டுபாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் : பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!!

‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

பெரிய அளவிலான ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள “பஸ் லலித்”, துப்பாக்கிச் சூடு மற்றும் பலரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய உயிரிழந்த இரண்டு குற்றவாளிகளான சமயன் மற்றும் உரு ஜூவா ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஹங்வெல்லவில் தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2023 செப்டம்பர் 30 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும்,

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் மற்றொரு தொழிலதிபரைக் கொலை செய்ததாகவும், 2024 ஆம் ஆண்டு வஜிர நிஷாந்த மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரோஷனின் சகோதரரை கொலை செய்ததாகவும்,

2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மற்றும் பனா மந்திரி ஆகியோரை சுட்டுக் கொன்றதாகவும்,

2025 ஜூலை 6 ஆம் திகதி கொழும்பு இரவு விடுதியில் கோட்டஹெர போத்த மற்றும் தெமட்டகொட ருவானை கொலை செய்ய முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது 15 கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹங்வெல்ல, மீகொட மற்றும் கொஸ்கம பகுதிகளில் உள்ள பல தொழிலதிபர்கள் “பஸ் லலித்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக சமீபத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், பஸ் லலித் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஹங்வெல்ல உட்பட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை காண முடிந்துள்ளது. சந்தேகநபர் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண் : புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!!

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிவரலாம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிக்கும் பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் இன்று நாடு கடத்தப்பட உள்ளதுடன்,செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்தேகநபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஷாரா மற்றும் அந்த பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்றைய இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நேபாளத்தில் காத்மாண்டு பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டில் அதிக வாடகை கொடுத்து மறைந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்பின்னர், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபோது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருப்பது தெரியவந்தது.

சட்ட புத்தகத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட பெண் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டார்.

குற்றத்தைச்செய்த பிறகு, இஷாரா செவ்வந்தி மித்தெனியா பகுதியிலிருந்து ஜே.கே. பாய் எனும் நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை கனேமுல்லே சஞ்சீவாவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிந்துள்ளது.

இதன்போது கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தகொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது. கெஹல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சந்தேகநபர்களிடம் விசாரித்தபோது, ​​இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளமை கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கைதான ‘பஸ் லலித்’ : வெளியான பின்னணி!!

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பல ஆண்டுகளாக டுபாயில் தலைமறைவாகியிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘பஸ் லலித்’ நேற்றையதினம்(14.10.2025) கைது செய்யப்பட்டிருந்தார்.

டுபாயில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டுபாய் பொலிஸார் அவர்களை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட முன்னர், அவர் தனது சக ஊழியர்களுக்கு விருந்தொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.

பஸ் லலித்தின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், சில மாதங்களுக்கு முன்பு டுபாய் சென்று அவருடன் தங்கியிருந்துள்ளனர்.

இதேவேளை, பஸ் லலித், அவிசாவளை, ஹன்வெல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளுக்குத் தலைமை தாங்கியதாகவும், தொழிலதிபர்களை மிரட்டி இலட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வரலாறு காணாத உச்சம் தொடும் தங்கத்தின் விலை!!

வரலாறு காணாதளவு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (15.10.2025) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3,42,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளை, நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (14) 3,65,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தி விலை, இன்று (15) 3,70,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்!!

மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்தநிலையில், குறித்த நபர் நேற்று முன்தினம் (13.10) இந்தியா- தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று (14.10) குறித்த நபர் பயணித்த படகு தமிழ்நாடு மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் இரண்டு தொழிலாளர்களின் படகு மற்றும் இயந்திரத்தை திருடி சென்றதால் இரண்டு குடும்பத்தினர் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!!

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போதும், வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிரடி படையின் நடவடிக்கையின் காரணமாக நேற்றையதினம் நேபாளத்தில் வைத்து இஷாரா கைது செய்யப்பட்ட போது, இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா நேற்று முன்தினம் இரவு நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளத்தில் நடத்திய மூன்று நாள் சோதனையில் இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டது.

