பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!
மணமகன் தேவை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் அமில ஆரியசேன உத்திரவிட்டார்.
மணமகன் தேவை...
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் : ஐ.நா பொதுச் சபை அங்கீகாரம்!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய நியமனத்தை பொதுசபை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக, ஜோர்தான் இளவரசர் சாயிட் அல் ஹுசைன் நியமிக்கப்படவுள்ளார். நேற்றையதினம் ஒன்று...
கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயம்!!
கிளிநொச்சி மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
விநாயகபுரம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்து இன்று அதிகாலை...
வௌ்ளவத்தையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
கொழும்பு, வௌ்ளவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே வீட்டில் வசித்த 70 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம்...
யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு வாள்வெட்டு : இளைஞன் பலி : பெருமளவு படையினர் குவிப்பு!!
யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், கோண்டாவில், உரும்பிராய் பகுதிகளில் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் நடமாட்டம் முழுமையாக தடுக்கப்பட்டிருக்கின்றது....
அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பது குறித்து வெட்கப்படுகிறேன் : அரசாங்கத்தில் இருப்பதா? விலகுவதா? இன்று இறுதி முடிவு : ரவூப்...
இந்நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அளுத்கம, பேருவல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வெட்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தனது மக்களின் குறைந்த பட்ச பாதுகாப்பை...
அளுத்கம, பேருவளை சம்பவங்களுக்கு அமெரிக்க தூதரகம் கண்டனம்!!
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் நேற்று முதல் பரவிய வன்முறைகளை அமெரிக்க தூதரகம் கண்டிக்கிறது.
சட்ட ஒழுங்கை பேணி மக்களின் உயிர்களையும், வழிபாட்டு ஸ்தலங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவசரமாக கேட்டுக் கொள்கிறோம்.
தாக்குதல்...
3 வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவை தாக்கி பொலிஸில் ஒப்படைத்த தாய்!!
மூன்று வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்குவை குழந்தையின் தாய் கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் எகலியகொட என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கைது...
யாழ். கைதடியில் கலைத்துக் கலைத்து வாள்வெட்டு : இருவர் படுகாயம்!!
கைதடிச் சந்தியில் இன்றிரவு 8 மணியளவில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியது.
மூவரில் ஒருவர் ஓடித் தப்பினார். மற்றைய இருவுர்...
போலி நாணயத்தாள்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!!
போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அலுத்கம மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. 5000 ரூபா போலி நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக...
தெஹிவளையில் மருந்தகம் தீக்கிரை!!
தெஹிவளை சந்திக்கு அருகாமையில் ஸ்டேஷன் வீதியில் அமைந்துள்ள ஹார்கோட்ஸ் எனப்படும் வியாபார நிலையம் மீதும் தீவைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் விரைந்து செயற்பட்டமையால், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள்...
சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முடியாது : பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்!!
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கமவில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில்...
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து விடுதலையான இலங்கையரின் நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நான் பட்ட துன்பத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் சோர்வடைந்துள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு வேளையே உணவு தரப்பட்டது. காலை ஒன்பது பத்து மணியளவில் ரொட்டியும் சீனியும், மாலை ஆறு...
போக்கோ ஹரொம் தீவிரவாதிகளை ஒடுக்க இலங்கை இராணுவத்தின் உத்தி!!
இலங்கையில் கையாளப்பட்ட இராணுவ வழிமுறைகள் நைஜீரியாவுக்குப் பொருந்தாது என்று பாதுகாப்பு தொடர்பான நைஜீரியப் பகுப்பாய்வாளர் டாக்டர் பாவா அப்துல்லாஹி வாஸி கூறினார்.
நைஜீரியா பெரிய நாடு. பல ஆபிரிக்க நாடுகளை விட 10, 20...
யாழ் சுதுமலை கொலையுடன் தொடர்புடைய ஐவர் கைது!!
யாழ். சுதுமலை பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று...
வடக்கில் பார்த்தீனியம் செடிகளை முற்றாக அழிக்க நடவடிக்கை!!
இலங்கையின் வடக்கே பெருமளவில் பரவியுள்ள பார்த்தீனியம் என்ற களைச் செடிகளை அழித்தொழிப்பதற்காக வடமாகாண விவசாய அமைச்சு செயற்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பார்த்தீனியம் செடியைப் பிடுங்கி அழிப்பதில்...
















