மிங்ஸ் மதியபரணத்திடம் கூறியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவில் பெரும் சோகம் : 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பொன்முடி சுயந்தன் என்பவராவார்.

வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

7 வயது சிறுமி துஷ்பிரயோகம் : தைப்பொங்கல் தினத்தில் நடந்தேறிய சம்பவம்!!

தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அழைத்துச் சென்று, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு குறித்த நபர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேரமாக சிறுமி வீட்டில் இல்லாத காரணத்தால் பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் குறித்த இடத்திலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதாகவும்,சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தொடர்ந்தும் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்களை சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் நாவலப்பிட்டி காவல் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கான நாவலப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட குறித்த சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் சுமார் 490,000 சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கிக் கிடந்ததால், அட்டைகளை அச்சிடுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாடு செல்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அவசரமாக சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருநாள் சேவையின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 255,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிப்பதற்காக இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இந்த நடைமுறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் இனி எவ்வித தாமதமுமின்றித் தமது அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

வானியல் அதிசயம் : வானில் நெருப்பு வளையம் காட்சி!!

இந்த ஆண்டு வானியல் அதிசயம் ஒன்று இன்று (17.01.2026) நிகழவுள்ளது.

அரிதான வலைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.

விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது. இது வெறும் கிரகணம் அல்ல; இது வானில் ஒரு “நெருப்பு வளையத்தை” உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

நுவரெலியாவில் உறைபனிப் பொழிவு : கவலை வெளியிட்ட மக்கள்!!

இலங்கையில் “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சில இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை இன்று (17.01.2026) அதிகாலை வேளையில் மக்கள் கண்டு கழித்துள்ளனர்.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருட ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்திருப்பதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந்தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் மற்றும் நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலர்களாக பதிவாகிய நிலையில், இன்று 4594.83 ஆக பதிவாகியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் பதிவாகி வருகின்றது.

அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தனக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை!!

கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை.

கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று ட்ரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை. கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்று டிரம்ப் நேற்று(16) தெரிவித்தார்.

கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும்.

வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது.

இந்தநிலையில் எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள்விதிக்கப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளமையானது மேலும் விமர்சனங்களுக்ககுட்பட்டுள்ளது.

நாளை தை அமாவாசை : முன்னோரது ஆசி பெற மறக்காமல் இதெல்லாம் செய்யுங்கள்!!

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி.

அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். அந்த வகையில் நாளை தை அமாவாசை. குறிப்பாக தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது இன்னும் விசேஷமானது.

அதிகாலை 01.20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02.31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம்.

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர்.

முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்.

தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும். காகத்திற்கு உணவு பிதுர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

லொறி – வேன் மோதி விபத்து : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன. லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரி பெற்றுக்கொள்வதில் சிரமம்!!

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை வீதியில் இயக்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய வரி ஆகும். இது வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் போது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

எனினும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமைகளில் மதியத்திற்கு பின்னர் இச்சேவையினை பெற முடியாமால் இருப்பதுடன், வேறு நாட்களில் மதிய உணவுக்குக்காக என ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக மூடப்பட்டிருப்பதுடன்,

சில நாட்களில் தொழிநுட்பக் கோளாறு என வவுனியா பிரதேச செயலகத்திற்கு செல்லுமாறு பொதுமக்களை சிரமத்திற்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம் வாகன வருமான வரி பத்திரத்தினை பெற முடியாமையினால் போக்குவரத்து பொலிஸாரினால் தண்டப்பத்திரம் பெற வேண்டிய நிலமையினையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 7 வருடங்களுக்குப் பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேரூந்து!!

வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா நகரை நோக்கி சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பேருந்து சேவையானது மணித்தியாளத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர், தொழிற்சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை வந்த ஜெர்மனிய சுற்றுலா பயணி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல்!!

களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று காலை 9:30 மணியளவில் ஹோட்டல் உணவகத்தில் அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவரது வயிற்றில் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அளுத்கம பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எஸ். பிரதீப் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது 47 வயதான ஜெர்மன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரத்தக் கறை படிந்த பயணப் பை மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 22 அங்குல நீளமுள்ள கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காயமடைந்த முதியவர் உடனடியாக களுத்துறை நாகோடா போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் நேர்ந்த துயரம் : பெண்ணின் உயிரைப் பறித்த தேங்காய்!!

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் : நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது நிலானி நிமலராஜா, 47 வயது கணவன் நிமலராஜா மூலம் 2025 ஜூன் 20ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாக செய்யப்பட்டுள்ளார்.

நிலானி நிமலராஜா, மூன்று பெண் குழந்தைகளின் தாயாவாக இருந்தார். சம்பந்தப்பட்ட தகவல்களின் படி, நிமலராஜா போதைக்கு அடிமையானவர். தொடர்ச்சியான அடிமை மற்றும் குடும்பத்தில் காணப்பட்ட வன்முறையின் காரணமாக, நிலானி கணவனை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

அத்துடன் மூத்தமகள் மற்றும் நிலானிக்கு இடையில் தலை காட்டக்கூடாது என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதையடுத்து, 2வது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் மற்றும் பிற குடும்பக் கொண்டாட்டங்களில் நிலானி கணவனை அழைக்கவில்லை. இதனால் நிமலராஜாவின் மனத்தில் கடும் வெறி உருவானதாக கூறப்படுகிறது.

குற்றவாளி அஜ்ரா நிமலராஜா, மனைவியை கொலை செய்யும் நோக்கில் பல்வகை கத்திகளையும் பவுங்லிங் கடையில் வாடாகும் நாடாவையும் வாங்கியதாகவும், முகக்கவசம் அணிந்து அடையாளத்தை மறைத்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நிமலராஜா நிலானி வேலை செய்த கடைக்கு சென்று, வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் நிலானியின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியை 18 முறை குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் கத்தியின் நுணி பாகங்கள் வளைந்து நெளிந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நிமலராஜா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.

குற்றவாளி தனது குற்றத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த வாரமும் நீதிமன்றில் நிமலராஜா தொடர்பான வழக்கு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடுரோட்டில் வைத்து குத்தி கொல்லப்பட்ட பெண் : காதலன் வெறிச்செயல் !!

ஒடிசா மாநிலம், சுந்தர்கட் பகுதியை சேர்ந்தவர் ஷிகா சப்னா. இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு பெற்றோர் கடந்த (ஜன 12) ஆம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு தேவையான சில அழகு சாதன பொருட்களை வாங்க ஷிகா சப்னா இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றிருக்கிறார். மீண்டும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் பயந்த பெற்றோர் மற்றும் உறவினர் ஷிகா சப்னாவை தேடி வந்த நிலையில் சப்னாவின் பெற்றோருக்கு போன் செய்த காவல்துறையினர் உங்கள் மகள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசார் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ஷிகா சப்னா கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து சப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சப்னாவின் பெற்றோர்கள் அள்ளித்தா புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கார்கட் பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் “நான் தான் ஷிகா சப்னாவை கொலை செய்தேன்” என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த சப்னா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் ஒரு கல்லூரியில் படித்த நிலையில் முகேஷ் சப்னாவை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால் சப்னா முகேஷின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முகேஷ் தொடர்ந்து அவரை தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிவு செய்த பிறகு சப்னாவை சந்தித்த முகேஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது சப்னா மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த முகேஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து முகேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். காதலிக்க பெண்ணை நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.