நேபாள பொலிஸார் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் உதவியுடன் சென்ற ரொஹான் ஒலுகல, நேற்று முன்தினம் இரவு இந்த குற்றவாளிகளை கைது செய்தார்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வுத் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் முழு மேற்பார்வையின் கீழ்,

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல மற்றும் பொலிஸ் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோரால் கடந்த சனிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இஷாரா செவ்வந்தியின் மறைவிடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு ரொஹான் ஒலுகல தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் (14) ஒப்பிடும்போது இன்றைய தினம் (15) 5,000 ரூபாவினால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாவாக உயர்ந்துள்ளது. நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக விற்னபனை நெய்யப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (14) 365,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தி விலை, இன்று (15) 370,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மோசடி, முறைகேடு மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 3 சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள், தெஹிதெனிய, முருத்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தளத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை விற்பனை செய்வதற்காக நபர் ஒருவர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மோசடியாளர்கள் விற்பனையாளருக்கு முன்பணம் வழங்குவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட OTP எண்ணைப் பெற்று, இந்தப் பணத்தை விற்பனையாளரிடம் இருந்து மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேல் மாகாண பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்க தயங்கும் மக்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

இலங்கை சுங்கத்துறையால் 1,000க்கும் மேற்பட்ட (BYD) மின்சார வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் சந்தையில் நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே மின்சார வாகனங்களில் முதலீடு செய்துள்ள நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீலக பிடகம்போல தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்த தகலை வெளியிட்டுள்ளார்.

மின்சார வாகனங்களின் இறக்குமதி செயல்முறையை சீரமைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உற்பத்தியாளர் சான்றிதழ்களை சுங்கத்துறை ஏற்க மறுத்ததாலும், மோட்டார் சக்தியை சரிபார்க்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வசதிகள் இல்லாததாலும் நுகர்வோர் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

“நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆய்வகங்களால் மட்டுமே மோட்டார் சக்தியை சரிபார்க்க முடியும். அத்தகைய வசதிகள் இல்லாமல் நடத்தப்படும் சோதனை அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தாது, நிலைமையை மேலும் மோசமாக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் மோட்டார் சக்தியை உறுதிப்படுத்த சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து உடனடியாக சோதனைகளைப் பெறுமாறும் மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கம் இலங்கை சுங்கத்துறையை வலியுறுத்தியுள்ளது.

2026 இல் பொருளாதாரம் ஆட்டம் காணும், 3ஆம் உலகப் போர் மூழும் : அதிர்ச்சியை கிளப்பும் பாபா வாங்கா!!

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தகப் போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026 இல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

எனினும் , பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. பாபா வாங்கா கூறிய பல விடயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப் பொருளாகி வருகிறது.

பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது.

சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். இதன் உச்சமாக 2026 இல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். இந்நிலையில் பாபா வாங்கா இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என பலர் அஞ்சுகின்றனர்.

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை : நால்வர் கைது!!

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைதாகையுள்ளனர்.

சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிதெனிய மற்றும் முருதலாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மர்ம காய்ச்சலால் சிறுமி பரிதாபமாக பலி!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே வசிக்கும் சக்திவேல்-சரண்யா தம்பதியரின் இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், ஆனால் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், பெற்றோர் கார்த்திகாவை சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லும் போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மர்மக் காய்ச்சல் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், காய்ச்சலின் காரணத்தை உடனடியாக கண்டறிந்து, தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில் தெரிவித்ததுபோல், குழந்தை வசித்த பகுதியில் தொற்று பரவலுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

தற்போதைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் குழந்தை இறப்புக்கான காரணத்தை விசாரணை செய்து தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம் : புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!!

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அமைத்து மக்களும் இலங்கை நாட்டின் குடிகள் என இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

வழமையாக ஆட்சிக்கு வருவோர் வடக்கு , கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினாலும் அது செயலில் காட்டுவது மிக குறைவே.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார, வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லாது மலைய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதுடன், ஆடம்பரமில்லாது நேரடியாக சென்று மக்களை சந்திக்கின்றார்.

இறுதிபோரில் உருக்குலைத்த முல்லைத்தீவு தற்போது ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் கடற்கரை மிகவும் அழகாக மாறியுள்ளது. மக்களும் மகிழ்ச்சியுடன் முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று தமது பொழுகளை போக்கி வருகின்றனர்.

யாழில். மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில், பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து , வயல் வெளிக்குள் பாய்ந்து விபத்துக்களாகியமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்!!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12.10.2025) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் : யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!!

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் மாணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார்.

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்றது. இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.